முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பிற்ப்படுத்தப்பட்ட மாணவர்களும், எதிர்கொள்ளும் சவால்களும் ஓர் பார்வை:


முத்துப்பேட்டை, ஜனவரி 05 : ஒரு நாட்டின் மிகப்பெரிய சக்தி என்றால் அது மாணவ சக்தி என்பதை அனைவரும் அறிந்ததே! நாட்டின் அரசியல் சூழ்நிலைகளில் மாற்றங்களை கொண்டு வரும் அளவிற்கு திறமை கொண்ட மாணவர்கள் இந்தியாவில் வாழ்வது மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்:
இந்தியாவில் நடக்கும் தற்போதைய சூழ்நிலைகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நமது நாடு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுதும் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர் கொடுமைப்படுத்துவது நிறுத்தப்படவில்லை. அரசியல் தந்திரங்கள், அடக்கு முறைகள், ஒடுக்கு முறைகள், ஊழல் போன்ற சாதாரணமான அரசியலுக்கு நடுவே நேர்மையையும், நீதியையும், சுதந்திரத்தையும், அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழும் சிந்தனை எழுச்சியே மாணவர்களின் இயல்பான குணம் ஆகும். உலகின் எந்த ஒரு நாட்டின் வரலாற்று நெடிகிலும் மாணவர்களின் புரட்சி இன்று வரலாற்றை எழுதி விட முடியாது. இப்படிப்பட்ட இயல்பான குணங்களை கொண்ட மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்துகிற வகையில் சங்பரிவார இயக்கங்கள் உயர் ஜாதி மாணவர்களிடம் மதவாத தீவிர சக்திகள் உணர்வை ஏற்படுத்தி, பிற்படுத்தப்பட்ட தலித் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக தூண்டி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் இந்திய ஆட்சியிலும், அதிகார வர்கத்திலும் முழுவதுமாக மதவாத தீவிர சக்திகள் அமர்ந்து கொண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மீது தாக்குதல்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் கல்வியிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மதவாத தீவிர சக்திகளின் நோக்கமே பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வளர்சியடையக்கூடது என்பது தான் இவர்களின் நோக்கம். இவ்வாறே பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை பெரிதும் அவல நிலையாக உள்ளது.
எதிர்கொள்ளும் சவால்கள்:
ஆகா இன்றைய உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல்,தனியார்மயமாக்கள் என்று இந்தியா தனது வணிக தொடர்பை விரிவு படுத்தி உலக அளவில் போட்டி போடும் நிலையில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டிய அரசும், அதிகாரிகளுமே சிறுபான்மை இன மாணவர்களுக்கு துரோகம் செய்யும் போது அதை எதிர்கொள்வதே மாணவர்களுக்கு ஓர் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
நாம் என்ன செய்ய வேண்டும்?:
இந்த நாட்டில் அரசியல் வாதிகளை விடவும், ஆட்சியாலர்களைவிடவும் பொறுப்புள்ள ஓர் சமூகம் என்றால் அது மாணவச் சமூகம்தான். ஆட்சியாளர்களாலும், அதிகார வர்காத்தாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் நாட்டின் கொள்கைகளும், சட்டங்களும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவும் பாமர மக்களுக்கு விரோத கொள்கையாகவும் இருந்து வருகின்றது. மாணவ சமூகமே! அநீதிகளையும், அடக்குமுறைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையை கலைத்து விட்டு இந்த இந்திய சமூகம் அமைதியுடனும், சுதந்திரத்துடனும், நீதிடனும் வாழ வேண்டுமாயின் நாம் களத்தில் இறங்க வேண்டும். மதவாத தீவிர சக்திகள் சூழ்ந்துள்ள இந்திய ஆச்சியிலும், அதிகாரத்திலும் நாம் அமர வேண்டும். இந்திய சுதந்திர போராட்ட காலத்திலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துமையாமை இயக்கம் நடத்தி போராட்டம் செய்த வரலாற்றிலே அதிக பங்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உண்டு.ஆம் ஆகையால் மாணவர்களே நாம் மீண்டும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்தும் காலம் நெருங்கி விட்டது மதவாத தீவிர சக்திகளின் கோரப்பிடியிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டும். நாம் அதற்கு உறுதியுடன் களமிறங்க ஒருங்கிணைய வேண்டும்.
முடிவுரை:
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மீதான இனவெறி தாக்குதல்களை கட்டுப்படுத்த வேண்டிய அரசியல் வாதிகள் லஞ்சம், ஊழல் என உல்லாச வாழ்க்கையில் எதிர்கால இந்தியாவை சிறிது சிறிதாக தொலைத்து வருகின்றனர். இந்த அவலத்தை மாற்றி எதிர்கால இந்தியாவை அபாயத்திலிருந்து காப்பாற்றும் கடமை இன்றைய மாணவர்களுக்குத்தான் உள்ளது. எனவே நாளைய தலைவர்களாகிய நாம் தேசத்திற்கு வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராகுவோம். பிற்படுத்தப்பட்ட மாணவ சமூகமே ஒன்றிணைவோம் சக்தி பெறுவோம்...
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

A .முஹம்மது தமீம் அன்சாரி
மாணவன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
முத்துப்பேட்டை.

1 comments:

  1. அன்பார்ந்த மாணவர்களே தங்களிடம் ஒழிந்து கிடக்கும் இது போன்ற கட்டுரை,கவிதைகள் மற்றும் செய்திகள் ஆகியவைகளை நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். public.mttexpress@gmail.com

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)