முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சென்னையில் உதயமானது மறுமலர்ச்சி தமுமுக ----தமுமுக விலிரிந்து பிரிந்து சென்றவர்களின் புதிய முயற்சி !!!
















மறுமலர்ச்சி தமுமுக என்ற புதிய  இஸ்லாமிய அமைப்பின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது .இதில் தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி செயலாளரும் வழக்கறிஞருமான காஞ்சி .ஜைனுலாபிதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில துணை தலைவர் கேப்டன் அமீருதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் பாஷா ,   தமுமுக வின் முன்னாள் மாநில உலமா அணி செயலாளர் யூசுப் எஸ் .பி ,  தமுமுக வின் முன்னாள் தலைமை நிலைய செயலாளர் திருவள்ளூர்  இஸ்மாயீல்,தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் புளியங்குடி செய்யதலி ,தமுமுக வின் முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர் .இதில் வெள்ளை கருப்பு வெள்ளை நிறத்திலான மூவர்ண கொடியை மறுமலர்ச்சி தமுமுக வின் அமைப்பாளர் வழக்கறிஞர் காஞ்சி ஜைனுலாபிதீன் அறிமுகம் செய்து வைத்தார் .

பின்னர் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்த வழக்கறிஞர் ஜைனுலாபிதீன் , இரத்தம் சிந்தி உழைத்த தொண்டர்களை தமுமுக தலைமை அவமதிப்பதாக குற்றம் சாட்டினார் .தாம் தொடங்கியுள்ள இந்த இயக்கம் சமூக ஒற்றுமைக்காகவும் ,மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் செயல்பட போவதாகவும்  கூறினார் .மேலும் இந்த அமைப்பிற்கு தமுமுகவின் முன்னாள் துணை தலைவர் விஞ்ஞானி அப்துல் ஜலீல் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஜைனுலாபிதீன் தெரிவித்தார் .

தகவல் .ஜே .ஷேக் பரீத் .


0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)