முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லிம்களுக்கு மத்தியில் தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தகோரி PFI யின் மாபெரும் ஆர்பாட்டம்




சென்னை, ஏப்ரல் 12 : முஸ்லிம்களுக்கு மத்தியில் தனி இட ஒதுக்கீடு ! மாநிலத்தில் 7 சதவீத இட ஒதிக்கீட்டை அமல்படுத்தகோரி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் வருகிற 22 ஆம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் நடத்த உள்ளதாக தீர்மானித்துள்ளது என்று PFI யின் தமிழ் மாநில தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அறிவிப்பு. இது குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டியளித்தது பின் வருமாறு. இந்தியா முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு நிலைப் பற்றி அறிய மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு நீதிபதி இராஜேந்திர சச்சார் தலைமையில் கமிசன் ஒன்றை நியமித்தது. இவ்வறிக்கையை கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த கமிசன் மத்திய அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவில் அவர்களின் விகிதாசாரத்தை காட்டிலும் மிகவும் கீழான நிலையில் இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் முஸ்லிம்கள் தலித்கள், மலைவாழ் மக்களை விடவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை படம்பிடித்துக் காட்டியது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13 .4 % முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆனால்
ஐ.ஏ.எஸ். பணியில் முஸ்லிம்கள் 3 சதவிகிதமும்,
பட்டப்படிப்பு படித்தவர்கள் 3 சதவிகிதமும்,
ரயில்வே துறையில் 4 .5 சதவிகிதமும், (அதில் 98 .7 % பேர் கடைநிலை ஊழியர்கள்) இருந்து வருகின்றனர்.
25 .2 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய மேற்கு வங்கத்தில் முஸ்லிம் அரசு ஊழியர்கள் 4 .7 சதவிதம் ஆவார்கள்.
25 .2 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய உ.பி.யில் அரசு ஊழியர்கள் 7 .5 சதவிகிதம் ஆவார்கள். என்று முஸ்லிம்களின் அவல நிலையை பட்டியலிட்டது சச்சார் கமிசன். இதனைத்தொடர்ந்து 2007 ல் மற்றொரு கமிசனான நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக இன்ருக்கின்றது, இந்நிலை மாற முஸ்லிம்களுக்கு ௧௦ சதவிகிதம் தனி இடஒதிக்கீடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்திருந்தது.
நீதிபதி சச்சார் கமிசன் இந்திய சமூகங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு எனும் நோயைக் கண்டறிந்தது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசனோ அந்நோய்க்காண நிவாரணம் இட ஒதிக்கீடுதான் என்றது. இந்த வரலாற்று அடிப்படையின் பின்னணியில்தான் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவிகிதம் தனி இடஒதிக்கீடு வழங்க வேண்டும், தமிழ் நாட்டில் 3 .5 சதவிகித இடஒதிக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் நடத்த உள்ளதாக தீர்மானித்துள்ளது என்று PFI யின் தமிழ் மாநில தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தெரிவித்துள்ளார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

அப்துல் ரசாக் (சென்னை)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)