அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஹாஜா ஷரிஃப். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்படும் இவரை காணாதவர்கள் இல்லை என சொல்லுமளவுக்கு அதிரையருக்கு மிகவும் பரிச்சையமானவர். சற்று மனநிலை பாதிப்படைந்தவர்.
இன்று இரவு பழஞ்செட்டி தெரு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். வலியால் துடித்துகொண்டிருந்தவரை அருகில் நின்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். தாக்கப்பட்டதில் கை எலும்பு முறிந்ததால் தற்போது அதிரை அரசு மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை எடுத்துவருகிறார். தகவலறிந்த நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்துவருகின்றனர். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இன்று இரவு பழஞ்செட்டி தெரு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். வலியால் துடித்துகொண்டிருந்தவரை அருகில் நின்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். தாக்கப்பட்டதில் கை எலும்பு முறிந்ததால் தற்போது அதிரை அரசு மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை எடுத்துவருகிறார். தகவலறிந்த நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்துவருகின்றனர். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
0 comments:
Post a Comment