முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இஸ்லாத்திர்கும் தீவிரவாதத்திர்கும் தொடர்ப்பில்லை என்பதை வலியுறுத்தி ஜெர்மனின் அனைத்து சமூக மக்களும் ஒன்று திரண்டு நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பேரணி.


பிரான்ஸில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை முஸ்லிம் விரோதிகள் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்ப்பதர்கு கருவியாக பயன்படுத்திவரும் நிலையில்
ஜெர்மன் நாட்டை சார்ந்த அனைத்து மத மக்களும் ஒன்று திரண்டு பிரனாஸ் தாக்குதலுக்கும் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பதை வலியுறுத்தி கிழக்கு ஜெர்மனில் உள்ள டிரெஸ்டென் (DRESDEN) நகரில் மிக பெரிய பேரணி ஒன்றை நடத்தினர.

இந்த பேரணியில் கிருத்துவர்கள் யுதர்கள் முஸ்லிம்கள் என 35 ஆயிரம் பொது மக்கள் கலந்து கொண்டனர் இந்த பேரணி நடத்துவதர்கு உரிய அனைத்து உதவிகளையும் ஜெர்மன் அரசு முன் நின்று செய்தது பிரான்ஸ் தாக்குதலை இஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும் தொடர்ப்பு படுத்தும் ஊடகங்களுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்த அந்த பேரணி ஜெர்மனில் முஸ்லிமும் கிருத்துவரும் யுதரும் அண்ணன் தம்பிகளாகவே வாழ்கிறோம் எங்கள் ஒற்றுமையை எந்த சக்தியாலும் சிதைக்க முடியாது இதே ஒற்றுமையையும் சகிப்பு தன்மையும் உலகெங்கும் தழைத்து ஓங்க வேண்டும் என்ப போன்ற கருத்துகளை கொண்ட பதாகைகளை போராட்ட காரர்கள் கையில் ஏந்தி வந்தனர்.

பிரான்ஸ் பிரச்சனைக்காக உலகில் வேறு எங்கும் இது போன்ற ஒரு பேரணி நடத்த படாத நிலையில் ஜெர்மன் மக்கள் முந்தி கொண்டு உலகிர்கு வழி காட்டியிருக்கிறார்.
ஜெர்மன் மக்கள் தொடங்கி வைத்துள்ள இந்த ஒற்றுமை கோசம் உலகெங்கும் எதிரொலிக்கட்டும் அதன் பலனாய் உலக மக்களை அமைதி தென்றல் தாலாட்டடும்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)