முத்துப்பேட்டை, அக்டோபர் 11: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சமூக பணியாற்றியவர் ஷேக்பரீத் .இவர் முத்துப்பேட்டையில் உள்ள மரைக்காயர் தெருவை சார்ந்தவர் .த .மு .மு .க .வில் ஆரம்ப காலத்தில் அடிப்படை உறுப்பினராக தனது அஸ்தி வாரத்தை துவக்கிய ஷேக்பரீத் பின்பு நகர செய்தி தொடர்பாளர் ,நகர மருத்துவ சேவை அணி செயலாளர், நகர துணை செயலாளர் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர், என்று படிப்படியாக உயரம் நோக்கி சென்றார் . பிறகு சிறிது காலம் இவர் சென்னையில் பணியாற்றிகொண்டிருக்கும்போது தென் சென்னை மாவட்ட மாணவரணி செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டார் . வின் தொலைக்காட்சியில் வளைகுடா செய்திபிரிவின் துணை ஆசிரியராக பணியாற்றியவர் . இளம் வயதிலேயே பத்திரிக்கை துறையில் ஆர்வம் கொண்ட இவர் த.மு.மு.க வின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான மக்கள் உரிமை ,மற்றும் வேறு சில பத்திரிக்கைகளிலும் ஆக்கங்கள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை எழுதி வந்தார் .
கடந்த சுனாமி பேரழிவின் போது நாகை ,கீச்சாங்குப்பம், நாகூர்,திருப்பட்டினம், காரைக்கால், போன்ற பாதிக்க பட்ட இடங்களில் மக்கள் பணியாற்றியவர். மதவாத, தேசவிரோத, பா.ஜ .க . இந்து முன்னணி, ஆர் .எஸ் .எஸ் போன்ற வகுப்புவாத சக்த்திகளை எதிர்ப்பதை தனது உயிர் மூச்சாய் கொண்டவர். முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக, கடந்த 8 ஆண்டுகளாய் சகோதரத்துவத்தை உண்டாகும் கைப்பந்து போட்டிகளை மாநில அளவில் நடத்தி அணைத்து சமுதாய மக்களின் கவனத்தை ஈர்த்தவர் .கடந்த ஆண்டு நடை பெற்ற விளையாட்டு போட்டியில் ,பா .ஜ .க .வில் மத்திய அமைச்சராக இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அறந்தாங்கி திருநாவுக்கரசரை அழைத்து வந்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியவர் .
கடந்த சுனாமி பேரழிவின் போது நாகை ,கீச்சாங்குப்பம், நாகூர்,திருப்பட்டினம், காரைக்கால், போன்ற பாதிக்க பட்ட இடங்களில் மக்கள் பணியாற்றியவர். மதவாத, தேசவிரோத, பா.ஜ .க . இந்து முன்னணி, ஆர் .எஸ் .எஸ் போன்ற வகுப்புவாத சக்த்திகளை எதிர்ப்பதை தனது உயிர் மூச்சாய் கொண்டவர். முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக, கடந்த 8 ஆண்டுகளாய் சகோதரத்துவத்தை உண்டாகும் கைப்பந்து போட்டிகளை மாநில அளவில் நடத்தி அணைத்து சமுதாய மக்களின் கவனத்தை ஈர்த்தவர் .கடந்த ஆண்டு நடை பெற்ற விளையாட்டு போட்டியில் ,பா .ஜ .க .வில் மத்திய அமைச்சராக இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அறந்தாங்கி திருநாவுக்கரசரை அழைத்து வந்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியவர் .
அறந்தாங்கி திருநாவுக்கரசர் முத்துப்பேட்டைக்கு இவர் நடத்திய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள வந்த போது ,இவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் சாலைமறியலில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது .
நமது நிருபர் : AKL. அப்துல் ரஹ்மான்
0 comments:
Post a Comment