முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இந்த பள்ளிவாசல் திறந்த பிறகு இந்த தெருவில் வசிக்க கூடிய மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் பள்ளியை கண்ணியப்படுத்தும் விதமாக 5 வேலை தொழுகையை பேணி கடைப்பிடித்து வருமாறும், அல்லாஹ்வின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
இப்படிக்கு
லண்டனிலிருந்து:
1) G. ராசீக் பரீத்
2) G. அப்துல் மாலிக்
3) A. அஹ்மத் மைதீன் என்கிர ராஜா (லண்டன்)
4) தம்பி மரைக்காயர்
5) A. அப்துல் சுபகான்
6) முனைவர் அஹ்மத்
7) M. அஹமது இப்ராஹிம்
முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இந்த பள்ளிவாசல் திறந்த பிறகு இந்த தெருவில் வசிக்க கூடிய மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் பள்ளியை கண்ணியப்படுத்தும் விதமாக 5 வேலை தொழுகையை பேணி கடைப்பிடித்து வருமாறும், அல்லாஹ்வின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
இப்படிக்கு
முத்துப்பேட்டை SDPI நண்பர்கள் (துபாய்)
மற்றும் முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா இளைஞர் அணி (துபாய்)
முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இப்பள்ளி மூலம் மென்மேலும் நன்மக்களை உருவாக்கி நாம் அனைவரும் அல்லாஹ்வால் திருப்பதி அடைந்தவர்களாக நம்மை ஆக்கி மறுமையில் நாம் அனைவருக்கும் சொர்கத்தில் உயர்ந்த இடத்தை தந்தருள்வானாக.
இப்படிக்கு
M. சுதான் அப்துல் காதர் (துபாய்)
முத்துப்பேட்டை, ஜூன் 28: முத்துப்பேட்டையில் உள்ள ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா குறித்து நாங்கள் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் கண்டோம் மிகவும் சந்தோசம் அடைந்தோம். இது போன்ற பள்ளிகள் இல்லாத ஊர்களுக்கு பள்ளிவாசல் கட்ட வெளிநாட்டு வாழ் நண்பர்கள் ஒத்துழைப்பு தந்து உதவிகள் செய்ய முன்வர வேண்டும். இந்த பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சீரும், சிறப்புடனும் நடைபெற ஏக இறைவனான அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம். இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய வாழ்த்தும் அன்பு நெஞ்சகள்.
குவைத்திலிருந்து:
1) முஹம்மது ஜின்னா,
2) முஹம்மது ஷாபி,
3) முஹம்மது நசீர்,
4) முஹம்மது இஷாக்,
5) முஹம்மது ஹசன் (அதிரை)
6) முஹம்மது அஸ்ரப் (திருச்சி)
7) முஹம்மது ஹலீம்
முத்துப்பேட்டையிலிருந்து:
1) முஹம்மது இசாக் மற்றும் குடும்பத்தினர்
முத்துப்பேட்டை, ஜூன் 27: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனின் கிருபையால் இந்த பள்ளி எப்பொழுதும் அதிக மக்கள் தொழுகைக்கு கூடும் பள்ளியாக இருக்க வேண்டும் என்றும் இந்த பள்ளிக்கு நன்கொடை அளித்த நல்ல உள்ளகளுக்கும் ,பள்ளி வாசல் திறப்பு விழா நல்ல படியாக அமைய அல்லாஹ்விடம் தூஆ செய்கிறோம் .பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
M. Ahamed Kabeer (South Street) Muthupet
K. Ershath Ahamed "
S.Mohamed Faizal "
N. Habeeb Rahman "
K.Naina Mohamed "
M. Mohamed Azan "
M. Hameed Anshari "
S. Habeeb Rahman "
S. Azarudeen "
முத்துபேட்டை, ஜூன் 27: அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் இன்ஷா அல்லாஹ் நாளை (28.06.2013) அன்று ஆசாத் நகர் புதிய பள்ளிவாசால் திறப்பு விழாவினை www.muthupet.org, மற்றும் www.muthupettaiexpress.com ஆகிய இணையத்தளங்களில் கண்டு மகிழுங்கள், மேலும் இது குறித்த தங்களின் வாழ்த்துக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொகுப்பு:
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துப்பேட்டை ORG நிர்வாகத்தினர்
முத்துப்பேட்டை, ஜூன் 26 : நமதூர் ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு இஸ்லாமிய ஊர்களிலிருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு முறையில் முத்துப்பேட்டை நகர் முழுவதும் அற்புதமாக தோற்றத்தை தர வேண்டும் என்பதற்காக ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எல்லா பணிகளையும் அவரவர் பொறுப்பேற்று முழு முயற்சி உடன் முத்துப்பேட்டை நகரை அலங்கரித்து வருகின்றனர். அதில் பச்சை கொடி (தோரணம்) , ஊர் முழுவதும் டியூப் லைட், நிகழ்ச்சிக்கான ஸ்டேஜ், சுவர் விளம்பரம், வால் போஸ்ட் விளம்பரம் என பல்வேறு முறையில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகளிட்சி முடிவின் பொது சிறப்பு விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
www.muthupettaiexpress.com
நமது நிருபர்
MM. முஹமது பைசல், AKLT அப்துல் ரஹ்மான். BBA
முத்துப்பேட்டை, ஜூன் 26 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆசாத் நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டு வந்தன. இந்த பள்ளி வாயில் வருகின்ற ஹிஜ்ரி - 1434 ஷாஃபான் மாதம் 18 ஆம் தேதி அன்று அதாவது ஆங்கில மாதத்தின் கணக்குப் படி 28 .06 .2013 ஆம் தேதியன்று திறப்பதாக பள்ளியின் நிர்வாகத்தினர் முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள். பள்ளி வாசல் திறப்பு விலாவிர்க்கு மிகவும் மும்புரமாக பணிகள் நடைபெற்று வருகிறது, அவற்றின் சில புகைப்படங்களை இங்கு காண்போம்.
தொகுப்பு:
தமீம் அன்சாரி (புதிய காளியம்மன் கோவில் தெரு)
முத்துப்பேட்டை, ஜூன் 25: முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் 2013 - 2014 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சிதம்பரம் ராமஜெயம் திருமண மண்டதில் நடைபெற்றது. இதற்க்கு தலைவராக. Rtn.PHF. நெய்னா முகம்மது அவர்களும், செயலாளராக:Rtn.ராமலிங்கம் அவர்களும் பொருளாளர் :Rtn.பிரசாத் அவர்களும், இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர் Rtn.PHF.PT. மதியழகன்,மாவட்ட தலைவர், Rtn.MPHF.C.கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட தலைவர்
சிறப்பு விருந்திரனாக: Rtn.MPHF.A.மணி,மாவட்ட தலைவர்,சங்க நிர்வாகம், Rtn.PHF.G. வேதசகாயம், மண்டல 18யின் துணை ஆளுநர்..
நமது நிருபர்:
M.M பைசல்.அஹமது.BBA


சென்னை, ஜூன் 22: குவைத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு தமிழர்களை விடுவிக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்டு வரும் முயற்சிகளை விளக்கும் வகையில் இன்று (22.06.2013) பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.
இச்சந்திப்பில் பேசிய ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், “குவைத் நாட்டில், 2008ம் ஆண்டு நடந்த கொலைச் சம்பவத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழகத்தை சோர்ந்த முத்துப்பேட்டை சுரேஷ் மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த காளிதாஸ் ஆகியோருக்கு கடந்த 17.06.2013 அன்று தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்திருந்தது குவைத் அரசு.
குவைத்தில் பணியாற்றி வந்த இலங்கை அனுராதபுரத்தைச் சேர்ந்த சித்திக் மசூதா என்ற பெண்ணை கொலை செய்துவிட்டார்கள் என்பது தான் மேற்கண்ட இருவர் மீதான குற்றச்சாட்டு.
இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் தகவல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு அதன் குவைத் கிளை அமைப்பினர் மூலமாக தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட சித்திக் மசூதாவின் குடும்பத்தினர் கடந்த 2010ம் ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை (Blood Money) இலங்கை ரூபாய் தலா 6 லட்சம் என சுரேஷ் மற்றும் காளிதாஸ் தரப்பில் இருந்து மொத்தம் 12 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு இருவரையும் மனப்பூர்வமாக மன்னித்துவிட்டனர்.
இதற்கான அதிகாரபூர்வமான ஆவணங்களை இலங்கையிலுள்ள குவைத் தூதரகம் மற்றும் இந்திய தூதரகத்தில் அவர்கள் சமர்ப்பித்துவிட்டனர். இந்த விஷயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சம் காட்டிய அசாத்திய மெத்தனப் போக்கால், மன்னிப்பு அளிக்கப்பட்டும் தொடர்ந்து மூன்று ஆண்டுகாலமாக சுரேஷ் மற்றும் காளிதாஸ் சிறைப்படுத்தப்பட்டு, இறுதியில் மரணதண்டனையையும் எதிர்கொள்ளும் சூழலுக்கு ஆளானார்கள் என்ற தகவலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கவனத்திற்கு எடுத்துவரப்பட்டது.
இந்நிலையில், பிரச்சனையின் தீவிரத்தன்மையை உணர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்த மரணதண்டனையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் குவைத்திலுள்ள இந்தியத் தூதராக அதிகாரிகளுக்கு கடிதம் மற்றும் தொலைப்பேசி மூலமாகவும் ‘இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்னிப்பு அளித்த பின்னர் மரணத்தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது’ என்பதை விளக்கி, மன்னிப்பு அளிக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களின் நகல்கள் ஜமாஅத் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. தொடர்ந்து, மத்திய வெளியுறவு இணையமைச்சர் இ.அஹமது மற்றும் நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு, மரணதண்டனையை தடுக்கும் முயற்சியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும் என அழுத்தம் கொடுத்தது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
ஏ.கே.எஸ்.விஜயன் இந்த விஷயத்தில் சிரத்தையுடன் முயற்சிகளை மேற்கொண்டது பாராட்டுக்குரியது. பல்வேறு முயற்சிகளின் பலனாக, குவைத்திலுள்ள இந்திய தூதராக அதிகாரிகள் குவைத் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்திய பின் கடைசி தருணத்தில் மரணதண்டனை தவிர்க்கப்பட்டு, தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருவருக்குமான மரணதண்டனை தற்காலிமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் அது நிரந்தரமாக கைவிடப்பட வேண்டும்; இருவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளத் தீர்மானித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கடந்த 18ம் தேதி இருவரது தற்போதைய நிலை குறித்து குவைத்திலுள்ள இந்திய தூதரகத்திடம் கேட்டறிந்தது. இது தொடர்பாக, ‘இருவரது மரணதண்டனையும் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது’ மன்னிப்பு குறித்த வேண்டுகோள் பரிசீலனையில் உள்ளது. இவை முடிவுக்கு வர சற்று தாமதமாகலாம்’ என இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு பதில் அனுப்பியது தூதரகம்.
மேற்படி இருவருது விவகாரம் விரைந்து முடிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட தேவையான வழிமுறைகளை மேற்கொள்ளத் தீர்மானித்த ஜமாஅத், அதன் மாநிலச் சொலாளர்களில் ஒருவரான ஃபிர்தவ்ஸை கடந்த 18ம் தேதி இலங்கைக்கு அனுப்பிவைத்தது.
இலங்கைக்கு சென்ற ஃபிர்தவ்ஸ், அனுரதபுரத்திலுள்ள சித்திக் மசூதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்கள் சுரேஷ் மற்றும் காளிதாஸ் தரப்பிலிருந்து இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொண்டு மனப்பூர்வமாக இருவருக்கும் மன்னிப்பு அளித்ததை வாக்குமுலமாக வீடியோ பதிவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பெற்றுக் கொண்டு அன்றையதினமே, இலங்கையிலுள்ள குவைத் தூதரகத்தை அணுகி வாக்குமூலங்களை சமர்பித்தார். அப்போது, சித்தீக் மசூதா தரப்பின் அதிகாரப்பூர்வ வாரிசுதாரராக இலங்கை உச்சநீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட மசூதாவின் சகோதரர் ரிள்வானையும் குவைத் தூதரகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் தர வைத்தார் ஃபிர்தவ்ஸ்.
இந்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட தூதரக அதிகாரிகள் அதனை அப்படியே எழுத்துப்பூர்வமாக்கி, இலங்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் அங்கீகாரத்தையும் பெற்று வருமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, இலங்கையில் இரண்டு தினங்கள் தங்கியிருந்து - இலங்கை வெளியுறவு அமைச்சம் மற்றும் நிதி அமைச்சத்திடமிருந்து உரிய அங்கீகாரத்தைப் பெற்று முறையான ஆவணங்களை குவைத் தூதரகத்தில் சமர்பித்தார் ஃபிர்தவ்ஸ்.
(ஏற்கெனவே சித்திக் மசுதா குடும்பத்தினரிடமிருந்து 2010 இல் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் இந்திய அரசின் மத்திய வெளிவிவகார அமைச்சகத்திற்கு கிடைத்தும் அதை 3 வருடங்களாக அமைச்சகம் கிடப்பில் போட்டு விட்டதும்,குவைத்திலுள்ள இந்திய தூதரகம் கூட இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டதாலும் மீண்டும் இந்த ஆவணங்களை முறைப்படுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.)
முன்னதாக, இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை (Official Documents ) சமர்ப்பிப்பதற்கு முன், இந்திய தவ்ஹீத் ஜமாஆத் சார்பாக கொடுக்கப்பட்ட கடிதத்தையும், ரில்வானின் நேரடி வாக்குமூலத்தையும் (வீடியோ பதிவு) ‘நிலைமையின் தீவிரம் கருதி எங்கள் அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துவிடுகிறோம்’ என்று ஏற்கெனவே, உறுதியளித்தப்படி அவற்றை குவைத் அரசுக்கு அனுப்பிவைத்துவிட்டு ஃபிர்தவ்ஸிடம் தகவலை சொல்லியுள்ளனர் தூதரக அதிகாரிகள்.
இந்த முயற்சிகளின் பலனாக, கடந்த 21ம் தேதி சுரேஷ் மற்றும் காளிதாஸ் அவர்களின் மரண தண்டனை முழுமையாக ரத்து செய்யப்பட்டுவிட்டது என குவைத் அரசு அறிவித்திருப்பதாக நம்பிக்கையூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
இனி, நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக இருவரும் விடுதலை செய்யப்படுவதில் சற்று தாமதமாகும் என குவைத் தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இருவரும் விடுதலையாக தொடர் முயற்சிகளை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொள்ளும்” என விரிவாக விளக்கிப் பேசினார் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர்.
இலங்கையில் இருந்தபடி சுரேஷ் மற்றும் காளிதாஸின் விடுதலைக்காக தான் மேற்கொண்ட முயற்சிகளை விளக்கிப் பேசினார் மாநில செயலாளர் ஃபிர்தவ்ஸ்.
இச்சந்திப்பின் போது மாநிலத் துணைத்தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் செய்யது இக்பால், மாநிலச் செயலாளர்களான அபுஃபைஸல், முஹம்மது ஷிப்லி, மதுக்கூர் முஹைதின் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இந்நிகழ்சியில் கலந்துகொண்ட காளிதாசின் மனைவியான அனுசுயா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தன் கணவரின் விடுதலைக்காக மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
குறிப்பு:
INTJ விற்கு பதிலளித்த குவைத்திர்கான இந்திய தூதர்:
குவைத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டு கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தமிழர்களான சுரேஷ் மற்றும் காளிதாஸ் ஆகியோரின் விஷயத்தில் follow up இல் இருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,நேற்று அவர்கள் இருவரின் தற்போதைய நிலை குறித்து தூதரகத்திடம் மெயில் மூலம் கேட்டிருந்தது. அதற்கு,இன்று தூதரகம் இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு பதில் அனுப்பி இருக்கிறது.
''மரணதண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது.மன்னிப்பு குறித்த வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.ஆனால் இது (முடிய) சற்று தாமதமாகக்கூடும் '' என்று பதிலில் குறிப்பிட்டுள்ளார் குவைத்துக்கான இந்திய தூதர் சதீஷ் சி.மேஹ்தா.
நன்றி
மக்கள் ரிபோர்ட்

முத்துப்பேட்டை, ஜூன் 22: குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தபட்டு இருக்கும் முத்துப்பேட்டை சுரேஷ் மற்றும் சித்தாம்பூர் காளிதாஸ் ஆகியோர்களை எந்தவித நிபந்தனையுமின்றி குவைத் அரசு விடுதலை செய்வதற்கு இந்திய ஆரசும் , தமிழக அரசும் முயற்ச்சி எடுக்க வலியுறுத்தி
மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்து இன்று 22.06.2013 காலை 10 மணி அளவில் முத்துப்பேட்டையில் முழு கடை அடைப்பு மற்றும் மத்திய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து கட்சிகள்,வர்த்தக கழகம்,வர்த்தக சங்கம்,பெரியகடை தெரு வர்த்தக சங்கம்,ஆட்டோ ஒட்டுனர் உரிமையாளார் நலச்சங்கம்(பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம்,பங்களவாசல்),கார்,வேன்,லாரி,டிரேக்டர் ஒட்டுனர் உரிமையாளார் சங்கம்,அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
தகவல்: MM .பைசல் BBA
முத்துப்பேட்டை, ஜூன் 22: குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கும் முத்துப்பேட்டையை சேர்ந்த S. சுரேஷ் மற்றும் சித்தாம்பூர் C. காளிதாஸ் ஆகியவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி குவைத் அரசு விடுதலை செய்வதற்கு இந்திய அரசும், தமிழக அரசும் முயற்சி எடுக்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் இன்று அனைத்து கட்சி சார்பில் மாபெரும் கடையடைப்பு மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இவற்றின் புகைப்படத்தை இங்கு காணலாம்.
தொகுப்பு:
ரிப்போட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை, ஜூன் 21: குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கும் முத்துப்பேட்டையை சேர்ந்த S. சுரேஷ் மற்றும் சித்தாம்பூர் C. காளிதாஸ் ஆகியவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி குவைத் அரசு விடுதலை செய்வதற்கு இந்திய அரசும், தமிழக அரசும் முயற்சி எடுக்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்த வர்த்தகர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் இப்போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். எனவே நாளை காலை சரியாக கடையடைப்பு 9 மணிமுதல் 12 மணிவரையும், இதன் தொடர்ச்சியாக சரியாக 10 மணியளவில் முத்துப்பேட்டை கஸ்டம்ஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டமும் நடைபெற உள்ளது.
தொகுப்பு:
AKLT . அப்துல் ரஹ்மான்
சென்னை, ஜூன் 21: எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் :
உத்ரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உத்ரகாண்டில் மிகப்பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஆறுகளில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
மத்திய மாநில அரசுகளின் வேகமான நிவாரணப் பணிகள் பாராட்டுக்குரியது. மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து தேவையான நிதியுதவிகளை அறிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மழைக்காலங்களுக்கு முன்பாகவே முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சேதங்களை தடுக்க உதவும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தோர் மற்றும் உடமைகளை இழந்தோருக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உத்ரகாண்டில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முத்துப்பேட்டை ஜூன் 21: முத்துப்பேட்டை SPKM தோட்ட வளாகம் P .M .காதர் முஹைதீன் DCTO, அவர்களின் மகளும், மதுக்கூர் M .யூசுப் (CROWN EXCHANGE -SINGAPORE) அவர்களின் மனைவியும், பஷீர், யாசர் ஆகியோர்களின் மாமியாருமாகிய "ஹபிபுனிஷா" அவர்கள், இன்று அதிகாலை மௌத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5.30 மணியளவில் முஹையதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்:
P .M .காதர் முஹைதீன் DCTO ..+91 94435 89431.
நன்றி: ரஷித் அலி - முத்துபேட்டை.
புதுக்கோட்டை, ஜூன் 20: புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் மரணித்த பள்ளி மாணவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப் பட்டது.
புதுக்கோட்டை அருகே நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வல்லநாடு என்ற இடத்தில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவர்களை ஏற்றிவந்த பால் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொருங்கியது.இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு கடயக்குடி அருகில் குண்டாற்றங்கரையில் பொக்கலின் மூலம் குழி தோண்டப்பட்டது. அனைத்து மாண வர்களின் உடல்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பெற்றோர்கள், சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு ஒரே குழியில் வரிசையாக அடுக்கி அடக்கம் செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை, ஜூன் 18: திமிலத் தெரு ஆட்டப்ப சந்து மர்ஹும் தே. சீனா. முஹம்மத் அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹும். பட்டாணி அப்பா என்கின்ற அஹ்மத் லப்பை மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஆசாத் நகர் தே. சீனா. நெய்னா முஹம்மத் திமிலத் தெரு மர்ஹும் ஹனிபா, தே. சீனா. சாகுல் ஹமீது, தே. சீனா. தாவூத் இபுராஹிம்,தே. சீனா. செகுராவுத்தர், தே. சீனா, ஜெகபர் அலி, இவர்களின் சகோதரரும், பங்காளி மர்ஹும் முஹைதீன் பக்கீர், முஹம்மத் ஹனிபா, சாகுல் ஹமீது இவர்களின் மச்சானும், புது பட்டினமம் பசீர் அஹ்மத், சேதுபாவா சத்திரம் ஜமால் முஹம்மது, மத்துக்கூர் அன்வர்தீன், ஆகியோரின் தகப்பனாரும், முத்துப்பேட்டை கவுன்சிலர் பாவா பகுருதீன் இவரின் மாமனாருமாகிய, " ஹசன் ஹுசைன் நெய்னா மலை அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் அரபு சாஹிப் பள்ளி வாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
அறிவிப்பவர் :
தே. சீனா. நெய்னா முஹம்மது
நமது நிருபர்:
பாடகர் K.M. காதர் கனி
முத்துப்பேட்டை, ஜூன் 18: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்ஹாவை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மனைவி ஆமினா அம்மாள் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்துள்ளார். (இன்னா லில்லாஹி வ இன்னா இல்லை ஹீ ராஜிவூன்) இவருக்கு வயது 122 என்று எல்லோராலும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில ஆவணங்களை வைத்து பார்க்கும் போது வயது 100 ஐ தண்டுகிறது என்று தெருகிறது. மேலும் இவர் இதுவரை 4 தலைமுறையினரை கண்ட இந்த மூதாட்டியின் நல்லடக்கம் தர்ஹா மையவாடியில் நல்லடக்கம் செயப்பட்டது.
தொகுப்பு
முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை, ஜூன் 10: தூத்துக்குடியில் இருந்து மீன் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு வேன் வேளாங்கண்ணி நோக்கி வந்தது. இந்த வேன் இன்று காலை 7 மணியளவில் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வேன் நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள குடிசை வீட்டு முன் நின்ற 10-ம் வகுப்பு மாணவன் சபரிவாசன் மீது மோதி விட்டு நிலை தடுமாறி குடிசைக்குள் புகுந்தது. அப்போது குடிசைக்குள் இருந்த மகாலிங்கம் மனைவி பானுமதி (45), அவரது மகன் அசோகன் (20), பக்கத்து வீட்டை சேர்ந்த பிரியா மற்றும் சபரிவாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை 108 ஆம்புலன்சில் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பானுமதி பரிதாபமாக இறந்தார்.
காயம் அடைந்த 3 பேருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உலகம், ஜூன் 08:செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.
ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.
போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.
ஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில்

உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.