முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

அதிகாலையில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை: தமுமக வினரின் போராட்டத்தால் பரபரப்பு...







முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 18: முத்துப்பேட்டையில் தேர்வுநிலை பேரூராட்சியில் அலுவலகம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலராக நாகராஜ் என்பவர் பொறுப்பேற்றார் . திடீரென்றுபணியில் இருக்கும்பொழுது மாரடைப்பால் மரணம் அடைந்தார். காரணம் அலுவலக நிர்வாகத்தில் குளறுபடிகள் இருந்ததாலும், வரவு - செலவு கணக்கில் தணிக்கையில் சில பிரச்சனைகள் இருந்ததால் மனஅழுத்தம் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக பொறுப்பு ஏற்ற பாலசுப்ரமணியன் ஒரு விபத்தில் படுகாயம் அடைந்தார். அதன்பிறகு பொறுப்பேற்ற நந்தகுமார் மனஉளைச்சல் காரணமாக பணி செய்ய விரும்பாமல் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பொறுப்பேற்ற சித்தி விநாயகமூர்த்தி அலுவலகத்தில் ஒத்துழைப்பு இல்லாததால் அவரும் சென்றதாகவும், அதன்பிறகு பொறுப்பேற்ற சிவராமன் உடல் நிலை காரணமாக சென்று விட்டதாகவும், அதன்பிறகு பொறுப்பேற்ற இப்ராகிம் என்பவர் இந்த சம்பவங்களெல்லாம் கேள்விபட்டு பொறுப்பேற்று இதுநாள் வரை தனது அறையில் அமரவில்லை என்று தெரிகிறது. 

மேலும் , பேரூராட்சி தலைவராக உள்ள அருணாச்சலதுக்கு சில மாதங்கள் முன்பு உடல்நிலை சரியில்லாமால் பல மாதங்கள் அலுவலகத்திற்கு வரவில்லை. பேரூராட்சி திமுக கவுன்சிலர் ஐயப்பன் சென்ற மாதம் விபத்தில் சிக்கி படுகாயம், பேரூராட்சி மதிமுக கவுன்சிலர் மதியழகன் என்பவருக்கு உடல் நிலை சரியில்லை, சில தினங்களுக்கு முன்பு பாஜக கவுன்சிலர் மாரிமுத்து பேரூராட்சி பணியாளர் ராஜா ஆகியோருக்கு விபத்தில் சிறு காயம், மேலும் பேரூராட்சி பணியாளர்கள் கவுன்சிலர்களுக்கு மன உளைச்சல், கடன்தொல்லை, குடும்பத்தில் தொல்லை இப்படி தொடர்ந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த பேரூராட்சி நிர்வாகம் - கடவுள் குத்தம் இருக்குமோ என்று கருதி அலுவலகத்தில் கணபதி ஓமம் நடத்த முடிவு செய்யப்பட்டன . அதன்படி இன்று அதிகாலை 3 மணிக்கு புரோகிதர்களை கொண்டு கணபதி ஓமம் பேரூராட்சி அலுவலர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அருணாச்சலத்திற்க்கு கழுத்தில் மாலை போட்டு தோஷம் கழிக்கப்பட்டது. பின்னர் புனிதநீரை அலுவலகத்திற்கு சுற்றுப்புறமும் புரோகிதர் தெளித்தார்.

 அதிகாலையில் இது நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெறும் பரபரப்பானது. இதனால் ஏராளமான மக்கள் கூடினர் . அப்பொழுது தமிழ்நாடுமுஸ்லிம்முன்னேற்றகழகம் நகர தலைவர் நெய்னா முகம்மது தலைமையில் ,ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக் மற்றும் மனித நேய மக்கள் மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் உரிமை மீட்பு இயக்கம் மாநில நிர்வாகியும் சமூக ஆர்வலருமான நிஜாமுதீன் உட்பட தமுமுகவினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தடுக்க முயற்சித்தனர் . இதனால் பெறும் பரபரப்பானது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தனிபிரிவு காவலர் குணசேகரன் உட்பட போலீசார் முற்றுகையிட்ட தமுமுகவினரிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர் . பிறகு உரிய விசாரணை செய்யப்படும். என்று தெரிவித்தார். மேலும் ரம்ஜான் அன்று கலவரம் நடந்த நிலையில் இச்சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: முத்துப்பேட்டை TMMK    


திருச்சியில் பாசிச தீவிரவாதத்திற்கு பலியான 8–ம் வகுப்பு மாணவி! தௌபீக் சுல்தானா ..






திருச்சி, ஆகஸ்ட் 16: திருச்சியில் ரெயில்வே தண்டவாளத்தில் 8–ம் வகுப்பு மாணவி உடல் துண்டாகி பிணமாக கிடந்தார். அவர் ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மெகபுனிசா. இவர்களது மூத்த மகள் தவ்பிக் சுல்தானா (13) ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 13ஆம் தேதி பள்ளிக்கு சென்ற தவ்பிக் சுல்தானா மீண்டும் வீடு திரும்பவில்லை. இரவு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் மாணவியை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இரட்டைமலை பகுதியில் ஆள் இல்லா ரெயில்வே கேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் மாணவி ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு மறுநாள் காலை தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அந்த மாணவி உடல் துண்டு, துண்டாகி கிடந்தார். அருகே மாணவியின் அடையாள அட்டையும், அவரது புத்தக பையும் கிடந்தன. அடையாள அட்டையை பார்த்தபோது அதில் தவ்பிக் சுல்தானா விவரம் இருந்தது.

இதையடுத்து அந்த பள்ளிக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் கோரமாக கிடந்த தவ்பிக் சுல்தானாவின் உடலை கண்டு கதறி அழுதனர்.

இது குறித்து பள்ளி மாணவிகளிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் கடந்த 13ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வழக்கமாக செல்லும் பஸ்சில் ஏறாமல் மற்றொரு பஸ்சில் ஏறிச் சென்றதும், அரிஸ்டோ ரவுண்டானா அருகே அவர் திடீரென இறங்கியதும் தெரிந்தது.

அதன் பின்னர் தவ்பிக் எப்படி இரட்டைமலைக்கு வந்தார். அவரை யாரேனும் கடத்தி வந்தார்களா? என விசாரணை நடத்தினர். அவரை யாரேனும் இந்த பகுதிக்கு அழைத்துவந்து பலாத்காரம் செய்த பின்னர் கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் வீசிச் சென்றதால் உடல் துண்டானதா? அல்லது ரெயில் வரும்போது தள்ளிவிட்டதில் இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் நோட்டுகளை பார்வையிட்டபோது அதில், ஒரு கவிதையும், 2 செல்போன் எண்களும் எழுதப்பட்டு இருந்தன. அதனை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரியில் மாணவி தவ்பிக் சுல்தானாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை கைதுசெய்ய கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மாணவி தவ்பிக் சுல்தானா பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று மாலை உடலை உறவினர்களிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைக்க முடிவு செய்தனர். அப்போது உடலை வாங்க மறுத்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் அணைத்து இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவர்களும் ஒன்று சேர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகர துணை போலீஸ் கமிஷனர் அபினவ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘மாணவி சுல்தானாவை 2 வாலிபர்கள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு கொலை செய்துள்ளனர். அந்த காமக்கொடூரர்களை கைது செய்ய வேண்டும். மேலும் மாணவியின் உடலில் ஒரு கையும், சில உறுப்புகளும் இல்லாமல் உள்ளது.

அதனை தேடிக்கண்டுபிடித்த பின்னர் தான் உடலை வாங்கி செல்வோம். அதுவரை உடலை பெற மாட்டோம். மேலும் இந்த வழக்கில் கிடைத்துள்ள செல்போன் எண்ணை வைத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் அபினவ்குமார் அவர்களிடம் பேசுகையில், ‘‘சம்பந்தப்பட்ட இடத்தை நான் பார்வையிட்டு 2 மணி நேரம் நேரில் விசாரணை நடத்தினேன். 8–ம் வகுப்பு மாணவி அவ்வளவு தூரம் தனியாக சென்றது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவி மாயமானது தொடர்பாக பாலக்கரை போலீசாரும், உடல் கிடந்த இடத்தை வைத்து ரெயில்வே போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரெயில்வே போலீசாரும் சப்–இன்ஸ்பெக்டர் அக்பர்கான் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மாநகர போலீஸ் சார்பில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். ரெயில் ஏறி இறங்கியதில் உடலின் பாகங்கள் பல துண்டாகி விட்டன. இதில் ஒரு கையும், உறுப்புகளும் கிடைக்காதது குறித்து ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தேடியும் கிடைக்கவில்லை. ரெயில்கள் ஏறி இறங்கியதால் உருக்குலைந்து போகி இருக்கும்’’ என்றார்.

இதையடுத்து இந்த வழக்கில் 24 மணி நேரத்திற்குள் அதாவது சம்பந்தபட்டவர்களை கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் அபினவ்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:

ஹபீபுல்லாஹ் திருச்சி 

முத்துப்பேட்டை பெரிய நாயகி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திரதின கொண்டாட்டம். ரசூல் பீவி கொடி ஏற்றினார்.





முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டை கோவிலூர் பெரியநாயகி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 67- வது சுதந்திரதின விழா இன்று நடைபெற்றது. முத்துப்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோவிலூர் மந்திரபுரீஸ்வர் கோவில் நிர்வாகி அதிகாரி இளங்கோ, அரிமா மாவட்ட தலைவர் டாக்டர். இளங்கோ, ஒன்றிய கவுன்சிலர் ஜெகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமையாசிரியை தாமரைச்செல்வி வரவேற்று பேசினார். தேசியக் கொடியை முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஹாஜி. ரசூல் பீவி ஏற்றிவைத்து பேசினார். 

அப்போது பேசிய ஒன்றியக்குழு தலைவர் நடராஜன் கூறிகையில் இந்து அறநிலைத் துறைக்கு சொந்தமான இந்த பெண்கள் பள்ளி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஆண்டாண்டு காலம் இந்த பள்ளி இருந்து வருகிறது என்றும்,  அதற்க்கு ஒரு உதாரணம் இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் முன்னாள் கவுன்சிலரும் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்மணியுமான ஹாஜி. ரசூல் பீவி கொடி ஏற்றி வைத்து சிறப்பித்திருப்பது முத்துப்பேட்டையின் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நிகழ்கிறது என்றும், மேலும் இந்த பள்ளிக்கு கழிப்பிடம் மற்றும் அடிப்படை வசதிக்காக ரூ.70 லட்சத்தில் திட்டமதிப்பீடு செய்து இந்து அறநிலைதுறை சார்பில் அரசிடம் வழங்கி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 90 சதவீதம் திட்டப்பணி ஒதுக்கீடு செய்து குறித்து வேலைகள் முடிந்துவிட்டது இதற்கான திட்டம் விரைவில் நிறைவேற்ற உத்தரவு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் பி.டி.எ. இணைச்செயலாளர் திருநாவுக்கரசு கல்விக்குழு உறுப்பினர்கள் சம்மந்தம், தங்கமணி, முத்துராமலிங்கம், மங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன், கீழக்காடு கூட்டுறவு வங்கி தலைவர் நாராயணசாமி, அரிமா மாவட்ட தலைவர் ராஜசேகர், ஜெயபால் ரோட்டரி மாவட்டத் தலைவர் மெட்ரோ மாலிக், அறங்காவலர் ராஜேந்திரன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜெகவருல்லா, மேலாண்மை கமிட்டி உறுப்பினர் ஐயப்பன், பி.டி.எ. பொருளாளர் மருதுராஜேந்திரன், கல்விக்குழு தலைவர் குணசேகரன் உட்பட பலர் பேசினர். நிகழ்ச்சி இறுதியில் உதவி தலைமையாசிரியை உமாமகேஸ்வரி நன்றி கூறினார். 

நமது நிருபர்:  AKL. அப்துல் ரஹ்மான்..

முத்துப்பேட்டை முஸ்லிம்கள் மீது காவல்துறை தடியடி.!!! அப்துல் ரஹ்மான் எம்.பி. கண்டனம்...






முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டையில் பெருநாள் தொழுகையின் போது முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி அறிக்கை பின்வருமாறு:

முத்துப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது பா.ஜ.க இளைஞரணி மாநில பொருப்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்றனர். இதைப் பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் ரமலான் பெருநாள் அன்று இவர்கள் நம்பகுதியில் எப்படி கோஷம் போட்டு செல்லலாம் என இளைஞர்கள் எண்ணி நாமும் பேரணி செல்வோம் என கூறி மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் சென்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சணை வரும் சூழ்நிலை உருவானது.

இருப்பினும் பெருநாள் அன்று காவல்துறை அதிகாரிகள் எப்படி பிஜேபினருக்கு அனுமதி அளிக்கலாம் பலமுறை மோதல்கள் உருவாகும் பகுதி முத்துப்பேட்டை என தெரிந்தும் முஸ்லிம்களுக்கு இன்று பெருநாள் என்றும் தெரிந்தும் காவல்துறையினர் அனுமதி அளித்தது தவறு அதுமட்டுமில்லாமல் பெருநாள் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குறியது .உடனடியாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அப்துர் ரஹ்மான் எம்.பி பேசினார் .அதற்கு அந்த அதிகாரி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் முஸ்லிம்களை அமைதிகாக்க சொல்லுங்கள் என திருச்சி கோட்ட காவல்துறை உயர் அதிகாரி அப்துர் ரஹ்மான் எம்.பியிடம் கேட்டுக்கொண்டார் .

தகவல்: லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில்

குவைத்தில் உள்ள முக்கிய நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது.


குவைத், ஆகஸ்ட் 14: குவைத்தில் உள்ள TISSUE பாக்ஸ் உற்பத்தி நிறுவனம் குவைத்தில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது. 

CLIENT INTERVIEW  END OF AUGUST 2013 AT OFFICE IN MUMBAI: 
Needed Candidates from India only.
Good Salary + Daily OVERTIME + Room. NO FOOD.

(1) Printing Operator:- Printing to print the paper for tissue or any other
HEIDELBERG, ROLAND ULTRA, ROLAND ULTRA (UV), UV New, KOMORI.

(2) C&C Operator:- Cut the printed paper as the tissue size or other size
BOBST, BOBST (Nova Cut 106-E), Foil Stamping and Die Cutting Machine (Manual), ASEA (Manual)

(3) Operator (f&g):- Folding and Gluing. fold the tissue box and glue it
BOBST (DOMINO 100-M), VEGA 550, WP.

(4) Lamination:- SF (NSF – 145H), Knife Rotating Simple Cutting M/C, Type – QZS-145.

(5) Mechanic:- for Forklift & Cars (Priority for Forklift) should handle both task (Best knowledge required)

................................................................................................................................................

HELPERS – 25 நபர் தேவைப்படுகிறது.
Client Interview in Mumbai  - End  of August 2013.

Salary: Basic 70 KD
Today 1 Kd  = 214 Rupees.
Overtime: DAILY.
Room: FREE
Transport: FREE
Food: NOT PROVIDED

Qualification:- 10th Passed.
Passport: ECNR Must.
Qualification certificates & Marksheets required.

 Flight from MUMBAI only.

1.விண்ணப்பிக்கும் நபரின் பெயர், வேலையின் பெயர் மட்டும் subject என்ற இடத்தில் TYPE செய்து அனுப்பவும்.

2. தயவுசெய்து, நாங்கள் கேட்காத வேலைகளுக்கு விண்ணப்பிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

...................................................................................................................................................
Leading Carton Company – Kuwait

Machine Operator :- 5 Nos.

Qualifications :-
Educations :  minimum two year technical college diploma , in the field Mechanical or Electrical .
Language :  English ( writing and reading ) .
Age :  25 – 30
Work experience :  work for minimum 3 years as machine operator in converting cartons factory , knows how to operate all type of converting machines such as :
Rotary Die cut machines .
Flexo folder glue machines, preferably in high graphic printing machine .
Auto stitch and Glue Machine.
Flatten Die cut machine.
Folder gluer machine (crush lock & corner gluer)
Computerized sample making machine .
Knowledge of quality control , motivate labors , communication skills .
Preference to : Computer skill : knowledge to use computer , prefer with Photo shop skills .

PLEASE NOTE:-

1.Resume should be prepared only word format.
2.Dont attachments any certificates . If we required you may send later.
3. Passport size photo must be attached in Cv on the right side corner.
4.Your Name & Post only mention in the subject line.
5.Home address & Mobile number should be mentioned in the CV.
6.Min.3-5 Years exp. Candidates will be called for final interview.

குறிப்பு :- SPONSER இண்டெர்வியூ - க்கு மும்பை வர விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் .எங்கள் அலுவலகம் மும்பையில் மட்டுமே உள்ளது.வேறு கிளைகள் எங்கும் இல்லை.

தங்களுடைய பயோ டேட்டாவை CV யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பிவைக்கவும். தங்களுடைய தகுதியின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும்.

தொடர்புக்கு:

Interested& Suitable candidates may contact immediately :-
ABDUL SALAM. KUWAIT: 00965 670 96 257
SMS TEXT FROM INDIA: 88 705 44 801 (SMS Only)
EMAIL: asalam_12@yahoo.com
source from: www.muthupettaiexpress.blogspot.com.
நமது நிருபர்:

அப்துல் சலாம் குவைத்.

கலவரத்திற்கு காவல்துறைதான் காரணம்.! முத்துப்பேட்டையில் த.மு.மு.க. தலைவர் பேட்டி...







முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் பா.ஜ.க. வினருக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட மோதலால் பெரும் கலவரம் வெடித்தது. கடைகள் போலிஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தினர் இந்த சம்பம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பானது. இந்த நிலையில் முத்துப்பேட்டை கலவரப்  பகுதியை பார்வையிடவும் மக்களை சந்திக்கவும் வந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவருமான ரிஃபாயி நிருபர்களிடம் கூறியதாவது. 

முப்பது நாட்கள் நோன்பு இருந்து அமைதியான முறையில் மிக சந்தோசமாக ரம்ஜானை கொண்டாடிக்கொண்டிருந்த வேலையில் முத்துப்பேட்டையில் சில விசமிகள் கலவர செயலை உருவாக்கி பெருநாளை நாசம் படுத்த்திவிட்டனர். அனைத்து தரப்பு மக்களும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் பா.ஜ.க. ரம்ஜானை சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கிவிட்டது. இதற்க்கு காவல்துறை உடந்தையாக செயல் பட்டிருக்கின்றன. அன்று நடந்த பா.ஜ.க. பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி இல்லை என்று காவல் துறை கூறுகிறார்கள். ஆனால் காவல்துறை பாதுகப்போடுதான் சட்டத்தை மீறிய செயல் நடந்துள்ளது. ரம்ஜான் முதல் நாள் மூன்று பேர் ஒரு பைக்கில் சென்ற முஸ்லிம்களை கைது செய்த போலிஸ் மறுநாள் பலபேர் மூன்று நபராக சென்றபோது ஏன் கைது செய்யவில்லை? டி.எஸ்.பி. பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகிய இருவரும் நினைத்து இருந்தால் இந்த கலவரத்தை தடுத்து இருக்கலாம். பிரச்சனைக்கு உரிய பகுதியில் முன்கூட்டியே பாதுகாப்பு போட்டு இருக்கலாம்.

இவர்கள் பா.ஜ.க. வின் முருகானந்தத்திர்க்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள். காவலர் இவர்கள் செய்த சதிதான் கலவரத்தில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம் 160 பேர் மீது வழக்கும் பா.ஜ.க வின் 50 பேர் மீது வழக்கு ஒருதலை பட்சமாக காவல்துறை செய்து இருக்கிறது. போட்டி ஊர்வலம் சென்றதை கட்டிக்கிறேன். அந்த அளவுக்கு ஏன்? காவல்துறை இடமளிக்கிறது? ரம்ஜான் தொழுகை புனிதமான ஒன்று அதனை கூட காவல்துறை வீடியோ எடுத்து கலவரத்தை தூண்டுகிறது. 

டி.எஸ்.பி. பாஸ்கரன் தொடர்ந்து முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். இவரைப்பற்றி உயர் அதிகாரி கவனத்திற்கு கொண்டு சேர்க்க இருக்கிறோம். என்றும் தனது பேட்டியில் கூறினார். ஒரு பிரச்சனை என்றால் வியாபாரிகள் மத்தியில் மிகப்பெரிய அச்சமாக இருந்து வருகிறது. அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்பொழுது காவல்துறை செயல்பாடுகளை பார்த்தல் அடுத்த மாதம் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தில் கலவரத்தை ஏற்படுத்தி ஊரில் அமைதியை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி இருப்பது போல்தேருகிறது. இனிவரும் காலங்களில் காவல்துறை ஒருதலைமட்சமாக நடந்து நியாயமான நடவடிக்கைக்கு தவறும் பட்சத்தில் இளைஞர்களே சட்டத்தை கையில் எடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்  என்றும் மேலும் தமது பேட்டியில் ரிஃபாயி இவ்வாறு தெரிவித்தார். 

நன்றி: MUTHUPETTAI  TMMK 


முத்துப்பேட்டையில் நடந்தது என்ன.? வெளிவராத பரபரப்பு காட்சிகளும் - செய்திகளும்:














முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே நாளில் பா.ஜ.க. கட்சியின் மாநில செயலாளர் முத்துப்பேட்டையை சேர்ந்த முருகானந்தத்திற்கு பிறந்த நாள் என்றும், இவரது பிறந்த நாள் விழாவை சந்தை அருகே உள்ள SVK அன்பு திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்) இந்த பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. வின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்ததாகவும், மேலும் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேட்டையிலிருந்து குட்டியார் பள்ளி வழியாகவும், தம்பிக்கோட்டையிலிருந்து புதுத்தெரு பள்ளிவாசல் வழியாகவும் பெருநாள் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், மேலும் ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகேயும் பட்டாசுகளை வெடித்து வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், இதை பார்த்த சில இஸ்லாமிய நண்பர்கள் இவற்றை தட்டிக்கேட்ட தாகவும் கூறப்படுகிறது.

மேலும் நேற்று இரவு இஸ்லாமிய நண்பர்கள் 2 சக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததற்கு போலிசார் அவர்களை மடக்கி பிடித்து அபராதமும் விதித்துள்ளனர். ஆனால் இன்று பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் மூன்று மூன்று பேராக வருவதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. 

இதனிடையே பிரச்சனையை கேள்விப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் 40க்கும்  மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றதாகவும், அப்போது அனைத்து  இளைஞர்கள் மீது போலிசார் லத்தி சார்ஜ் பண்ணியதாகவும், இதனால்  இளைஞர்கள் மீது காலில் பலமாக உள் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் ஆசாத் நகர் நாகூர் கனி என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)மேலும் காயல் பட்டினத்தை சேர்ந்த ஓர் இஸ்லாமியரை முத்துப்பேட்டை சந்தை அருகே வைத்து பா.ஜ.க. வினர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடையாளம் தெரியாத சில பேர் நான்கு கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி வர்த்தகம் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

"இந்நிலையில் அனுமதி இன்றி பேரணியாக வந்ததற்காகவும், வன்முறையை தூண்டும் வகையில் கோசங்களை எழுப்பியதற்காகவும், மக்கள் நடமாடும் பகுதிகளில் பட்டாசு மற்றும் சக்தி வாய்ந்த வெடிகளை வெடித்து பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்திய தற்காகவும், பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி  சரியாக மதியம் 3 மணியளவில் பாப்புலர் பிரண்ட் முத்துப்பேட்டை நகரத் தலைவர் அப்துல் மாலிக், SDPI கட்சியை சார்ந்த சர்தார், மற்றும் சேக் மைதீன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க சென்றதாக கூறப்படுகிறது. மேலும் புகார் மனு அளிக்கச்சென்ற மூவரையும் காவல்நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக் தலமையில் பெரியக்கடைத் தெருவில் கூடினர். சிறை வைக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்யக்கோரி சரியாக 4 மணியளவில் SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக் தலமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சரிபா வாய்ஸ் முக்கத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முத்துப்பேட்டை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல் செய்த சற்று நேரத்தில் முத்துப்பேட்டையின் DSP தலமையில் காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு SDPI சித்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அரைமணி நேரத்திக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் சித்திக்கின் உத்தரவால் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆயினும் இளைஞர்கள் கலைந்து செல்லாமல் பெரிய கடைத்தெருவில் அதிக எண்ணிக்கையில் குழுமி இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக், முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க. வினர் நடந்து கொள்கின்றனர் என்றும், இப்போது நடத்தப்பட்ட இந்த பிறந்த நாள் விழா கொண்டாடும் சாக்கில் கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க. வினர் சதி செய்வதாகவும் கூறினார். மேலும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு விளக்கம் கேட்பதற்காகத்தான் காவல் நிலையம் சென்றிருந்ததாகவும் அப்போது அங்கிருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உன்னை போட்டு தள்ளிவிடுவேன் என்று என்னை மிரட்டியதாகவும்   செய்தியாளருக்கு பேட்டியளித்தார் சித்திக்.

பின்னர் சரியாக 6 மணியளவில் 10 பேர் கொண்ட குழு காவல் நிலையம் சென்றது. அப்போது மூவரும் விடுவிக்கப்பட்டு சரியாக 7:30 மணிக்கு பெரிய கடைத்தெருவிற்கு வந்தடைந்தனர். அப்போது அங்கே குழுமி இருந்தவர்கள் நாரே தக்பீர்.! அல்லாஹ் அக்பர்.! என்று கோசங்களை எழுப்பினர்.

பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய சித்திக், இது நமது ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும், இது போன்று ஒற்றுமையாக செயல்பட்டால் தீய சக்திகளிடமிருந்து முத்துப்பேட்டை மக்களை பாதுகாக்கலாம் என்றும் கூறினார். சரியாக 20 நிமிடங்கள் சிற்றுரை யாற்றினார் சித்திக். பின்னர் அனைவரையும் அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

இந்நிலையில் அப்துல் மாலிக், சர்தார், சேக் மைதீன் ஆகிய மூவர் மீதும் காவல்துறை வழக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சித்திக் மீது 4 வழக்குகளும், பா.ஜ.க மாநில செயலாளர் முருகானந்தம் மீது 1 வழக்கும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதியின்றி வாகனப்பேரணி நடத்தியதற்காக SDPI கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீதும், பா.ஜ.கவை சேர்ந்த 60-க்கு மேற்பட்டோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று தர்ஹா பாக்கர் அலி தலைமையில் மனித உரிமைகள் அமைப்பின் மாநில தலைவர் G .பஷீர் அஹமது ,மமக மாவட்ட செயலாளர் மாலிக் உள்ளிட்டோர் மாவட்ட SP யை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது .

மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே அனைத்து தொலைக்காட்சிகளிலும் முத்துப்பேட்டையில் பதற்றம் என பரபரப்பு செய்தியாய் வெளியிட்டது. தொலைகாட்சி செய்தியின் வாயிலாக சம்பவத்தை கேள்விப்பட்ட சமூக ஆர்வலரும், மனித நேயருமான பேராசிரியர். ஆ. மார்க்ஸ் அவர்கள், முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சம்பவங்களை கேட்டறிந்தார். எனவே யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது பாராபட்சமின்றி தக்க நடவடிக்கை எடுத்து முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் கட்டிக்காக்க வேண்டுமென முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில்  கேட்டுக்கொள்கிறது.

களத்தொகுப்பு: ஜே.ஷேக்பரீத்
                                 M.A.journalism & mass communication
                                  Member TamilNadu Press Club
                                   Chennai.



முத்துப்பேட்டையில் ஈகைப் பெருநாள் கொண்டாட்டம்: மகிழ்ச்சி வெள்ளத்தில் இஸ்லாமியர்கள்...










முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பாகவும், கோலாகலமாகவும், கொண்டாடப்பட்டது. முத்துப்பேட்டையில் குட்டியார் பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், ஆசாத்நகர் பள்ளிவாசல், TNTJ பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சரியாக 8:30 மணியளவில் அனைத்து முஹல்லா வாசிகளும் முஹல்லா  வாரியாக குட்டியார் பள்ளியை சென்றடைந்தனர். சரியாக 9:15 மணிக்கு குட்டியார் பள்ளியில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து முஹல்லாவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர். 

தொகுப்பு:

EK. முனவர் அஹ்மத் கான்

இந்து அறநிலையத்துறை நிகழ்ச்சியில் இஸ்லாமியர் -முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கம் !!







முத்துப்பேட்டையில் இயங்கிவரும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருடாவருடம்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது .அதே போல் இந்த வருடமும் சுதந்திர தின விழா கொண்டாட பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது .இந்த பள்ளியானது இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும் .இந்த வருடம் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 8-ஆவது வார்டின் முன்னாள் உறுப்பினர் ரசூல் பீவி என்கிற ஒரு இஸ்லாமிய பெண்மணியை கொடியேற்றி வைத்து சிறப்பிக்குமாறு அழைத்துள்ளது பள்ளிநிர்வாகம் .

முத்துப்பேட்டையில் பதற்றம்: முஸ்லிம் இளைஞர்கள் மீது போலிசார் தடியடி...


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 09: முத்துப்பேட்டையில் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே நாளில் பா.ஜ.க. கட்சியின் மாநில செயலாளர் முத்துப்பேட்டையை சேர்ந்த முருகானந்தத்திற்கு பிறந்த நாள் என்றும், இவரது பிறந்த நாள் விழாவை சந்தை அருகே உள்ள SVK அன்பு திருமண மண்டபத்தில் கொண்டாடப் பட்டதாகவும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்) இந்த பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. வின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்ததாகவும், மேலும் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேட்டையிலிருந்து குட்டியார் பள்ளி வழியாகவும், தம்பிக்கோட்டையிலிருந்து புதுத்தெரு பள்ளிவாசல் வழியாகவும் பெருநாள் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், மேலும் ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகேயும் பட்டாசுகளை வெடித்து வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், இதை பார்த்த சில இஸ்லாமிய நண்பர்கள் இவற்றை தட்டிக்கேட்ட தாகவும் கூறப்படிகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)

மேலும் நேற்று இரவு இஸ்லாமிய நண்பர்கள் 2 சக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததற்கு போலிசார் அவர்களை மடக்கி பிடித்து அபராதமும் விதித்துள்ளனர். ஆனால் இன்று பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் மூன்று மூன்று பேராக வருவதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. 

இதனிடையே பிரச்சனையை கேள்விப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் 40க்கும்  மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றதாகவும், அப்போது அனைத்து  இளைஞர்கள் மீது போலிசார் லத்தி சார்ஜ் பண்ணியதாகவும், இதனால்  இளைஞர்கள் மீது காலில் பலமாக உள் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் ஆசாத் நகர் நாகூர் கனி என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)

மேலும் காயல் பட்டினத்தை சேர்ந்த ஓர் இஸ்லாமியரை முத்துப்பேட்டை சந்தை அருகே வைத்து பா.ஜ.க. வினர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)

மேலும் அடையாளம் தெரியாத சில பேர் நான்கு கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி வர்த்தகம் சங்கம் சார்பில் புகார் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)

எனவே யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது பாராபட்சமின்றி தக்க நடவடிக்கை எடுத்து முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் கட்டிக்காக்க வேண்டுமென முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில்  கேட்டுக்கொள்கிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)




சமுதாய சேவையே எங்கள் லட்சியம் -அல்மஹா ஹைதர் அலி பேட்டி:

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 07: அல்மஹா அறக்கட்டளையின் நிறுவனர் ஹாஜி S .M ஹைதர் அலி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டி:

முத்துப்பேட்டையில் அல்மஹா அறக்கட்டளையின் சார்பாக இலவச மதரசாவை அல்லாஹ்வின் உதவியால் நடத்தி வருகிறோம் .
6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் எங்கள் மதரசாவில் சுமார் 40 பேர் பயின்று வருகின்றனர் .

மார்க்க கல்விபாடத்தின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும் .எங்கள் மதரசாவில் மார்க்க கல்வி மட்டுமல்லாமல் இலவசமாக கணினி பயிற்சி ,இலவச தையல் பயிற்சி ,இலவச ஆசிரியர் பயிற்சி போன்றவற்றை நடத்தி வருகிறோம்


.கணினி பாடப்பிரிவில் 100- மாணவர்களும் ,டைலரிங் பாடப்பிரிவில் 100-மாணவர்களும் ,இலவசமாக பயின்று வருகின்றனர் .

அதுமட்டுமில்லாமல் ஏழை பெண்களுக்கு 5000/வீதம் வட்டி  இல்லா கடன் உதவியும் வழங்கி வருகிறோம் .

எங்கள் மதரசாவில் வகுப்பு எடுக்க ஆலிமா ஆசிரியர் தேவைப்படுகிறது. மாத சம்பளமாக 10000/ மும்  இலவசமாக தங்கும் இட வசதியும் செய்து கொடுக்கிறோம்.தகுதி உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் .இவ்வாறு அல்மஹா ஹைதர் அலி கூறினார் .

சந்திப்பு :ஜே :ஷேக்பரீத் 

டைரக்டர் சேரன் ‘விரட்டி விரட்டி’ அடித்த சந்துரு யார்? : ‘அதிர்ச்சி’ தரும் விரிவான உண்மைத் தகவல்கள்! -

சென்னை, ஆகஸ்ட் 05: டைரக்டர் சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் தான் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் விறுவிறுப்பான பேச்சாக இருக்கிறது.

 அவர் காதலித்து வரும் சந்துரு என்பவர் தமிழ்சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டர் என்றும், டான்ஸர் என்றும், எம்.பி.ஏ பட்டதாரி என்றும் ஆளாளுக்கு ஒவ்வொரு தகவல்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர் யார்..? அவரின் குடும்பப் பின்னணி என்ன..? என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் தேட நாம் விசாரித்தபோது அதிர்ச்சி தரும் பல தகவல்கள் கிடைத்துள்ளன.


இதோ அவரை பற்றிய விரிவான தகவல்கள் :


சந்துரு என்கின்ற சந்திரசேகரன் தமிழ்சினிமாவில் எந்த டைரக்டரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை, அவருடைய அப்பா சினிமாவில் சில காலம் வேலை பார்த்தவர். இவரது அம்மா பத்மா ஆந்திராவை சேர்ந்தவர். சந்துருவின் அப்பாவும், அம்மாவும் சினிமாத்துறையிலேயே இருந்ததால் அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவருமே கலப்பு திருமணம் செய்துகொண்டனர். தற்போது சந்துருவின் அம்மா ஒரு இருதய நோயாளியாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்.


சந்துருவின் அக்கா கெளரிக்கு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க பிரமுகர் சீனிக்கட்டியின் மச்சானான முகம்மது இலியாஸ் என்பவரோடு 8 வருடங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு, இலியாஸை ரகசிய திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி இருந்திருக்கிறார். ஆனால் ஏன் ரகசிய திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டால் இலியாஸுக்கு கெளரி முதல் மனைவி அல்ல. முதல் மனைவி உயிரோடு இருந்தபோதே அவருக்கு இரண்டாவதாக வாக்கப்பட்டவர் தான் சந்துருவின் அக்கா கெளரி.


சந்துருவும், அவருடைய அக்கா கெளரியும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அன்பு நகரில் 7 வருடங்கள் இருந்திருக்கின்றனர். இலியாஸுக்கு சொந்தமான பொன்னி ஃபில்லிங் ஸ்டேஷன் என்ற பெட்ரோல் பங்க்கை இவர்கள் தான் நடத்தி வந்துள்ளனர்.


ஒருநிலையில் இலியாஸின் முதல் மனைவி, சந்துருவின் அக்கா கெளரி செய்து கொண்ட சட்டவிரோத திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கெளரி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் சந்துரு, அவருடைய அக்கா கெளரி, தாய் பத்மா உள்ளிட்ட அனைவரும் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள். இந்நிலையில் கெளரிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.


அதன்பிறகு, சொத்தை பிரித்து தரச்சொல்லி இலியாஸை கெளரி கட்டாயப்படுத்த, கெளரியின் குணம் அறிந்த இலியாஸ், தர மறுத்திருக்கிறார்.


இதனால் டென்ஷனான கெளரி, இலியாஸ் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், தன்னிடம் இருந்த ஏராளமான நகைகளை பிடுங்கிக் கொண்டதாகவும் இலியாஸ் மீது போலீஸில் போலியாக புகார் கொடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த இலியாஸின் உறவினர்கள் கெளரி குடும்பத்தினரை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.


அதன்பிறகு சிங்கப்பூர் சென்ற இலியாஸ் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.


உடனே, தன்னையும் இலியாஸின் சொத்துக்கு வாரிசாக ஏற்க வேண்டும் என்று உச்சிப்புளி முஸ்லிம் ஜமாத்தில் கெளரி புகார் செய்தார். ஜமாத் பிரமுகர்கள் விஷயத்தை ஆராய்ந்து, இஸ்லாமியர்கள் பின்பற்றும் தொழுகை, இஸ்லாத்தை தழுவிய பெண்கள் செய்ய வேண்டிய மத விஷயங்கள் உட்பட எந்த காரியங்களையும் கெளரி செய்யாமல் இருந்ததைக் கண்டித்தும், கெளரி இலியாஸை இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்யவில்லை என்பதை கூறியும் கெளரியின் புகாரை புறக்கணித்துள்ளனர்.


வேறுவழியில்லாத நிலையில் கெளரி, தன் தம்பி சந்துருவுடன் மீண்டும் சென்னையில் குடியேறினார். அதன்பின், சென்னையில் கெளரி மீண்டும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.


சந்துரு, தன்னுடைய 18 வயதில் அண்ணாமலை நகரில் இருந்த ஒரு முஸ்லிம் பெண்ணில் பின்னால் சுற்றியிருக்கிறார். இது தெரிந்து, அங்குள்ள கன்னார் தெரு முஸ்லிம் ஜமாத்தார்கள் சந்துருவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.


ஆரம்பத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் நடன குழுக்களில் ஆடி வந்திருக்கிறார் சந்துரு. அப்படித்தான் கலைஞர் டிவியில் கலா மாஸ்டர் நடத்திய ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியிலும் பங்குபெறும் வாய்ப்பை பெற்று நடனம் ஆடி பரிசு வாங்கியிருக்கிறார்.


மேலும் சந்துரு 10-ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாராம். மற்றபடி மீடியாக்களில் வருவதுபோல அவர் எம்.பி.ஏ. பட்டதாரி என்பதற்கான ஆதாரமோ, சினிமாவில் அவர் உதவி இயக்குனராக வேலை செய்தார் என்பதற்கான ஆதாரமோ இல்லவே இல்லை.


மானாட மயிலாட நிகழ்ச்சியில் கிடைத்த பெயரை வைத்து பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்திருக்கிறார் சந்துரு. அப்படித்தான் ஒரு கலைநிகழ்ச்சியில் தாமினியை சந்தித்து உண்மையாக காதலிப்பது போல நடித்து அந்தப்பெண்ணை மடக்கியிருக்கிறார்.


இப்படித்தான் இந்த சந்துரு என்பவரின் வாழ்க்கைப் பின்னணி இருந்து வந்திருக்கிறது.


இந்த விசயங்களை முன்னிறுத்தி தான் தன் மகள் சந்துருவை காதலிப்பதை எதிர்த்து வருவதாய் இயக்குநர் சேரன் தெரிவிக்கிறார்.


கல்லூரி தோழர்கள் இருவர்: முன்னணி இயக்கத்தின் பொது செயலாளர்கள்!!!

சென்னை, ஆகஸ்ட் 05: சென்னை புதுக்கல்லூரியில் பயின்றவர்கள் தான் இந்த இருவரும் கல்லூரியில் பயிலும் காலத்திலேயே சமுதாய உணர்வோடு முஸ்லிம் மாணவர் பேரவையில் இருந்து சமுதாய இளைஞர்களை ஒன்றிணைத்து பல நல்ல காரியங்களை ஒன்றிணைந்து இந்த இருவரும் செய்து வந்தனர் .முஸ்லிம் லீக்கின் குடும்பத்தில் பிறந்தவரான அபூபக்கர் அவர்கள் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு பல பணிகளை செய்து 1999ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டில் பல இளைஞர்களை ஒன்றிணைத்த பெருமை அபூபக்கர் அண்ணன் அவர்களையே சாரும் .


துடிப்போடு என்றும் உலா வரும் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் 1995 உருவாக்கப்பட்ட தமுமுகவில் இனைந்து பல போராட்டங்களில் பங்கேற்று சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னை உட்படுத்தியுள்ளார் .அபூபக்கர் அவர்கள் எதையும் பொறுமையோடு அறிவோடு கையாளும் பக்குவம் உடையவர் காரணம் இவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமது அவர்களின் அரசியல் வழியில் வந்தவர் .சகோதரர் தமீமுன் அன்சாரி ஒரு சிறந்த பேச்சாளர் இன்று இளைஞர்கள் அவரின் பேச்சில் சமுதாய உணர்வு இருக்கிறது நாமும் சமுதாய பணியாற்றணும் என்ற சிந்தனை இளைஞர்களிடத்தில் வந்துள்ளது .


இருவரும் சமுதாய முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பியதால் அல்லாஹ் இவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகளை வழங்கி சமுதாய பனி ஆற்ற வைத்துள்ளான் ஆகவே தான் இன்று முஸ்லிம் லீக் பொது செயலாளராகவும் மத்திய அரசின் மதரசா மேம்பாட்டுக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக செயல்படும் அண்ணன் அபூபக்கர் அவர்கள் இன்றும் முஸ்லிம் மாணவர் பேரவையில் எங்களை போன்ற நிர்வாகிகள் சமூகப்பணிகளை செய்ய சிறப்பாக வழி காட்டிவருகிறார் .


பேச்சால் உணர்வால் இன்று மமக வின் பொது செயலாளராக சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார் சிராஜுல் மில்லத் அவர்களின் மீது இன்றும் தனி ஒரு மரியாதையை சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் வைத்திருக்கிறார் காரணம் முஸ்லிம் லீக் தலைவர்களின் சமுதாய உணர்வும் தியாகமும் தான் என்றால் அது மிகையாகாது .


இந்த இரு கல்லூரி நண்பர்களும் இயக்கங்களில் வேறுபட்டிருக்கலாம் ஆனால் சமுதாயத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள் அல்லாஹ் இவர்களின் சேவைகளை பொருந்தி கொள்வானாக …..ஆமீன் !
குறிப்பு :என் மனதிற்கு தோன்றியதை எழுதினேன் இவர்களைப்போல் இயக்கங்களில் வேறுபட்டாலும் சமுக பணிகளில் நண்பர்களாய் ஒன்றிணைவோம் இன்ஷா அல்லாஹ்
என்றும் உங்கள் சகோதரன் :

தகவல் ;கீழக்கரை சமீர் 
                 புதுக்கல்லூரி மாணவர் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)