முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஈராக்கில் அண்டை நாடுகள் தலையிடக்கூடாது: ஒபாமா கூறுகிறார்


வாஷிங்டன்,டிசம்பர் 14 : பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்துகொண்டு ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் உள்விவகாரங்களில் முற்றிலும் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நாடு அமெரிக்கா. இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமா, சாத்தான் ஓதும் வேதம்போல ஈராக்கின் வளர்ச்சியில் அண்டை நாடுகள் தலையிடக்கூடாது என உபதேசம் செய்துள்ளார்.ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்கள் சந்தித்த ஒபாமா, ஈராக்கில் இருந்து அமெரிக்கா இம்மாதம் முற்றிலும் வாபஸ் பெறும் என்றும், இது வரலாற்று நிமிடமாகும் என அவர் தெரிவித்தார்.அதேசமயம், ஈரானை மறைமுகமாக சுட்டிக்காட்டித்தான் ஒபாமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என ஊடகங்கள் கூறுகின்றன.ஈரான் பிரதிநிதிகளும், ஈராக் அதிகாரிகளும் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையும், 1980-ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை இருநாடுகளும் பரிமாறிக்கொள்ள தீர்மானித்ததும் அமெரிக்காவை கவலை அடைய செய்துள்ளது.எதிர்காலத்திலும் ஈராக்கிற்கு உதவி வழங்கப்படும் என்ற ஒபாமாவின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்த மாலிகி, சிரியா விவகாரத்தில் ஒபாமாவின் கருத்திற்கு மாறுபட்டார்.சிரியாவின் விவகாரத்தை சமாதானமாக பரிசீலிக்க வேண்டும். பிரிவினை மோதல் ஈராக்கில் படர்ந்துவிடுமோ என அஞ்சுவதாக மாலிகி தெரிவித்தார். அரசியல், வர்த்தகம், கல்வி, இயற்கை வளங்களை தோண்டுதல் ஆகிய தேவைகளுக்கு வெளிநாட்டு வல்லுநர்களின் உதவி ஈராக்கிற்கு தேவை என மாலிகி தெரிவித்தார்.ஈராக்கில் கொல்லப்பட்ட 4500 அமெரிக்க ராணுவத்தினரை அடக்கம் செய்துள்ள ஆர்லிங்டன் நேசனல் கல்லறையில் ஒபாமாவும், மாலிகியும் பூங்கொத்து வைத்தனர்.அமெரிக்காவின் ஒன்பது வருட ஈராக் ஆக்கிரமிப்பில் 115000 ஈராக் மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS.அப்துல் பாரி , EK .முனவ்வர் கான்,அபு மர்வா

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)