முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நீண்டநாள் சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்தல் ..


நாகூர், பிப்ரவரி 03/2016: நாகை மாவட்டம் நாகூரில் (INTJ) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பொது கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் நாகூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் மூன்று முறை சந்தித்தபோதும் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இருக்கிறோம். நாங்கள்  கோரிக்கைகளில் வக்பு நிலம் மட்டும் 1200 கோடி ரூபாய்க்கு மீட்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் நமக்கு தெரிவித்தார்கள். அதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மற்ற கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அதிலும் சிறைவாசிகள் விசயத்தில் காலதாமதம் செய்யாமல் அரசு கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்;நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொரடா சாதிக் மற்றும் தமிம் அன்சாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையின் செயலை மிக வண்மையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து மாவட்ட காவல்துறைக்கு தவறான தகவலை அளிக்கும் உளவுதுறை அதிகாரிகள் கார்த்திகேயன், விஸ்வா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தினார்.

இப்பேட்டியின் போது மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி,நாகை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், நாகை மாவட்ட தலைவர் கப்பப்பா, மாவட்ட நிர்வாகிகள் ஜலால்,நாஜிம்,ஆசிக் மற்றும் நாகூர் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நன்றி 

யாசர் அரபாத் 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)