முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

டென்டருக்கான செட்யூல் காப்பி கேட்டு அதிமுக ஒப்பந்தக்காரர் ரகளை. முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் பரபரப்பு.


முத்துப்பேட்டை, டிசம்பர் 28: முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் நேற்று மங்களுர் கிராமத்தில் சாலைப்பணி 9.56 லட்சம் பொது நிதியலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் டென்டர் செட்யூல் வாங்கப்பட்டது. அப்பொழுது தம்பிக்கோட்டை கூடடுறவு வங்கி தலைவரும் அதிமுக பிரமுகரும் ஒப்பந்தக்காரருமான நாராயணசாமி நேற்று முன்தினம் அந்தப் பணிக்காக ரூ.3120-யும் அர்ச்சுணன் என்ற பெயரில் அந்தப் பணிக்கு 3120-ம் செட்யூல் தொகை கட்டியிருந்தார். நேற்று செட்யூல் காப்பி வாங்கும் நாள் என்பதால் அதிமுக ஒப்பந்தக்காரர் நாராயணசாமி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து மேலாளர் பாலசுப்ரமணியத்திடம் நான் பணம் கட்டியதற்கான மேற்கண்ட பணியின் செட்யூல் காப்பி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு மேலாளர் பாலசுப்ரமணியன் ஆணையர் யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கார். அதனால் ஆணையரிடம் கேட்டுத்தான் தரமுடியும் என்று கூறினார்.

 இதனால் ஆத்திரமடைந்த நாராயணசாமி தரமுடியுமா முடியாதா? என்றும் தரமாட்டேன் என்று எழுதிக் கொடுங்கள் என்றும் ரகளை செய்து தர்னாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு ஒன்றியக்குழ தலைவர் நடராஜன் ஒன்றியக்கவுன்சிலர் ஜெகன் ஆகியோர் நாராயணசாமியை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து ஒப்பந்தக்காரர் நாராயணசாமி கூறுகையில் முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகம் மூலம் நடைபெறும் பணிகளை செய்ய முறைப்படி ஒப்பந்தக்காரருக்கு வழங்காமல் ஆணையர் தன்னிச்சையாக முடிவு செய்து அவருக்கு வேண்டப்பட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்குகிறார். புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த ஆணையரின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)