முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தனியார் மையமாகும் தமிழக அரசு பேருந்துகள்...!!!


சென்னை,ஜனவரி 30 : தமிழகம் முழுவதும் பேருந்து போக்கு வரத்து இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் தனியார் வசமே இருந்தது. தி.மு.க. ஆட்சி காலத்தில் பேருந்து போக்கு வரத்து அரசுடைமையாக்கப்பட்டு தனியார் முதலாளிகளை ஓயா வைத்தது.ஆனால், போக்குவரத்தின் அத்தியாவாசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும், உலக சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்புக் குரைவாலும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சில்லரைக்கசுகள் அளவிலேயே பேருந்து பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால், போக்குவரத்துக் கழகம் நிறைந்த லாபம் ஈட்டும் துறையாக மாறியதும் அரசியல் அங்கே சதிராட்டம் போட, அதிகாரிகளும் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டதோடு கூட்டுக்கொல்லைகலையும் நிகழ்த்தினர்.எல்லாம் போக தற்போது முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதா மக்கள் எப்படியிருந்தாலும் பயனித்துதானே ஆகா வேண்டும் என்ற அசைக்க முடியாத எண்ணத்தில் பேருந்து பயணக்கட்டணத்தை எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்த்தினார், காரணம் அரசுக்கு நட்டமாம். இதையெல்லாம் விட தொடர்ந்து அரசுக்கு நட்டம் ஏற்படுவதால், அரசுப் பேருந்து வழித்தடங்களில் 45 சதவிகிதத்தை தனியாரிடம் கொடுக்கலாமா என்று தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த ரகசிய ஆலோசனை விவரத்தை தி.மு.க.வின் தொழிற்சங்கமான 'தொழிலாளர் முன்னேற்றக் கழகப் பேரவை' தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளின் தகவல் பலகைகளில் எழுதி வெளி உலகிற்கு சொல்லியது. சென்னை போக்குவரத்து கழகத்தில் 3 ,140 பேருந்துகள், மாவட்டங்களில் உள்ள நகரப் பேருந்துகள் 6 ,595 பேருந்துகள், மாவட்டப் பேருந்துகள் 8 ,007 , விரைவுபேருந்து மாநிலத்திற்குள் 545, மாநிலத்திற்கு வெளியே 359 , மலை சர்விஸ் 521 ஆகா மொத்தம் 19 ,167 அரசுப் பேருந்து வழித்தடங்கள் உள்ளன. இதில் 45 சதவீதம் அரசு பேருந்து வழித்தடங்களை, அதாவது ௯,௫௦௦ அரசுப் பேருந்து வழித்தடங்களை தனியார் வசம் கொடுக்கப்படும். இதில் 6 ,000 வழித்தடங்கள் அரசுக்கு லாபம் தரும் வழித்தடங்களும் அடங்கும். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செயலாளர் நடராசன் உண்மைதான் 45 சதவீத அரசுப் பேருந்து வழித்தடங்களை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளது என்றார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அறிய போக்குவரத்துத்துறை செயலர் பிரபாகரன்ராவ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு தலைவர் மீட்டிங்கில் இருக்கிறார், தலைவர் செயலரை பார்க்கபோயிருக்கிறார், என்று அவருடைய உதவியாளர் பதிலுரைத்தனர். ஆனால் அவர் அலுவலகத்தில் தான் இருந்தார், கடைசிவரை செயலருடன் பேச இணைப்புக் கொடுக்க வில்லை. ஆகா, அரசுப் பேருந்து தனியார் வசம் என்னும் விவகாரம் ஆலோசனை அளவிலேயே தற்போது இருக்கிறது என்பது உறுதியாகிறது. இந்த ஆலோசனையே முடிவாக உறுதியாகுமானால் தமிழக மக்கள் போக்குவரத்துச் சங்க தொழிலார்கள் தொடர்ந்து போராட்டத்தில் இறங்குவது தவிர்க்க முடியாததாகி விடும்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)