முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை,


முத்துப்பேட்டை, 26/02/2015: முத்துப்பேட்டை ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று மாலை ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய ஆணையர்கள் சாந்தி, வெங்கடேசன் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். அப்பொழுது முதலில் பேசிய தி.மு.க கவுன்சிலர் ராமமூர்த்தி: கடந்த 23-ம் தேதி அரசியல் கால்புணர்ச்சியின் காரணமாக தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் போலீசார் சோதணை போட்டது கண்டணத்துக்குரியது என்றார். அடுத்ததாக தி.மு.க கவுன்சிலர் கண்ணன் பேசுகையில்: எந்த வித குற்றச்சாட்டும் கூறப்படாத பெண் கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் அதிரடியாக போலிசார் உள்ளே புகுந்து சோதணை போட்டது எங்களை அதிர்ச்சியில் ஆக்கி உள்ளது. 
சாதாரண பெண் கவுன்சிலருக்கே இந்த கதி என்றால் எங்களையெல்லாம் இவர்கள் என்ன செய்வார்கள்? இவர்களுக்கு சோதணை போட யார் அதிகாரம் கொடுத்தது? யார் தைரியம் கொடுத்தது? இதற்கு காவல் துறையின் உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிய கவுன்சிலர் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இதற்கு இந்த கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசி டேபிளைத் தட்டி கடும் ரகளையில் ஈடுப்பட்டார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர் ஜெகன் பேசுகையில்: இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி.யிடம் நாமெல்லாம் ஒன்று திரண்டு புகார் மனு அளிக்க வேண்டும் என்றார். அதே போல் ஒன்றிய துணைத் தலைவர் தெட்சினா மூர்த்தி, இ.கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சாமிநாதன், காங்கிரஸ் கவுன்சிலர் புனிதா உட்பட அனைத்து கவுன்சிலர்களும் பெண் கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் போலீசார் சோதணை போட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பேசி ரகளையில் ஈடுப்பட்டதால் முத்துப்பேட்டையில் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)