முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அரசு புதிய மருத்துவமனை திறப்பு விழாவும், தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் வருகையும்



முத்துப்பேட்டை ஜூலை 01: முத்துப்பேட்டையில் அரசு மேம்படுத்தப்பட்ட புதிய மருத்தவ மனை திறப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது . மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறன் தலைமை வகித்தார் .மாவட்ட துணை இயக்குனர் பரனிதரன் வரவேற்று பேசினார். மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் தொகுப்புரை ஆற்றினார் . நிகழ்ச்சியில் புதிய மருத்துவ மனை கட்டிடத்தை தமிழக உணவுதுறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து பேசுகையில். இந்த மருத்துவமனை 62 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.

இன்னும் 40 லட்சத்தில் கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் 12 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பயன் பெற்று இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த மாவட்டத்தை போல் பயன் பெற்றதில்லை. நான் சிறு வயதாக இருந்த போது இந்த மருத்துவ மனைக்கு எனது தாயின் கையை பிடித்துக்கொண்டு வந்து வைத்தியம் செய்திருக்கிறேன்.
இப்போ நமது தாய் அதே மருத்துவமனையை எனது கையால் திறந்து வைக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதான் முதல்வரின் சாதாரண நபரை கூட முன்னுரிமை படுத்தும் பெருந்தன்மை என்றார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் , ஒன்றிய குழு தலைவர் நடராஜன் , துணைத் தலைவர் தெட்சினா மூர்த்தி. பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் சண்முகம், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி  அம்பிகாபதி, மாவட்ட கவுன்சிலர் முருகையன், பேரூராட்சி துணை தலைவர் அப்துல் வகாப், ஒன்றிய கவுன்சிலர் ஜகன், நகர அவைத் தலைவர் கோவிந்தராஜ்,
வீட்டு வசதி வாரிய தலைவர் மைநூர்தீன் , துணை தலைவர் முத்து ராமலிங்கம் ,இயக்குனர்கள் குறிஞ்சி சங்கர், கரிகாலன்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகாபதி ,மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன் துணை தலைவர் கோவி பிரபு , நில வள வங்கி துணை தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
படம் , செய்தி : முத்துப்பேட்டையில் புதிய மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் கண்ணாடி அணிவித்தார்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை   .

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)