முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் மாணவர்களுக்காக நடைபெற்ற ஒரு நாள் இஸ்திமா...


முத்துப்பேட்டை, ஜனவரி 16 : முத்துப்பேட்டை புதுப் பள்ளிவாசலில் சுன்னத்துல் வல் ஜாமாத் சார்பில் நேற்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஒழுக்க பயிற்சி நடைபெற்றது.இதில் ஜமால் முஹம்மது கல்லூரி (திருச்சி), புதுக் கல்லூரி (சென்னை), காதர் முஹைதீன் கல்லூரி (அதிரை), தானிஸ் அஹமது கல்லூரி (சென்னை), கிரசன்ட் கல்லூரி (வண்டலூர்) ஆகிய கல்லூரிகலிளிருது உள்ள மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சுமார் 250 ௦ - க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு அவரவர்களின் அறிவுரிகளை வெளிபடுத்தினார்கள். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அடிராம்பட்டினத்தை சேர்ந்த மவுலான செக்கரியா அவர்கள், மாணவர்களாகிய நீங்கள் ஒழுக்கத்தை பேணவேண்டும் என்றும் ஒழுக்காம்தான் மாணவர்களுக்கு முக்கிய ஆய்தம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் தங்களுடைய தாய், தந்தையர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்யவேண்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் இதில் கலந்து கொண்ட மாணவர்களிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த மாணவர்கள் இது போன்ற நிகழ்சிகளை ஒவ்வொரு ஊர்களிலும் நடத்த வேண்டும் என்றும் இதன் மூலம் மாணவர்களாகிய நாங்கள் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்வதற்கு இது போன்ற நிகழ்சிகள் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

TR .அப்துல் ரஹ்மான், S .அப்துல் ரஹ்மான்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)