முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி- பா.ஜ.க. வினர் கைது



முத்துப்பேட்டை, ஜூலை 22: பா.ஜ.க. வின் மாநில பொதுச் செயலாளர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் என்பவர் கடந்த வெள்ளியன்று அவரின் அலுவலகத்திற்கு வெளியே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இந்த படுகொலையை கண்டித்து முத்துப்பேட்டையில் பா.ஜ.க. வினர் பஸ் றியலில் ஈடுபட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர்.  மனித சமூகத்தில் மனிதர்களின் உயிர் பலியிடப்படுவதை எந்த ஒரு மனித சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. இந்த கொலையை காட்டி இஸ்லாமியர்கள் மீது வீன் பலி போட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும். 

ஆடிட்டர் ரமேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருவதாக கூறப்படுகிறது. இப்படுகொலையின் பின்னணியில் தொழில் போட்டிகள் ஏதும் உள்ளனவா என விசாரிக்கப்பட வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுருக்கும் நிலையில் சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் இக்கொலையை "ஜிஹாதிகள்" தான் செய்தார்கள் என கற்பனையான ஒரு கருத்தை கூறி இரு சமுதாய மக்களிடையே மத மோதலை தூண்ட முயற்சி செய்து வருகிறார்கள். 

மேலும் ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து சேலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் மகளிரணி தலைவி ராஜ ராஜேஸ்வரி என்பவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையின் பின்னணியும், ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கும் நேரடி தொடர்புகள் உள்ளனவா என்று எண்ண தோன்றுகிறது. இந்த கொலைக்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருப்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. ஏனெனில் குஜராத்தில் பல்லாயிரக்கனக்கான மனித உயிர்கள் மிக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்டு நரபளியாக்கப்பட்டது இந்த மோடியின் ஆட்சியில் தான்.

எதுவாயினும் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாமியர்களின் கருத்தாகும். ஆனால் வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் மீது பலி போடுவதை R.S.S., பா.ஜ.க., இந்து முன்னணி போன்ற மதவாத சக்திகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு:

ஜே. ஷேக் பரீத்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)