முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை விரைவில்! அமைச்சர் பழனிமாணிக்கம் பேட்டி


தஞ்சாவூர், மார்ச் 17 : காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதையை மாற்றும் பணிகள் இந்த மாதத்துக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கபடுவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை மாற்றப்பட உள்ளது. இதன் நீளம் 149 .42 கீ.மீ, ஆகும். இதே போல் திருவாரூர் அகஸ்தியப்பள்ளி இடையே உள்ள 36 .80 கீ.மீ தொலைவு மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற திட்டம் உள்ளது. இதன் மொத்த மதிப்பீடு 506 .76 கோடி. இந்த இருவழித் தடங்களில் 30 பெரிய பாலங்களும், 542 சிறு பாலங்களும் உள்ளன. இப்பணிகள் தொடங்க 12 தேதி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணிகள் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன. அதில் முதல் கட்ட மாக 73 கீ.மீ. தொலைவுள்ள காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதைப்பணியை 2014 செப்டம்பர் மாதத்திற்குள்ளும், அடுத்த கட்டமாக 49 கீ.மீ. தொலைவுள்ள பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அகல அகல ரயில் பாதைப்பணியை 2016 மார்ச் மாதத்துக்குள்ளும், 26 கீ.மீ. தொலைவுள்ள திருத்துறைப்பூண்டி - திருவாரூர் அகல ரயில் பாதைப்பணியை 2015 செப்டம்பர் மாதத்திற்க்குளும், ஆகிய அனைத்து பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
source from: www.mttexpress.com
நன்றி

தினமணி நாளிதழ்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)