முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணையதள ஆசிரியர் சந்திப்பு !!




ஆந்திரா, டிசம்பர் 04:  ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி மு க தலைவர் கலைஞர் அவர்களையும்  சந்திப்பதற்காக சென்னை வந்தார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள சகோதரர் இல்லத்தில் தங்கி இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர்  சகோ ஜே .ஷேக்பரீத் நேரில் சந்தித்தார் .

பல்வேறு பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுமார் 5 நிமிடங்கள் வரை பொறுமையாக நமது ஆசிரியரிடம் ஜெகன் மோகன் பேசினார். அப்போது பேசிய நமது ஆசிரியர், ஒரிங்கினைந்த ஆந்திராவை கட்டிக்காக்க நினைக்கும் நீங்கள் மதவாத சக்திகளான பாஜக வுடன் கைகோர்க்க கூடாது என்றும், தெலுங்கானா விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் கூறினார். 

உங்களை  நரேந்திர மோடி சந்தித்ததாக அறிந்தோம் என்றும் மோடி நாட்டின் பயங்கரவாத முகம் என்றும் கூறினார். சிரித்துக்கொண்டே உங்கள் பெயர் என்ன என்று கேட்ட ஜெகன் ஷேக் என்று பதில் கூறியவுடன், தோளில் தட்டிகொடுத்த படி உங்கள் எண்ணம் நிறைவேறும் என்று கூறினார் .




செய்தி :கீழக்கரை :ஹசன் 

புதுக்கல்லூரி மாணவர் 

அதிகமானோர் WHATS APP ஐ விரும்புவது ஏன்?

whatsapp

உலகம், டிசம்பர் 04: இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக  Whatsapp மற்றும் Wechat போன்ற வசதிகளை  விரும்புகிறார்கள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது.
ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும் அல்லாமல் இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பனதாகவு ம் உள்ளது.
பேஸ்புக்கில் யார் வேண்டுமென்றாலும் பொய்யான ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் மற்றவர்களை ஏமாற்ற முடியும் ஆனால் Whatsapp மற்றும் Wechat ல் அவ்வாறு செய்ய இயலாது.
இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat பயன்படுத்துவதற் கான 5 காரணங்களைக் கூறுகிறார்கள் அது என்னவென்று பார்ப்போமா..!
1) இந்த Whatsapp மற்றும் Wechat-ஐ பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் உண்மையான நண்பர்கள் அதில் இருப்பார்கள்.
பேஸ்புக்கில் 1000 நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது ஆனால் Whatsapp மற்றும் Wechatல் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது.குருப் என்கிற அந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி நமக்கு நெருக்கமான நண்பர்களை சேர்த்து எப்பொழுது வேண்டுமானலும் தொடர்புக்கொள்ளலாம்.
2) பொய்யான நண்பர்களிடம் இருந்து பாதுகாக்கிறது Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் ஒரு நம்பகத்தன்மையை அளிக்கிறது. இதில் பொய்யான நண்பர்கள் அமைய வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் அனைத்து நண்பர்களின் தொடர்பு எண்கள் நமது மொபைலில் இருப்பாதால் இது பாதுகாப்பானதாக உள்ளது.
3) Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிக விரைவாக செயல்படுகின்றன. பேஸ்புக்கில் செய்தியை அனுப்பிய பிறகு அது நண்பர்களை சென்று அடைந்ததா இல்லையா என்பது நமக்கு தெரியாது.ஆனால் Whatsapp மற்றும் Wechatல் மிக விரைவாகசெய்திகள் பரிமாறிக்கொள்ளப் படுகிறது.
4) Whatsapp மற்றும் Wechat பயன்பாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது.பேஸ்புக்கில் நமது விஷயங்களை பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நமது தகவல்களை தெரிந்து கொள்வார்கள் . Whatsapp மற்றும் Wechatல் ஏனெனில் இதில் யாரும் நமது தகவல்களை திருட முடியாது.
5)பேஸ்புக்கில் நமக்கு தெரியாமல் நமது பக்கத்தை யார் வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.Whatsapp மற்றும் Wechatல் அவ்வாறு செய்ய இயலாது ஏனெனில் அனைத்து செய்திகளும் தனிப்பட்ட செய்திகளாக நமது போனிலே இருப்பதால் யாரும் இதனைத் திருட முடியாது.

ரஜினி கமலுடன் நடித்த நடிகை -அனாதையாக ரோட்டில் -இழிவான பாதையால் இழிவு

சென்னை, டிசம்பர் 02: ரஜினி , கமலுடன் நடித்த நடிகை நாகூரில் நாதியற்று கிடந்த பரிதாபம் ... நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. 

அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா. ‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூனுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. 


அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதைவிட அதிர்ச்சியான செய்தி. ஒரு முஸ்லிம் அமைப்பு மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நடைப்பிணமாக, ஒரு கட்டிலில் கிடந்த நடிகை நிஷாவை நாம் சந்தித்தோம். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என திகைக்கும் வண்ணம் காய்ந்த கருவாடாக கட்டிலில் கிடந்தார். நாம் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வருகிறோம் என்றதும் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்ட அவர், ”சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். 


நான் மறுபடியும் நடிக்கனும்!” என்று கதறினார். சினிமா ஸ்பாட் லைட்களின் ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது நம்மை உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார். ”எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. 


பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். நடிகர் கமலோடு ‘டிக்…டிக்….டிக்’, ரஜினி சாரோட ‘ஸ்ரீராகவேந்திரர்’, பாலசந்தர் சாரோட ‘கல்யாண அகதிகள்’ இன்னும் விசு சார், சந்திரசேகர் சார் டைரக்ஷனில் கூட நடிச்சிருக்கேன்” என்றவர் தொடர்ந்தார். ”அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார். நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீருடன்.



 ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். என் பெரியப்பா அப்துல் ஹமீதுவின் மகள் நிக்காவின்போது, தாலிக்கு நான் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதை அவர்கள் மறந்து விட்டார்கள். சொந்த ஊரில்… பெற்ற தந்தையின் கண்முன்பே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார். அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை.


 ஒரு முட்டை புரோட்டா சாப்பிடனும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார். நம்முடன் வந்திருந்த நண்பரொருவர் ஓடிச்சென்று அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். நிஷா, சென்னை பல்லாவரத்தில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மா என்பவரிடம் அலிபாய், ரபீர் என்பவர்கள் மூலமாக நகை மற்றும் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பதாகவும், நகையன்றை அடகு வைத்து அந்தப் பணத்தில் வாடகைக் கார் பிடித்து அலிபாய் மூலம்தான் நாகூர் வந்து சேர்ந்ததாகவும் நிஷா நம்மிடம் விவரித்தார். 


தந்தை மற்றும் உறவினர்கள் ஏற்க மறுத்து விட்ட நிலையில், நாகூர் தர்கா அருகே அவர் அனாதையாக விடப்பட்டிருக்கிறார். நடிகை நிஷாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்தபோது, நர்ஸ் ஒருவர் விடுவிடென்று வந்து நம்மை, அப்பால் அழைத்துச் சென்றார். ”அந்தம்மாவுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்திலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரிக்கு அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்!” என்றார் இரக்கக் குரலில். நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. நாகூரில் வசிக்கும் நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைச் சந்தித்தோம். ”நிஷா எனக்குப் பிறந்தவள்தான். 


அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணி திருமணம் செய்ததால், பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. ‘கொஞ்ச நாள் பொறு’ன்னு நான் சொன்னதைக் கேட்காமல், குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. அதன் பிறகு, பேபியைத் தேடியலைஞ்சு கோடம்பாக்கத்தில் கண்டுபிடித்தேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. தான் ஜலீல்னு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச் சொன்னாள். நிஷாவை என் கண்ணில் காட்டாமல் மறைச்சிட்டாள். பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. அதனால், ”உனக்கு ஊரில் பல பொம்பிளைகளோடு தொடர்பிருக்கு. இனிமே இங்கே வராதேன்னு என்னை விரட்டிட்டா” என்றார். ‘உங்களுக்கு எத்தனை மனைவிகள்?’ என்று ஜப்பாரிடம் கேட்டோம்.


 ”மனைவி என்றால் அது பேபி மட்டும்தான். ஆனால் நாலைந்து பெண்களோடு தொடர்பு உண்டு. எனக்கும் ஓர் இந்துப் பெண்னுக்கும் பிறந்த பையனை முஸ்லிமாக மாத்தி ஷாகுல் அமீதுன்னு பெயர் வைத்து வளர்க்கிறேன்” என்றார். மீண்டும் தொடர்ந்த அவர், ”பேபி இறந்தபோது எனக்கு தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே போனபோது, ‘எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் பெரியப்பா எதுக்கு?’ன்னு கேட்டு, நிஷா அவரை விரட்டியிருக்கா. இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்கள்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்?” என்றார் அப்துல் ஜப்பார். நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீதைச் சந்தித்தோம். ”சென்னை சாந்தோமில் மலாக்கா சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக்கும் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார் போட்டோவுக்கு மறுத்தபடி. நாகூர் ஜமாத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீனுடன் பேசினோம். ”ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை” என்று முடித்துக்கொண்டார். அடுத்து நாகை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகியும், பொதுநல ஆர்வலருமான நாகூர் பாரி, ”நலிந்த கலைஞர்களுக்குக் கிடைக்கும் உதவி நிஷாவுக்குக் கிடைத்தால் நல்லது! திரையுலகைச் சேர்ந்தவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்” என்றார். 



‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டோம். ”அந்தப் பொண்னும் அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தபோது உதவினோம். நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு உதவப்போய் இப்போது எங்களுக்குக் கெட்ட பெயர். உடல்நிலை சரியில்லாத நிஷா, அவரது நகை ஒன்றை அடகு வைத்தார். அந்தப் பணத்தில்தான் கார் ஒன்றை வைத்து அவரைக் கொண்டு போய் நாகூரில் விட்டுவரச் சொல்லி ஏற்பாடு செய்தோம்.நிஷாவை உறவினர்கள் ஏற்க மறுத்ததால், நாகூர் தர்காவில் தன்னை விடச்சொல்லி நிஷாவே சொன்னதால்தான் அங்கே விட்டு விட்டு வந்தோம். 





நிஷா பல்லாவரத்தில் அவரது எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மாவிடம்தான் மீதி நகைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்றவர், அதைத் தொடர்ந்து நாம் கேட்ட சில கேள்விகளால் கோபமடைந்து மிரட்டலுடன் போன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் முகமது அலியின் செல்போன் மூலம் மகியம்மா என்பவர் நம்மிடம் பேசினார். ”என்னிடம் மொத்தம் மூனு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டேன். நகைக்கு அது சரியாப் போச்சு. நிஷா இருபத்து நான்கு புடைவை கொடுத்தார்.



 அதில் இருபது புடைவைகளை தலா நூறு ரூபாய்க்கு விற்று அவரிடம் காசு கொடுத்துவிட்டேன். மீதமிருப்பது நான்கு புடைவைகள்தான்” என்றார். ”முகமது அலிக்கும் நிஷாவுக்கும் நீண்டகாலமாகத் தொடர்புண்டு’ என்று அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அந்த செல்போனைப் பிடுங்கிய முகமது அலி, ”நிஷா இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான் அவரை எனக்குத் தெரியும். அவரோடு எனக்கு முப்பது வருஷப் பழக்கம் என்பதெல்லாம் பொய்!” என்றார் கோபத்தோடு. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அப்துல் ஜப்பாரின் மகன் ஷாகுல்அமீது, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்ததாக நமக்குத் தெரிய வந்தது. நிஷா குறித்து ஃபிலிம்நியூஸ் ஆனந்தனிடம் பேசினோம். 


அவரது நிலை பற்றி மிகவும் வருத்தப்பட்ட அவர், ”அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீஸ§க்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படியரு நிலைமை?” என்றார் நிஜமான வருத்தத்தோடு. 



எக்ஸ்பிரஸ் கருத்து :பெண்கள் தங்கள் வாழ்வை எப்படி அமைத்து கொள்ளவேண்டும் என்பதற்கு பல அற்புதமான வழிகளை தந்துள்ளது இஸ்லாம்  .அதை விட்டு விட்டு  இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் இந்த நிலைமைதான் .



அந்நியன் -இந்தியன் பாணியில் 5 பேரை கொலை செய்த சாமியார் !!!

கண்ணன் அளித்துள்ள பகீர் வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:– 
ஸ்ரீரங்கம், டிசம்பர் 01: நான் ஸ்ரீரங்கம் பாரதி நகரில் வசித்து வருகிறேன். ஜோதிடம் பார்ப்பது, பரிகார பூஜைகள் செய்வது எனது தொழில். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வைர வியாபாரி செய்து வந்த திருவானைக்காவல் தங்கவேலு தனக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் மீண்டும் தொழில் லாபகரமாக நடக்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கேட்டு என்னிடம் வந்தார்.

யமுனாவின் மீதான மோகத்தால் 5 பேரையும் கொன்றேன்: சாமியார் கண்ணன் வாக்குமூலம்
நான் தங்கவேலுவின் வீட்டிற்கு பரிகாரபூஜை செய்வதற்காக சென்றேன். அப்போதுதான் தங்க வேலுவின் மனைவி யமுனாவை முதன் முதலில் பார்த்தேன். பார்த்தது முதல் அவள் மீது எனக்கு ஆசை பிறந்தது. இதனால் அடிக்கடி பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறி தங்கவேலு வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன். பின்னர் தங்கவேலு வீட்டில் இல்லாத போதும் அங்கு செல்வேன். சில நாட்களிலேயே யமுனாவை என் வலையில் வீழ்த்தினேன். அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தோம். இந்த விஷயம் தங்கவேலுவிற்கு தெரிந்து விட்டது. அவர் கடும் கோபத்தில் யமுனாவை திட்டினார். என்னை இனி வீட்டுக்கு வராதே என்று சொன்னார். இதனால் தங்கவேலுவை கொன்றால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என யமுனாவிடம் கூறினேன். 

யமுனாவும் அதற்கு சம்மதித்தாள். தங்கவேலுவை மது குடிக்க அழைத்து சென்றேன். அதிகமாக மது குடிக்க வைத்து பின் அவரின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தும் கழுத்தை அறுத்தும் கொன்றேன். உடலை சாக்கு மூட்டையில் கட்டி காட்டுப் பகுதியில் புதருக்குள் வீசினேன். இது 2006ம் ஆண்டு நடந்தது. 

செல்வக்குமாரும் சிறு வயது என்பதால் இது குறித்து அவர்களுக்கு புரியவில்லை. ‘அப்பா எங்கே’? என கேட்ட அவர்களிடம், வியாபார விஷயமாக வெளிநாடு சென்று விட்டார் என கூறி யமுனா சமாளித்தாள். இதை உறவினர்களிடமும் கூறி நம்பவைத்தாள். 

இந்நிலையில் திருச்சி கிராப்பட்டி, அன்பு நகரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரிடம் தங்கவேலு கடன் வாங்கி இருந்தார். தங்கவேலுவை நாங்கள் கொலை செய்துவிட்டதால் அவரை தேடி துரைராஜ் யமுனாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது தங்கவேலு வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக துரைராஜிடம் யமுனா கூறினார். இதனால் கணவர் இல்லமால் தனியாக யமுனா இருப்பதை தெரிந்து கொண்ட துரைராஜ் அடிக்கடி கடனை திருப்பி கேட்கும் சாக்கில் யமுனாவை பார்க்க வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

தங்கவேலுவை கொலை செய்தது போல் துரைராஜையும் கொலை செய்து விடுவது என யமுனாவும் நானும் தீர்மானித்தோம். கடந்த 2007–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதி துரைராஜை வீட்டிற்கு வரும்படி யமுனா போன் மூலம் அழைத்தாள். துரைராஜ் தனது காரில் யமுனா வீட்டிற்கு வந்தார். அவரையும் யமுனா வீட்டில் வைத்து இரும்பு கம்பியால் அடித்து கொன்றேன். உடன் வந்த கார்டிரைவர் சக்திவேலுவையும் வீட்டிற்குள் நைசாக அழைத்து கம்பியால் பின் தலையில் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடல்களை வையம்பட்டிக்கு காரில் கொண்டு சென்று காரில் வைத்தே எரித்தோம் இதற்கு சரவணனையும், முத்துக்காத்தானையும் கூட்டாக சேர்த்துக் கொண்டேன். 

துரைராஜ் கொலை குறித்து என்னிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் சமர்த்தியமாக பதில் கூறி தப்பித்தேன். இதன்பின் எந்த பிரச்சனையும் இல்லாமல் எங்கள் உறவு தொடர்ந்தது. நான் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்கு யமுனா வந்து விட்டாள். 

இந்த நிலையில் தான் சத்யாவும், செல்வக்குமாரும் பெரியவர்களாகி விட்டனர். எங்களது கள்ள தொடர்பு குறித்து புரிந்து கொண்ட செல்வக்குமார் யமுனாவிடம் சண்டை போட்டான். மேலும் யமுனாவிற்கு சொந்தமான நிலத்தை ஒருவரிடம் அடகு வைத்து லட்சக் கணக்கில் பணம் வாங்கி இருந்தோம். அந்த பணம் குறித்தும் செல்வக்குமார் கணக்கு கேட்க தொடங்கினான். இதனால் அவைையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்கு யமுனாவையும் சம்மதிக்க வைத்தேன். 

கடந்த அக்டோபர் மாதம் ஒருநாள் காலையில் யமுனாவின் வீட்டிற்கு சென்றேன். சத்யா வேலைக்கு சென்று விட்டாள். செல்வக்குமார் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். யமுனாவும் அவளது தாய் சீதாலட்சுமியும் ஒரு அறையில் இருந்தார்கள். நானும் அவர்களுடன் காத்திருந்தேன். தூக்கம் கலைந்து எழுந்த செல்வக்குமார் பாத்ரூமுக்கு சென்றான். அப்போது பின்புறமாக சென்று அவன் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தேன். இதில் ரத்தம் சொட்ட சொட்ட அவன் கீழே விழுந்தான். கத்தியால் அவன் கழுத்தை அறுத்து கொன்றேன். 

செல்வக்குமாரை கொல்லும் வரை யமுனாவும் அவளது தாயும் அறைக்குள்ளேயே இருந்தனர். பின்னர் அவன் உடலை புலிவலம் காட்டு பகுதியில் வீசினேன். தம்பியை காணாத சத்யா அவன் எங்கே என்று கேட்டு யமுனாவிடம் தகராறு செய்ய ஆரம்பித்தாள். 

இந்த நிலையில் தான் கையில் யமுனாவின் பெயரை பச்சை குத்திய நிலையில் செல்வக்குமார் பிணமாக கிடந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. இதை பார்த்த சத்யா நாங்கள் தான் அவனை கொலை செய்தோம் என்றும் போலீசிடம் இதை சொல்லப் போவதாகவும் யமுனாவிடம் கூறினாள். சத்யாவை உயிருடன் விட்டால் நாங்கள் மாட்டிக் கொள்வோம் என்பதால் அவளையும் கொலை செய்ய முடிவு செய்தோம். 

கடந்த 15–ந் தேதி அதிகாலையில் யமுனா வீட்டிற்கு சென்றேன். செல்வக்குமாரை கொன்றது போல் பாத்ரூம் அருகில் வைத்து சத்யாவை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் கழுத்தை அறுத்தும் கொன்றேன். அவள் உடலையும் புலிவலத்தில் செல்வக்குமாரின் உடலை வீசிய இடத்தில் கொண்டு போட்டேன். இத்தனை கொலைகளையும் யமுனாவின் மீது நான் கொண்டிருந்த தீவிரமான மோகத்தால் தான் செய்ய நேர்ந்தது. 

சத்யா– செல்வக்குமார் கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்ததால் நானும், யமுனாவும் அவளின் தாய் சீதாலட்சுமியை கூட்டிக் கொண்டு ஆந்திராவிற்கு தப்பி சென்றோம். பின்னர் மீண்டும் திருச்சி வந்த போது யமுனாவையும் சீதாலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். வேறு வழியில்லாமல் நானும் சரண் அடைந்து விட்டேன். 

இவ்வாறு கண்ணன் வாக்கு மூலத்தில் கூறி உள்ளான்.

தம்பிகோட்டையில் கேரளா முஸ்லிம்கள் மீது தாக்குதல் பதற்றம் -ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் சதியா ?


தம்பிக்கோட்டை, நவம்பர் 29: இன்று மாலை 6.30 மணியளவில், நாகூரிலிருந்து கேரளா பாலக்காட்டை சேர்ந்த செளக்கத் அலி என்பவர் டூரிஸ்ட் வேனில் தனது குடும்பத்தினருடன் ஏர்வாடியை நோக்கி ஈசிஆர் சாலையில் பயணமானார். இதில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 20 பேர் இருந்துள்ளனர்.

தம்பிக்கோட்டை சாலையோரக் கடையில் டீ குடிப்பதற்காக வேனை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் வேனின் மீது கற்களால் தாக்கியுள்ளனர். வேனில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலில் வேனின் கண்ணாடி, கதவு உள்ளிட்டவை சேதமடைந்தன. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வேன் டிரைவர் வேனை பதட்டத்துடன் அதிரைக்கு ஓட்டிவந்துள்ளார்.

இதனை அறிந்த அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அதிரை இளைஞர்கள் திரண்டு வந்து சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் கூறினர்.

பாதிக்கப்பட்டோர் சார்பாக அதிரை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.








ஐம்பது ஆண்டிற்கும் மேலாக கொடிகட்டி பறக்கும் கொய்யா மசாலா !அரைசதம் அடித்து சாதனை மேல் சாதனை !!ஆச்சர்யப்படவைக்கும் அசுர வளர்ச்சி !!!வெற்றி மேல் வெற்றியின் பின்னணி என்ன ?ஓர் சிறப்பு பார்வை !!!!

முத்துப்பேட்டை, நவம்பர் 29: மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி இருதயமும் ,சுவாசமும் இன்றியமையாததோ அதே போல் 

மனிதன் கௌரவமாய் வாழ்வதற்கு வியாபாரமும் ,தொழிலும் வாழ்வின் அச்சாரமாகும் .வியாபாரத்தால் பலர் வாழ்ந்த வரலாறுகளும் ,அதே வியாபாரத்தால் பலர் வீழ்ந்த வரலாறுகளும் உண்டு .

ஆனால் தொடர்ந்து 50- ஆண்டிற்கும் மேலாக ஒரு வியாபாரம் தொழில் சார்ந்த நிறுவனம் ஏறுமுகத்திலேயே -உச்சாணி கொம்பிலேயே இருப்பது என்பது எப்படி சாத்தியமாகும் ?ஆனால் அதை சாத்திய படுத்தி இருக்கிறது கொய்யா மசாலா நிறுவனம் .




















































இது பற்றிய முழுமையான தகவலை பெற முத்துப்பேட்டை உப்பூரில் இயங்கிகொண்டிருக்கும் "கொய்யா மசாலா "நிறுவனத்தில் ஆஜரானோம் .பல்வேறு பணிகளுக்கிடையில் படு பிசியாக இருந்த கொய்யா மசாலா நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் கொய்யா NA .சாதிக் பாட்ஷா ,அவர்கள் நம்மை இன்முகத்தோடு வரவேற்றார் .பின்னர் நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார் .

கே ;   கொய்யா மசாலாவின் நிறுவனர் யார் ?

பதில் : கொய்யா மசாலாவின் நிறுவனர் எனது தந்தை கொய்யா ஹாஜி.N .அப்துல் ரெஜாக் அவர்கள் .


கே :  கொய்யா மசாலா எப்போது -  எங்கு தொடங்கப்பட்டது ?

பதில் : கொய்யா மசாலா 1950 -ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது .


கே :  கொய்யா மசாலாவை தமிழகத்தில் தொடங்கியது எப்போது ?

பதில் :  கொய்யா மசாலாவை 19-10-1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கினோம் .


கே :  தமிழகத்தில் கொய்யா மசாலா எத்தனை மாவட்டங்களுக்கு செல்கிறது ?

பதில் :  தமிழகத்தில் கொய்யா மசாலா -தஞ்சை-நாகை -திருவாரூர்-கடலூர் -பாண்டிச்சேரி -மயிலாடுதுறை -திருச்சி-கோவை -வேலூர் -ராமநாதபுரம் -சிவகங்கை -உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு செல்கிறது .




கே : உங்கள் நிறுவனத்தில் எந்தெந்த வகையான மசாலாக்கள் தயாரிக்கபடுகின்றன ?

பதில் : எங்கள் நிறுவனத்தில் சிக்கன் மசாலா -மட்டன் மசாலா -சிக்கன் 65 மசாலா -மீன் மசாலா -சாம்பார் மசாலா -குழம்பு மிளகாய் தூள் மிளகாய் தூள்  -மஞ்சள் தூள் -  சீரகத்தூள் -சோம்பு தூள் -மிளகு தூள் -ஆகியவை தயாரிக்க படுகிறது .இது தவிர இடியாப்ப மாவு ,அரிசி மாவு ,கடலை மாவு போன்றவைகளும் தயாரிக்க படுகிறது .


கே : மசாலா வகைகள் எப்படி தயாரிக்கபடுகிறது ?

பதில் :அதற்குரிய காலங்களில் ,அதற்கான விளைநிலங்களிலிருந்து ,விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து எங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் நன்கு பதப்படுத்தி மசாலா வகைகளை தயார் செய்கிறோம் ."COLD GRAIN TECHNOLOGY " என்கிற அதிநவீன கருவி மூலம் இரும்பு தாது கலக்காமல் மிகவும் நேர்த்தியான முறையில் உருவாக்கம் செய்கிறோம் .


கே :  விளம்பரங்களே இல்லாமல் எப்படி வியாபாரம் ?


பதில் :தரமான சுத்தமான பொருட்களுக்கு விளம்பரம் எதற்கு ?நாங்கள் 63 ஆண்டுகளாய் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம் .இது வரை ரேடியோவிலோ ,தொலைகாட்சி களிலேயோ விளம்பரங்கள் செய்தது கிடையாது  -.விளம்பரம் செய் பவர்களுக்கு எப்படி வியாபாரமோ ,அதை விட பன்மடங்கு எங்களுக்கு வியாபாரம் .காரணம் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை . 


கே :உங்கள் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் பற்றி ?

பதில் : CG பல்வரைசர் (PALVARAISAR )  --அரைக்கும் இயந்திரம் 
               ரோஸ்டர்          (ROSTER )          -- மசாலாக்களுக்கு வாசனையூட்டும்                                                                                                                                          இயந்திரம் 
                மிக்சர் மிஷின்(MIXER MACHINE )--கலக்கும் இயந்திரம் 




கே :மசாலாக்களை  எப்படி பேக்கிங் செய்கின்றீர்கள் ?



பதில் :  AUTOMATIC AUGOR FILLER MACHINE 

               AUTOMATIC  FORM FILLING MACHINE 

                AUTOMATICFILLING மசினே
                 HOT AIR SACHET MACHINE   


ஆகிய  தானியங்கி கருவிகளை கொண்டு பேக்கிங் செய்கிறோம் .
இவ்வாறு பதில் அளித்தார்.

 குறிப்பு ;கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கொய்யா இல்ல திருமணத்திற்கு கலந்து கொள்ள வந்த மாண்புமிகு தமிழக வேளாண் துறை அமைச்சர் அவர்கள் கொய்யா மசாலா நிறுவனத்திற்கு வருகை தந்ததாக  கூறப்படுகிறது .கூடிய விரைவில் கொய்யா மசாலா நிறுவனத்திற்கு தமிழக அரசின் சார்பாக ISO தரச்சான்றும்,வெற்றிகரமாக நிறுவனத்தை நடத்தி வரும் கொய்யா சாதிக் அவர்களுக்கு இளம் சாதனையாளர் விருதும் வழங்கப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது .

சந்திப்பு : ஜே ஷேக்பரீத்

மவுத்து அறிவிப்பு: “முஹம்மது தாவுதம்மாள்”


முத்துப்பேட்டை, நவம்பர் 25: முத்துப்பேட்டை SPKM தோட்ட வளாகம்  மர்ஹும் (இனா கானா) E.K.ஹபிப் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும் O.K.S. அஹமது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், O.K.S.A கேப்டன் ஜுனைது, O.K.S.A அப்துல் காதர், O.K.S.A. சஹாபுதீன் அவர்களின் தாயாருமாகிய முஹம்மது தாவுதம்மாள்” அவர்கள்  இன்று அதிகாலை 1 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று 25.11.13 திங்கள் கிழமை காலை 11.30 மணியளவில் முஹையதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்: 
O.K.S.A. சஹாபுதீன்

புதுக்கோட்டை சிறையில் முஸ்லிம் கைதி சித்ரவதை - சிறைக்குள் மந்திரம் ஒத கட்டளை -தாடி வைக்க தடை - சிறைக்கு நேரில் சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் முத்துப்பேட்டை ஷிப்லி !!!

புதுக்கோட்டை, நவம்பர் 21: புதுக்கோட்டையில் உள்ள சிறுவர் சிறையில் முஸ்லிம் கைதி ஒருவரை மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு தகவல் கிடைத்தது. உடனே ஷிப்லி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் சகோ சாதிக், நகர நிர்வாகி அத்தீக் , சகோ காயல் ஷரீஃப் ஆகியோர் புதுக்கோட்டை சென்றோம்.நாம் செல்வதற்க்கு முன்பு அங்குள்ள நம் நண்பர் துரை முஹம்மது அவர்களை தொடர்பு கொண்டோம். அவர் புதுக்கோட்டை பெரிய ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பேசிவைத்திருந்தார். நாம் அங்கு சென்றதும் பள்ளி நிர்வாகத்திடம் ஆலோசனை செய்து விட்டு, பாதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நபரை மனு போட்டு பார்த்தோம். செய்தி கேள்விபட்டு நகர தமுமுக நிர்வாகிகள் இரண்டு பேர் எங்களுடன் வந்தனர்.

 



பாதிக்கப்பட்டவர் சொன்ன தகவல்கள்:

@ ஜெப ஆராதனை நடக்கும் இடத்தில் கண்டிப்பாக அமர வைக்கிறார்கள்
@ இங்கே தாடி வைக்கக்கூடாது. தாடியை மழிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
@ கோவை சைக்கோ கொலை குற்றவாளிகள் மூன்று பேரிடம் சிறை வார்டன் சாவியை கொடுக்க, குறிப்பிட்ட முஸ்லிம் கைதியின் அறையில் மூன்று பேரும் சென்று அடித்து காயத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
@ வார்டன் கண் முன்னே தீவிரவாதி,பயங்கரவாதி போன்ற வார்த்தைகளை கூறி அசிங்கம் அசிங்கமாக திட்டினார்கள்.

இந்த தகவல்களை கேட்டுவிட்டு, சிறை சூப்பிரண்ட் ரவீந்திரன் அவர்களை சந்தித்து ,
சிறையில் நடந்த கொடுமைகளை கடுமையாக கண்டித்தோம்,

குறிப்பாக வார்டனே சாவியை கொடுத்து அடிக்கச்சொல்லியுளார். இது சிறுவர் சீர்திருத்தப்பள்ளியா அல்லது ரெளடிகளின் கூடாரமா? என்று கேட்டு வார்டனின் அக்கிரமத்தை கண்டித்தோம். அதற்கு அவர், அது என் பார்வைக்கு வராமல் நடந்து விட்டது. அதை உடனே கண்டித்து விட்டேன். அதற்கு நான் தனிப்பட்ட முறையில் பொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். இனி இது போல் நடக்காது சார். 
நான் பார்த்துக்கொள்கிறேன்.என்றார். 

தாடி விஷயத்தையும், ஜெபக்கூடத்தில் அமரும் விஷயத்திலும் நாம் யாரும் யாரையும் வற்புறுத்துவதில்லை. அவரவர் இஷ்டப்பட்டால் அமரலாம் என்று பொறுமையாக விளக்கம் அளித்தார். 

மேலும் நான் கோயம்புத்தூர் காரன், பாய் மார்கள் அதிகம் இருக்கும் கோவை, பாளையங்கோட்டை சிறைகளில் நான் பணிபுரிந்து இருக்கிறேன். என்னை குறித்து கேட்டுப்பாருங்கள். என்றார்.

நாம், நீங்கள் தெளிவாக பேசுகிறீர்கள். ஆனால் உங்கள் பார்வைக்கு வராமலா இந்த காரியம் நடந்திருக்கும்? வார்டன் காட்டும் மோசமான போக்கை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என்றதும், அவர் மேல் வந்த புகார்களுக்கு நான் உடனே சில நடவடிக்கை எடுத்துவிட்டேன். இனியும் புகார் வராது. வந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். இதை நீங்கள் பெரிதுபடுத்தாதீர்கள் என்றார்.

உடனே நாம்,இந்த பிரச்சனை சாதரணமான விஷயம் அல்ல. வெளியே முஸ்லிம் ஜமாஅத்கள் கடும் கோபத்தோடும், வேதணையோடும் நிற்கிறார்கள். இது முழுக்க மத ரீதியாக துன்புறுத்தும் போக்கை உங்கள் சிறை வார்டன் கடைபிடித்து, அந்த சிறுவனை சித்ரவதை செய்துள்ளனர். மற்ற கொலை குற்றவாளிகள் போல் அல்ல இவர். இவர் மீது பொய் வழக்கு போட்டு இங்கே தள்ளியுள்ளனர். அவர் சிறைக்குள் தொழும் போதும் தொல்லை கொடுத்துள்ளனர். அவர் வணங்குவதற்க்கும தனி இடம் தயார் செய்து கொடுக்குமாறு கூறினோம்.

மேலும் இதே கடும் போக்கு தொடருமானால் உங்கள் சிறைச்சாலையை முற்றுகையிடுவதுடன், தவறு செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம். என எச்சரித்து விட்டு வெளியேறினோம்.விரைவில் மாநில நிர்வாகிகள் சிறைத்துறை ஐ.ஜி யை சந்திக்க உள்ளனர்.
நன்றி:அப்துல் காதர் மன்பஈ

மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து ரூ.10 லட்சம் கேட்ட டாக்டர் கைது


திருவனந்தபுரம், நவம்பர் 21:  திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே உள்ள செருவைக் கல் பகுதியை சேர்ந்தவர் வித்யாதரன். இவரது மகன் ஜெயகிருஷ்ணன் (27). பல் டாக்டரான இவர் தற்போது கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் எம்.டி.எஸ். படித்து வருகிறார். கடந்த செப்.15ம் தேதி இவருக்கும் அடூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. மனைவியுடனான படுக்கை யறை காட்சிகளை அவருக்கு தெரியாமல் ஜெயகிருஷ்ணன் வீடியோ எடுத்துள்ளார்.  மேலும் அவரை நிர்வாணமாக்கி புகைப்படமும் எடுத்துள்ளார். இவை அனைத்தையும் லேப்டாப்பில் பதிவு செய்தார். மனைவியை மது குடிக்கவும், ஆபாச படங்கள் பார்க்கவும் ஜெயகிருஷ்ணன் வற்புறுத்திள்ளார். இதற்கு மனைவி மறுக்கவே அவரை கொடுமைப்படுத்த தொடங்கினார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு மனைவியை எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற ஜெயகிருஷ்ணன் நடுரோட்டில் அவரை இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை அந்த பெண் கூறினார். அவர்கள் உடனடியாக அங்கு வந்து அவரை அழைத்து சென்றனர். இந்நிலையில், மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஜெயகிருஷ்ணன், எனக்கு ரூ.10 லட்சம் தராவிட்டால் உங்களது மகள் என்னுடன் இருக்கும் படுக்கையறை காட்சிகள், நிர்வாண புகைப்படங்களை யு டியூப்பில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நாசரூதீன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, ஜெயகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர். 

கும்பகோணம் பாத்திமா நாச்சியார் மக்களை ஏமாற்றியது எப்படி ?ஒரு திடுக் ரிப்போர்ட் !!!

146619613 ஆயிரம் பவுன்; 30 கோடி மோசடி – பாத்திமா நாச்சியார் கூறும் பரபரப்புத் தகவல்கள்.   கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோயில் அருகில் இந்திரா நகர் புதுத் தெருவில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தவர் பாத்திமா நாச்சியார். இவர் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் தமிமுன் அன்சாரி.
பாத்திமாவிடம் 10 பவுன் தங்க நகையைக் கொடுத்தால் ரூ.15 ஆயிரம் தருவாராம். இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் ரூ.30 கோடி மதிப்புள்ள நகைகளைப் பாத்திமா வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நகைகளைப் பெற்ற பாத்திமா நாச்சியார், அவற்றைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாக சென்னையில் தமிழக டிஜிபி ராமானுஜத்திடம் சிலர் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சென்னை சென்ற பாத்திமா, டிஜிபியைப் பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாத்திமா நாச்சியார் வீட்டுக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. ஒரு மணி நேரம் கழித்து வந்தவர், “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:   “2010-லிருந்து 2012 ஜனவரி வரை நகை சுழற்சி (?) செய்து வந்தேன். எனக்கு 23 பேர் முகவர்களாகச் செயல்பட்டனர். நாகை மாவட்டத்தில் உள்ளவர்களிடம்தான் நாங்கள் நகைகளை வாங்கியுள்ளோம். அவர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து 10 பவுன் நகை வாங்கித் தந்தால், 10 நாளில் ரூ.15 ஆயிரம் தருவேன்.
ஒரு மாதத்தில் நகையை திரும்பத் தந்து விடுவேன். எல்லோரும் ஒரு குடும்பம்போல் இருந்தோம். நகை சுழற்சி நடக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நகைகளை மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனத்தில் அடகு வைத்துதான் பணத்தை தந்து கொண்டிருந்தேன். முதலில் அவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் நகை வைக்கலாம் என்றார்கள். ஒருகட்டத்தில், அவர்கள், தொகை ரூ.8 கோடிக்கு மேல் தாண்டிவிட்டது, இனிமேல் நகை வைக்க முடியாது என்றதால் பண சுழற்சி நின்றுவிட்டது.
அப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. இந்நிலையில் மயிலாடுதுறை ஐசிஐசிஐ வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்கர் என்பவர் உதவ முன்வந்தார். ஒருவரின் பெயரில் ரூ.4.50 லட்சம் வரை நகைக் கடன் பெறலாம் என்பதால், அவரே சுமார் 150 பேரின் பெயரில் நகைக் கடன் பெற்றுத் தந்தார். அவரே பெயர் வைத்து, ஆவணங்களையும் தயார் செய்து கொண்டார். இதற்காக என்னிடம் ரூ.4.50 கோடி வரை கமிஷனாகப் பறித்துக்கொண்டார்.
இந்நிலையில், சில வாடிக்கையாளர்கள் 10 மாதம் வரை நகையை வைத்துக்கொள்ளுங்கள், முதலிலேயே ரூ. 1 லட்சமாகத் தந்துவிடுங்கள் என்றனர். அப்படி என்றால் நகையை திரும்பத் தரும்போது பணத்தையும் திரும்பத் தந்துவிடவேண்டும் என்ற நிபந்தனைப்படி எல்லோருக்கும் பணம் தந்தேன். முகவர்களால்தான் பிரச்சினை இதற்காக நான் யாரிடமும் எழுதிக் கொடுக்கவில்லை. என்னிடம் வாங்கிய பணத்துக்கு முகவர்கள் எழுதித் தந்துள்ளனர்.
அந்தப் பணத்தை அவர்களை வேறு வழிகளில் முதலீடு செய்து, வீடும் சொத்தும் சேர்க்கத் தொடங்கியதால்தான் பிரச்சினை ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில்தான், மயிலாடுதுறையிலிருந்து நான் அடித்துத் துரத்தப்பட்டு, கும்பகோணத்தில் உள்ள எனது கணவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறேன். மயிலாடுதுறையில் உள்ள வீட்டை எனது முகவராக செயல்பட்ட தன்ஷிலா வடகரை என்பவருக்காக பாமகவைச் சேர்ந்த வி.ஜெ. மணி, ம.க. ஸ்டாலின் ஆகியோர் எங்களை மிரட்டி வீட்டின் பத்திரத்தை வாங்கிச் சென்று விட்டனர்.
என் மீது நாகை காவல் நிலையத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நான் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது எனக்கு உதவ உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இம்தியாஸ் என்பவர் முன்வந்தார். என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்யவுள்ளதாகவும், அதனால் முன்ஜாமீன் பெற வேண்டும் என்று அவர் கூறியதோடு, இந்தப் பிரச்சினைகளை முழுமையாக முடித்துத் தருவதாகக் கூறி ரூ.13 லட்சம் வரை பறித்துக் கொண்டார். முன் ஜாமீன் மட்டும்தான் பெற்றுத் தந்தார்.
முன்ஜாமீன் பெற ரூ.22 ஆயிரம்தான் செலவாகும் என்பது பின்னர்தான் தெரிந்தது. என்னை மிரட்டி பணம்பறித்துக்கொண்ட அவர், எனது காரையும் தர மறுக்கிறார்.   கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத சுமார் 20 பேர் வந்து எனது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து என் கணவரை கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து நான் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு திரும்பிய நிலையில், டி.வி.யில் நான் நகை மோசடி செய்துவிட்டு தலைமறைவானதாக செய்தி வந்தது.
அதனால், நான் உடனே புறப்பட்டு சென்னை சென்று டிஜிபி ராமானுஜத்தைச் சந்தித்து விளக்கம் அளித்தேன். நாகை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு உங்கள் தொடர்பான புகார்களை அனுப்பிவிடுகிறோம். அவர்கள் அந்த வழக்கை விசாரிப்பார்கள். உங்கள் கணவரையும் மீட்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அனுப்பிவைத்தார். 8 ஆயிரம் பவுன் நகை அடகு இப்போது எனது பொறுப்பில் 8,000 பவுன் நகைகள் வங்கியில் மீட்க முடியாத நிலையில் உள்ளன. மற்றவை எனது முகவர்களிடம்தான் உள்ளது.
எனக்கு முகவர்கள் தர வேண்டிய தொகை ரூ.8 கோடி வரை உள்ளது. நகை மற்றும் ரூ.8 கோடி பாக்கியை அவர்கள் தந்தால்தான் பணத்தை திரும்பத் தர முடியும். நான் யாரிடமும் நகையை வாங்கும்போது கையெழுத்திடவில்லை. ஆனால் முகவர்கள் என்னிடம் வாங்கிய தொகைக்கு ஆதாரம் இருக்கிறது. என்னுடைய பிரச்சினையைப் பயன்படுத்தி, முகவர்கள், வழக்கறிஞர்கள், போலீஸார் எனப் பலரும் என்னிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்” என்றார்.
இதன் பின்விளைவுகள் தெரிந்துதான் இதில் ஈடுபட்டீர்களா, வாடிக்கையாளர்களிடம் வாங்கிய நகைகளுக்கு யார் பொறுப்பு என்றபோது, “இதை விளையாட்டாகத்தான் செய்யத் தொடங்கினேன். இந்த அளவுக்கு விபரீதமாகும் என்று நினைக்கவில்லை. எனது கணவர் வெளிநாட்டில் இருந்ததாலும், நான் ஒரே பிள்ளை என்பதாலும் எனக்கு ஆலோசனை வழங்க யாரும் இல்லை. நான் என்ன செய்துள்ளேன் என்பதை நினைக்கும்போது பயமாக உள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கிறேன்” என்கிறார் பாத்திமா.
கதவுகளை இயக்கிக் கொண்டிருந்த நவீன ரிமோட் கருவிகள், வீட்டினுள் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள டி.வி., ஆடம்பரப் பொருள்கள், வெளிப்புற கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள் வயதான தாய், தந்தை, கடத்தல் பயத்தால் 10-ம் வகுப்போடு படிப்பு நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டாக வீட்டினுள் அடைபட்டுள்ள மகன் மகளுடன், சில இளைஞர்களின் பாதுகாப்புடன் மார்பிள் கற்களால் இழைக்கப்பட்ட தளத்தில் குஷன் சோபா செட், மென்மயிர் கம்பளம் விரிக்கப்பட்ட முற்றத்தில் அமர்ந்தவாறு அச்சத்துடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார் பாத்திமா நாச்சியார்.

பிரபல நகை மோசடி பேர்வழி கும்பகோணம் பாத்திமா கைது -சங்க்பரிவார கும்பல் பின்னணியா ?

மயிலாடுதுறையில் 6 ஆயிரம் பவுன் தங்க நகைகள் மோசடி: கைதான கணவன்–மனைவியிடம் போலீசார் விசாரணை

நாகப்பட்டினம்,நவம்பர் 18: தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன்அன்சாரி (வயது 47). இவருடைய மனைவி பாத்திமா (40).
இவர்கள் தங்க நகைகளை கொடுத்தால் மாதந்தோறும் பணம் தருவதாகவும், ஒரு பவுனுக்கு ரூ.ஆயிரம் தருவதாகவும், கேட்கும் நேரத்தில் தங்க நகைகளை பணத்துடன் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறி தொழில் நடத்தி வந்தனர். இவர்கள் கூறியதை உண்மை என நம்பிய மயிலாடுதுறை கிளியனூர், வடகரை, சிதம்பரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தங்களுடைய தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்தனர்.

முதலில் பெண்களிடம் தங்க நகைகளை வாங்கி அதை தனியார் வங்கிகள், பெரிய நிதி நிறுவனங்களில் அடகு வைத்து மாதந்தோறும் பணமாக கொடுக்கப்பட்டது. இதை நம்பி மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மேலும் பல பெண்கள் தமிமுன்அன்சாரி மற்றும் பாத்திமாவிடம் தங்க நகைகளை கொடுத்தனர்.
பின்னர் இருவரும் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் முகவர்களை நியமித்து தொழில் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் 10 ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்க நகைகளை கொடுத்த பெண்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து தமிமுன்அன்சாரி மற்றும் அவரது மனைவி பாத்திமாவிடம் கேட்டனர். அப்போது கணவன்–மனைவி இருவரும் தங்க நகைகளை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மயிலாடுதுறை பகுதிகளை சேர்ந்த பெண்கள் நாகை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் பாத்திமா தமிமுன்அன்சாரி ஆகியோர் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தது பற்றியும், பின்னர் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றியது பற்றியும் கூறி இருந்தனர். பின்னர் இதுதொடர்பாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தியிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று நகை மோசடி குறித்து புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து 10 ஆயிரம் பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக புகார் கூறப்பட்ட பாத்திமா சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது கணவர் தமிமுன்அன்சாரி கடத்தப்பட்டு விட்டதாக கூறி இருந்தார். இந்த புகார் மனு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மோசடி புகார் தொடர்பாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் இருந்த பாத்திமா, அவருடைய கணவர் தமிமுன்அன்சாரி ஆகியோரை நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நாகைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடந்தது. விசாரணையில் தமிமுன் அன்சாரியும், பாத்திமாவும் சேர்ந்து மயிலாடுதுறை பகுதி பெண்களிடம் இருந்து 6 ஆயிரத்து 184 பவுன் நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

துபாயில் ரூம் இன்சார்ஜுகள் எப்படி இருப்பார்கள் ?ஒரு சுவாரஸ்யமான தகவல்கள் :

துபாயில் ரூம் இன்ச்சார்ஜிகள் எப்படி இருப்பார்கள் என்று துபாய் வாழ் நண்பர்கள் நன்கு அறிந்து இருப்பார்கள் அறியாதவர்களுக்கு அது பற்றிய சில சுவாரசியமான ஒரு பதிவு
துபாயில் ரூம் இன்ஜார்ஜிகள் :-
1.அடுத்தவன் பணத்தில் ரூம் வாடகை கழிப்பார்கள்
2.ரூம்பில் அவர் படுக்கும் போது மட்டும் ஏசி எப்போதும் ஆன் செய்து இருக்கும்
3.ரூம்பில் உள்ள சின்ன சின்ன வேலைகளை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பார் அவர் ஒரு வேலையும் செய்ய மாட்டார்
3.ரூம்பில் முக்கிய இடத்தில் அவருக்கு படுக்கையே வசதியாக அமைத்து கொள்ளுவார்
4.எப்போதும் டிவி ரிமோட்டை அவர் மட்டும் தான் வைத்து இருப்பார் . அவர் விரும்பும் நிகழ்ச்சிகளை தான் மற்றவர்களும் பார்க்க வேண்டும்
5.அவர் படுக்கும் போது மட்டும் FAN அதிகபடுத்தி இருப்பார்
6.அனைவரின் பணத்தில் ஓசி சாப்பாடு சாப்பிட்டு கொண்டு அவர் விரும்பும் சமையல் மட்டும் செய்ய சொல்லுவார்
7.தண்ணீர் கேன் அவருடைய பக்கத்திலேயே வைத்து இருப்பார்
8.அனைவரும் அவர்களுடைய துணிகளை ஆண்கரில் மாட்ட தக்காளி அவர் மட்டும் தனி பிரோ வைத்து இருப்பார்
இப்படி மோசமான ரூம் இஞ்சார்ஜிகளும் இருக்கிறார்கள் துபாயில் …
இப்படி உள்ள நண்பர்கள் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து உங்களுடைய நடவடிக்கையை மாற்றி கொள்ளுங்கள், யாரும் யாருக்கும் எங்கும் எப்போது அடிமை இல்லை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)