முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அலையாத்திகாட்டை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும், அன்னை கல்லூரி மாணவர்கள் கோரிக்கை..


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 26: முத்துப்பேட்டை லகூன் தீவு பகுதியில் அமைந்து உள்ள அலையாத்தி காடு 12 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பசுமை நிறைந்து அமைந்துள்ளது. உலக நாடே வியக்கும் அளவுக்கு இயற்கை அழகு படைத்த இந்த அற்புத காட்டை காண ஏராளமான மக்கள் தினந்தோறும் வருவது இப்பகுதிக்கு பெருமையை சேர்ந்துள்ளது. இந்த காட்டில் பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து இதனின் பெருமையை உணர்த்தி வருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணம் கோவிலாச்சேரியில் உள்ள அன்னைக் கல்லூரியின் மாணவ, மானவில்கள் சுமார் 80 பேர் இந்த அலையாத்தி கட்டுக்கு வந்து கட்டை ஆய்வு செய்து கருத்தரங்கு நடத்தினர்.  


நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்லூரி முதல்வர் ஹிமாயூன் பேசுகையில்: இந்த முத்துபேட்டை அலையாத்தி கட்டின் சிறப்பை பற்றி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நமது கல்லூரி வருடாவருடம் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து செய்து வருறது. 1500 கிலோ மீட்டர் கடல் அலையை இந்த அலையாத்தி வேர் தாங்கி கொடுத்து 1 கிலோ மீட்டராக திருப்பி செலுத்தி அதன் வேர் வளைந்து கொடுக்கிற சிறப்பு இந்த அலையத்தி மரத்துக்கு இருப்பதனால்தான் இதற்க்கு இப்படி ஒரு பெயர். இதன் சிறப்பு பல ஆண்டாக வெளியில் தெரியாமல் இருந்தது. சுனாமி வந்த பிறகு தான் இதன் அடையாளம் உலக நாடுகளுக்கே தெரிந்துள்ளது. இந்த அடர்ந்த காட்டுக்கு அரியவகை மருத்துவகுண தாவரங்கள் வெளிநாடுகளிலிருந்து கடல் கடந்து பயணமாக அரியவகை பறவை சங்கமித்து அமர்ந்து இருக்கும் காட்சிகள் நிரந்த பகுதி. இதனை மத்திய மாநில அரசு பாதுகாக்க வேண்டும் என்றார். 


கல்லூரி பேராசிரியை சங்கீதா பேசுகையில்: தமிழ் நாட்டில் இப்படி ஒரு இடம் இருப்பது இங்கு வந்த பிறகுதான்  தெரிந்து கொண்டேன் என்றும், இங்கு உள்ள மீனவர்களை சந்தித்து கேட்கும்போது ஒவ்வொரு மீனவர்களும் இந்த காடுகளில் பாதுகாப்பாளராக இருக்கிறார்கள். இந்த காடு உலக அதிசயங்களின் ஒன்பதாவதாக நான் கருதுகிறேன் என்று அவர் தெரிவித்தார். 


மாணவி ராஜலெட்சுமி பேசுகையில்: எனது முதல் பயணம் இந்த லகூன் ஆகும், அதுவும் எனக்கு பெரிய அனுபவத்தை கத்து கொடுத்ததாக நான் கருதுகிறேன். எனது சகோதரர் துபாயில் கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு அதிசயத்தை என்னிடம் கூறினார். இந்த அதிசத்தை எனது குடும்பத்தாரிடம் சொல்வேன். பாத்தாயிரம் செலவு செய்து போனாலும் இது போன்ற இடத்தை பார்க்க முடியாது. இவ்வளவு ஈசியாக இந்த அதிசய அலையாத்தி காட்டை பார்க்க வைப்பு தந்த கல்லூரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். 


மாணவி ஜமுனாராணி பேசுகையில்: தண்ணீர் மீது நின்று டைவ் அடிக்கும் பறவைகளை காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்றும், இதில் பூநாரை, செங்கல்நாரை, பாம்புதாரா கூல்கிட் போன்ற ஆயிரம் பறவைகளும் சுதந்திரமாக இருக்க ஏற்ற இடம் இதுதான் என்றும், மக்கள் நல்ல சந்தோசமாக இருக்க போதுமான இடம் தான் இது என்றும், அதே சமயத்தில் இப்பகுதியை பாதுகாக்கவும் அக்கறை வேண்டும் என்றும் இவர் தெரிவித்தார். 



இறுதியாக கருத்தரங்கில் காடுகளை மேம்படுத்த வறண்ட பகுதியில் செடிகள் நட்டு வளர்க்க வேண்டும், காடுகள் அழியாமல் பாதுகாக்க வனத்துறை கடுமையான சோதனையில் ஈடுபட வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக பயணத்துக்கு அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் படகு விட வேண்டும். பறவைகள் வந்துபோக வசதிகள் செய்ய வேண்டும். மத்திய அரசு அதிசயங்கள் நிறைந்த இந்த அலையத்தி காட்டை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன. 


நமது நிருபர்: முஹைதீன் பிச்சை 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)