முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இந்தியாவில் எந்த பள்ளிசாலிலும் பாங்கு சொல்லக் கூடாது – ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள் ஆர்ப்பாட்டம்! ,


இந்தியாவில் பஜ்ர் தொழுகைக்கு சொல்லப்படும் பாங்கை தடை செய்ய வேண்டும் கடந்த ஞர்யிறு அன்று ஹிந்துத்துவாவினர் மங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் 3 முறை தடை செய்யப்பட்ட பாசிச வெறிபிடித்த காவி இயக்கமான ஆர் எஸ் எஸ் ஆல் வழிநடத்தப்படும் மோடியின் பி.ஜே.பி கட்சி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து இஸ்லாமியர்கள் உலகமெங்கும் கடை பிடித்துவரும் தொழுகைக்கான பாங்கு சொல்வதை தடை செய்ய வேண்டும் என ஹிந்துத்துவாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மங்களூர் டெபுடி கமிஷனர் அலுவலகத்தில் சாமியார் ஒருவர் இந்தியாவில் காலை நேரத்தில் சொல்லப்படும் பஜ்ர் தொழுகைக்கான பாங்கு சொல்வதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தற்கொலை செய்யமுயற்சி செய்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஷ்ட்ரீய ஹிந்து மற்றும் ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பைச்சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.மோடி பதவியேற்கும் நாளுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
10325792_659437067437011_280045290944476463_n
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பைச்சார்ந்த விஜயலக்ஷ்மி என்ற பெண் கூறும் போது: “இந்தியா பல மதங்களை பின்பற்றுபவர்களை உள்ளடக்கியது இஸ்லாமியர்கள் காலையில் பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்கு ஓசையினால் பெரும்பான்மையான இந்து மக்களுக்கு தொல்லையாக உள்ளது எனவே இதை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்” என்றார்.
ராஷ்ட்ரீய ஹிந்து அன்டோலன் என்ற அமைப்பச்ச்சார்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நிறைய பள்ளிவாசல்கள் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அருகில் அமைந்துள்ளது. அதனால் அங்கு சொல்லப்படும் பாங்கினால் பள்ளிக்குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தொந்திரவு ஏற்படுகிறது அத்னால் இதை தடை செய்ய வேண்டும் என்றார்.
கடந்த ஜனவரி மாதம் பாரத் க்ரந்தி சேனாவின் தலைவன் பிரனவானந்தா சுவாமி கிரிஸ்தவர்களின் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி அரசாங்கத்தை வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது .
இச்சூழ்நிலையில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்கை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதில் ஸ்ரீ ராம் சேனா தலைவர் குமார் மலேமர் ஹிந்து யுவசேனா லீடர் நாகேஷ் பஜலேகரி மற்றும் பல ஹிந்துவாதிகள் இதில் கலந்து கொண்டனர்
இந்து முஸ்லிம் கிறிஸ்துவர்கள் என அனைவரும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய நாட்டில் அவர்களுக்கடையே பகை உணர்வை ஏற்படுத்தி மத கலவரங்களை உருவாக்க துடிக்கின்றர் இந்த ஹிந்துத்துவாவாதிகள்.
நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும். இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது போன்று முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் திபாவளியில் பட்டாசு வெடிப்பது போன்ற இந்துக்களின் மத சடங்குகள் குறித்து ஆர்ப்பாட்டம் செய்யலாம். அப்படி எந்த முஸ்லிமும் கிறிஸ்துரும் செய்வது கிடையாது.
இநதிய அரசியல் சாசன சட்டப்படி இந்திய நாட்டில் பிறந்த அனைவருக்கும் அவரவர் மத கடமைகளை நிறைவேற்றுவதற்கு முழு உரிமை உள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்ததும் தனது அடிவருடிகள் மூலம் முஸ்லிம்களின் அடிப்படை மத உரிமைகளை பரிக்க பார்க்கின்றார். இதற்காகத் தான் இவர் ஆட்சிக்கு வந்தாரா 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)