சென்னை, செப்டம்பர் 18: முஹம்மது நபியை கேலிசெய்து சினிமா வெளியிட்ட யூதனைக் கண்டித்து சென்னை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட அண்ணாசாலையில் ஜமாதுல் உலமா, SDPI , TMMK . INTJ , ஜமாத்தே இஸ்லாமி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், INL , சுன்னத்துல் ஜமாஅத், ஜாமியத்துள் உலமா, முஸ்லிம் லீக், ஐக்கிய சமாதான பேரவை உள்பட 23 இயக்கங்கள் ஒன்று கூடி சாலைமறியலில் ஈடுபட்டு வந்தனர். இதில் போலிசாரால் இவற்றை கட்டுபடுத்த முடியாமல் திணறினர் மேலும், 23 இஸ்லாமிய அமைப்புகள் மீது தடியடி அடித்து மண்டைகள் உடைந்தது போராட்டகாரரகளை களைக்க போலீஸ் நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பதட்டநிலை அந்த பகுதியில் நிலவி வருவதால் மேலும் போலீஸ் அதிகமாக குவிக்கப்பட்டு சென்னை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்
வழக்கறிஞர் இல்யாஸ் (சென்னை)
தடையை மீறி பேரணி: ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment