முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கலவரத்திற்கு காவல்துறைதான் காரணம்.! முத்துப்பேட்டையில் த.மு.மு.க. தலைவர் பேட்டி...







முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் பா.ஜ.க. வினருக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட மோதலால் பெரும் கலவரம் வெடித்தது. கடைகள் போலிஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தினர் இந்த சம்பம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பானது. இந்த நிலையில் முத்துப்பேட்டை கலவரப்  பகுதியை பார்வையிடவும் மக்களை சந்திக்கவும் வந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவருமான ரிஃபாயி நிருபர்களிடம் கூறியதாவது. 

முப்பது நாட்கள் நோன்பு இருந்து அமைதியான முறையில் மிக சந்தோசமாக ரம்ஜானை கொண்டாடிக்கொண்டிருந்த வேலையில் முத்துப்பேட்டையில் சில விசமிகள் கலவர செயலை உருவாக்கி பெருநாளை நாசம் படுத்த்திவிட்டனர். அனைத்து தரப்பு மக்களும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் பா.ஜ.க. ரம்ஜானை சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கிவிட்டது. இதற்க்கு காவல்துறை உடந்தையாக செயல் பட்டிருக்கின்றன. அன்று நடந்த பா.ஜ.க. பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி இல்லை என்று காவல் துறை கூறுகிறார்கள். ஆனால் காவல்துறை பாதுகப்போடுதான் சட்டத்தை மீறிய செயல் நடந்துள்ளது. ரம்ஜான் முதல் நாள் மூன்று பேர் ஒரு பைக்கில் சென்ற முஸ்லிம்களை கைது செய்த போலிஸ் மறுநாள் பலபேர் மூன்று நபராக சென்றபோது ஏன் கைது செய்யவில்லை? டி.எஸ்.பி. பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகிய இருவரும் நினைத்து இருந்தால் இந்த கலவரத்தை தடுத்து இருக்கலாம். பிரச்சனைக்கு உரிய பகுதியில் முன்கூட்டியே பாதுகாப்பு போட்டு இருக்கலாம்.

இவர்கள் பா.ஜ.க. வின் முருகானந்தத்திர்க்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள். காவலர் இவர்கள் செய்த சதிதான் கலவரத்தில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம் 160 பேர் மீது வழக்கும் பா.ஜ.க வின் 50 பேர் மீது வழக்கு ஒருதலை பட்சமாக காவல்துறை செய்து இருக்கிறது. போட்டி ஊர்வலம் சென்றதை கட்டிக்கிறேன். அந்த அளவுக்கு ஏன்? காவல்துறை இடமளிக்கிறது? ரம்ஜான் தொழுகை புனிதமான ஒன்று அதனை கூட காவல்துறை வீடியோ எடுத்து கலவரத்தை தூண்டுகிறது. 

டி.எஸ்.பி. பாஸ்கரன் தொடர்ந்து முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். இவரைப்பற்றி உயர் அதிகாரி கவனத்திற்கு கொண்டு சேர்க்க இருக்கிறோம். என்றும் தனது பேட்டியில் கூறினார். ஒரு பிரச்சனை என்றால் வியாபாரிகள் மத்தியில் மிகப்பெரிய அச்சமாக இருந்து வருகிறது. அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்பொழுது காவல்துறை செயல்பாடுகளை பார்த்தல் அடுத்த மாதம் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தில் கலவரத்தை ஏற்படுத்தி ஊரில் அமைதியை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி இருப்பது போல்தேருகிறது. இனிவரும் காலங்களில் காவல்துறை ஒருதலைமட்சமாக நடந்து நியாயமான நடவடிக்கைக்கு தவறும் பட்சத்தில் இளைஞர்களே சட்டத்தை கையில் எடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்  என்றும் மேலும் தமது பேட்டியில் ரிஃபாயி இவ்வாறு தெரிவித்தார். 

நன்றி: MUTHUPETTAI  TMMK 


0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)