முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அடுத்து தம்பிக்கோட்டையை சேர்ந்த மாணவன் ஆற்றில் மூழ்கி பலி.


முத்துப்பேட்டை, செப்டம்பர் 12: முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தை சேர்ந்த அய்யா கணபதி. இவரது மகன் முருகேஷ் குமார் (14). இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் முகேஷ்குமார் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். மாலை நேரத்தில் செம்படவான்காடு பாமணியாற்றில் நண்பர்களுடன் குளித்த போது ஆற்றின் நீரால் முகேஷ்குமார் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது முகேஷ்குமார் நீரில் மூழ்கி பலியானார். 

பின்னர் முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் பலமணிநேரம் போராடி முகேஷ்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் முகேச்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மாணவன் முகேஷ்குமார் பலியான சம்பவத்தால் நேற்று அவர் படித்த தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி ஒரு நாள் விடுமுறையளித்துள்ளது. 

தொகுப்பு:  A.K.L.T. அப்துல் ரஹ்மான். BBA.  

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)