முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

புஷ்ஷை கைது செய்ய ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆம்னஸ்டி கோரிக்கை


லண்டன்,டிசம்பர் 04 : மனித உரிமை மீறல்களை நடத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷை கைதுச்செய்ய ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, தான்சானியா, ஜாம்பியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கோரிக்கை விடுத்துள்ளது.புஷ் இம்மாதம் அந்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வருகையில் கைது செய்யவேண்டும் என ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக புஷ் பதவி வகித்த வேளையில் மனித உரிமை மீறல்களுக்கு தலைமை வகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் இக்கோரிக்கையை ஆம்னஸ்டி விடுத்துள்ளது.கொடுமைகளுக்கு தலைமை வகித்தவர்கள் சுதந்திரமாக நடமாடுவது சர்வதேச சட்டங்களுக்கு உகந்தது அல்ல. ஆதலால் புஷ்ஷை கைது செய்வதற்கான பொறுப்பை ஆப்பிரிக்க நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என ஆம்னஸ்டியின் சட்ட ஆலோசகர் மாட் பொல்லார்ட் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.முகத்தை துணியால் கட்டிவிட்டு கைதிகளின் முகத்தில் தண்ணீரை அடிக்கும் வாட்டர் போர்டிங் போன்ற சித்திரவதைகளை செய்வதற்கு புஷ் தலைமை தாங்கியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தால் ஜார்ஜ் w புஷ் இவ்வருடம் சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்துச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நிருபர்

சித்திக் ரஹ்மான் - (லண்டன்)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)