முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது..!




முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக கலை இலக்கிய நிகழ்வு விடிய விடிய நடைபெற்றது. முன்னதாக மண்ணை சாலை ரயில்வே கேட்டிலிருந்து மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இச்சங்கத்தின் நிர்வாகி டாக்டர். கே. இளங்கோ தலைமை வகித்தார். இச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் திரு.கே.வி.ராஜேந்திரன், சி.பி.எம்.நகர செயலாளர் ஏ. காளிமுத்து, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச் செயாளர் ஆர்.எஸ்.ராமநாதன், காங்.பிரமுகர் நா.ஜீவானந்தம், உள்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். அப்போது ஊர்வலமாக குமரன் பஜார், பழைய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக ஆசாத் நகர் பழைய பேருந்து நிலையம் சென்று விழா மேடையை அடைந்தனர்.மேலும் இதில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் தஞ்சை ஜான் பீட்டரின் தப்பாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் ஆகியதும் நடைபெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKLT.அப்துல் ரஹ்மான்,

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)