முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பொது மக்களை கஷ்டங்களுக்கு உட்படுத்தும் HP சிலிண்டர் நிறுவனம்!!!





முத்துப்பேட்டை ஆகஸ்ட் 20 : (Exclusive Muthupettai Express)திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சுமார் 75 ஆயிரம் மக்கள்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் முஸ்லிம்களே வசிப்பது யாவரும் அறிந்ததே. எனினும் முத்துப்பேட்டை மக்கள் மாதம் ஒரு முறை சிலிண்டர் (கேஸ்) வாங்குவதற்கு பல மணி நேரம் வெவ்வேறு இடங்களிலிருந்தும் வந்து காத்து கிடப்பது மிகப்பெரிய ஓர் துயரமாகத்தான் இருக்கிறது. எனினும் பக்கத்து ஊருகலான அதிராம்பட்டினம், திருத்துறைப் பூண்டி, பட்டுக்கோட்டை, நாட்சிகுலம், மதுக்கூர் இன்னும் பல்வேறு முஸ்லிம்கள் வசிக்க கூடிய இடங்களில் வீடு வீடாக சென்று சிலிண்டரை விநியோகம் செய்யும் இந்த "HP கேஸ் நிறுவனம்" ஏன் முத்துப்பேட்டையில் மட்டும் செய்வதில்லை. இது குறித்து "முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்" பொது மக்களிடம் கேட்டபோது அம்மக்கள் கூறும் பதில். இதில் பெண்களாகிய நாங்கள் மிகவும் சிரமத்திற்கும், கஷ்டத்திற்கும் ஆளாகிறோம். பொதுவாக முத்துப்பேட்டை பகுதிகளுக்கு சிலிண்டர் வந்தால் வீட்டில் யாரும் ஆட்கள் இல்லாதபோது வெளியில் உள்ள ஆட்களிடம் வாங்கி கேட்டல் அதற்கு அவர்கள் 50 ரூபாய், அல்லது 100 ரூபாய் , தாருங்கள் என்று கேட்கின்றனர். அனால் ஒரு சிலிண்டரின் விலை தற்போது 430 இப்படி இருக்கும் நிலையில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எனவே வீடு வீடாக சென்று சிலிண்டரை விநியோகம் செய்ய வேண்டும். ஆண்கள் வியாபாரம் செய்யும் நேரத்தில் வியாபாரத்தை போட்டுவிட்டு வரக்கூடிய மிக மோசமான சூழ்நிலைதான் இந்த முத்துப்பேட்டையில் அரங்கேறி வருகின்றது. ஏன் இந்த நிலை? இதற்க்கு நிரந்தர தீர்வுதான் என்ன? அரசியல் வாதிகளின் சதியா? அல்லது அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியா? பொறுந்திருந்து பாப்போம் இதற்கு விடை கிடைக்குமா என்று?

தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.



0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)