முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை மக்களும், மார்கத்தின் ஈடுபாடுகளும்?



முத்துப்பேட்டை, நவம்பர் 11 : முத்துப்பேட்டையில் ஒரு காலம் இருந்தது இங்கு முழுமையான மதரச இல்லாவிட்டாலும் கூட ஊரில் உள்ள பெரும்பாலான ஆண்களும், பெண்களும் இமாம்களுக்கு சமமாக மார்கத்தை விளங்கி குர்ஆனைத் தஜ்வீத் முறையில் ஓதி இமாமத் செய்கின்ற அளவிற்கு முத்துப்பேட்டை மக்கள் இருந்து வந்தார்கள். மேலும் பள்ளி வாசல்களிலேயே அதிக காலங்கள் தங்குபவர்களாகவும், அதிக தொடர்புடையவர்களாகவும் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றோ அந்த அளவிற்கு மார்கத்தை விளங்கியவர்களையும் அதிகமாக காணுவது என்பது வெறும் கேள்விக்குறியாகத்தான் தற்போது இருந்து வருகிறது. அதே சமயம் மார்க்கம் என்ற பெயரில் பல்வேறுப் பிரச்சனைகளை தினித்து வருகின்றார்கள். குறிப்பாக சொல்லபோனால் ஊரின் ஒற்றுமையை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் பள்ளியின் தொடர்பற்றவர்கலாகவும், மது, சூது, விபச்சாரம் ஆகியவைகளுக்கு அடிமைகளாகவும் இருந்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் குர்ஆனை அரைகுறையாக ஓதி விளங்கியவர்கள் பள்ளிக்கிக்கூட தொழ வராத அவள நிலையை காண முடிகிறது. நம் ஊரில் உள்ள பள்ளிகள் எல்லாம் அதிக நேரம் பூட்டப் பட்டும் (தொழுகை நேரங்கள் தவிர்த்து), பள்ளியில் உள்ள குர் ஆன்களெல்லாம் புளிதியடைந்தும் காணப்படுகின்றன. கடந்த ரமலான் மாதத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட கடமைபட்டுள்ளேன். அவை ஒரு பள்ளியில் ஒரு நாள் கூட ஒருவரும் குர்ஆனை எடுத்து ஓதவில்லை, அதன் காரணமாக குர்ஆன் அனைத்தும் உள்ளே உள்ள அறைகளில் வைக்கபட்டிருக்கிறது. இன்னொரோ பள்ளியில் தொழுவதற்கு இமாமைத் தவிர்த்து ஒரு ஆளை பார்த்தல் கூட அது ஒரு பெரிய விசயமாகத்தான் நமக்குத் தெருகிறது. ஏன் இந்த நிலை? மறுமையின் பயம் எங்கே போனது? அல்லாஹ்வின் அச்சம் எங்கே போனது? அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்கள் எங்கே போனார்கள்? அல்லாஹ் வின் பள்ளிகள் சபிக்க ஆரபித்து விட்டால் நம் மக்களில் நிலைமை என்னவாகும்? மறுமையில் நம்மவர்களின் நிலைமை என்னவாகும்?
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்:

1) முதலில் ஒவ்வொரு முஹல்லாவிலும் இஸ்லாமிய ஆரம்ப பாடசாலைகள் (மதரசாக்கள்) முழுமையாக ஆரம்பிக்கப் படவேண்டும் அதில் நம் குழந்தைகள் பங்கு பெற்று பயனடைய வேண்டும்.

2) ஒவ்வொரு மதரசாக்களிலும் நமது குழந்தைகளுக்கு குர் ஆனை தஜ்வீத் முறைப்படி முறையாக கற்றுகொடுக்க வேண்டும்.

3) குர் ஆனை முழுமையாக ஓதத்தெரியாத நமதூர் முதியவர்களுக்கும் அந்த அந்த முஹல்லாவில் மதரசாக்களை உருவாக்க வேண்டும்.

4) மேலும் எந்த ஒரு நல்ல விசயத்தையும் நம்மோடு நிறுத்திக்கொள்ளாமல், மற்ற மக்களுக்கும் நபி (ஸல் ) அவர்களின் வலியில் அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும், மேலும் நன்மையின் பக்கம் மக்களுடைய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

சிந்திங்கள் நாம் அனைவரும் சொர்கத்திற்கு சொந்த காரவர்கலாக மாறலாம் நீங்கள் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ஆசிரியர்.சாலிஹ் முக்தார். (முத்துப்பேட்டை) ரிப்போர்ட்டர் இல்யாஸ்.

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்த நிலை கண்டிப்பாக மாறும்..
    இன்ஷா அல்லாஹ்.......

    ReplyDelete
  2. இந்த செயல்கள் நிறைவேர இறைவனிடம் துவா செய்யவும்

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)