.jpg)
முத்துப்பேட்டை, செப்டம்பர் 28 : முத்துப்பேட்டையில் சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான இன கலவரத்தால் பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பொது மக்கள் சுமார் 4 லட்சம் பேர் உடைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை அறிந்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிர்வாகிகள் தீவிரமாக முத்துப்பேட்டை பகுதிகளில் ஆடைகளை சேகரித்தது. இதில் சிறுவர்கள், மற்றும் பெரியவர்கள் அனைவரும் தங்களுடைய உடைகளை குத்பா பள்ளி வாசலில் கொண்டு வந்து குவித்தனர். இதில் பல நாட்களாக இரவு பகல் பாராமல் தரம் பிரிக்கப்பட்டு அட்டைப்பெட்டிகளில் கட்டப்பட்டன. கட்டப்பட்ட அந்த அனைத்து பெட்டிகளையும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிர்வாகத்தினர் சென்னை மக்கா மஸ்ஜிதில் கொண்டு சேர்த்தனர். மேலும் வசூல் செய்யப்பட அனைத்து துணிகளும் வருகிற செவ்வாகிழமை அன்று மூன்று கண்டைனர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த நிர்வாகம் தெரிவித்தது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
0 comments:
Post a Comment