SDPI கட்சியானது சமுகதீமைகளுக்கு எதிராய் போராடக்கூடிய ஒரு மக்கள் இயக்கமாகும் .மது என்பதுசமூகத்தை வலிகெடுக்க கூடிய ஒரு கொடிய அரக்கனாக உள்ளது . இன்றைய சூழ்நிலையை எடுத்து பார்த்தால், முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ,கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளிக்கூட மாணவர்கள் வரை, குறிப்பாக இளைய சமுதாயம் மதுவின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் ஒரு அவல நிலை இந்த தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது . ஒருபுறம் நலத்திட்டங்களை வழங்கிவரும் தமிழக அரசு ,மறுபுறம் வீதியெங்கும் மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை சீரழிக்கும் வேலைகளையும் செய்து வருகிறது .எனவேதான் தமிழக அரசின் கவனங்களை ஈர்க்கும் வகையில் ,பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரி இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டங்களை SDPI கட்சி நடத்தி வருகின்றது .
SDPI நடத்திய மது ஒழிப்பு போராட்டத்தை கண்ட அணைத்து அரசியல் கட்சிகளும் ,இன்று மதுவிற்கு எதிராய் வாய்திறக்க ஆரம்பித்துள்ளது .திருவாரூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக வருகிற 17 -10 -2012 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது .மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் மாவட்டத்திலிருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கிறார்கள் .இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார்கள் .
source from: www.muthupettaiexpress.com
சந்திப்பு : ஜே .ஷேக் பரீத்
0 comments:
Post a Comment