முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் வி.சி பிரமுகரை வெட்டியவனை உடனே கைதுசெய். கிராம மக்கள் சுடுகாட்டில் போராட்டம்






முத்துப்பேட்டை, ஜூலை 11: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாட்டை சேர்ந்தவர் வெற்றி (32) இவர் திருவாரூர் மாவட்ட விடுதலைகச் சிறுத்தை கட்சியின் துணைச் செயலாளராக உள்ளார். கடந்த 5-ம் தேதி இரவு முத்துப்பேட்டையிலிருந்து வீட்டுக்கு திரும்பும்போது காரில் வந்த 7 பேரைக்கொண்ட மர்ம கும்பல் வெற்றியை சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த வெற்றி தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் எதிரொலியாக அன்றைய தினம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து போலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாத காவல் துறையை கண்டித்தும் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கோரியும் கம்மாளதெரு உட்பட 3 கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து,வீரப்பன், முருகானந்தம், சுந்தரி, வசந்தா, சரோஜா, முருகேஷ் உட்பட 30 குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்தினர். 

மேலும் சமையல் செய்தும் சாப்பிட்டனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய் துறையினரும், உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி ஈடுபட்டவர்களிடம் சுமூகம் ஏற்பட்டதால் போராட்டம் முடிவுற்றது. 


0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)