முத்துப்பேட்டை, செப்டம்பர் 24 : முத்துப்பேட்டை ரயில்வேக்கு சொந்தமான புளிய மரம் ரயில்வே குடியிருப்பில் உள்ளது. இந்த மரம் அந்த இடத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த மரம் சுமார் 100 அடிக்கு பரந்தும் விரிந்தும் சுமார் 90 அடி உயரத்துக்கு காணப்பட்ட புளிய மரம் அந்த பகுதி பொது மக்களுக்கு நிழலாக காணப்பட்டன. அப்போது அந்த இடத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் உடும்பு ஒன்றை கண்டனர் அந்த உடும்பு மரத்திற்கு உள்ளே சென்றதால் அவற்றை பிடிக்க கம்பில் துணியை கட்டி அந்த மரத்து அடிப்பகுதியில் தீயை வைத்தனர். இதனால் அந்த மரம் மல மல வென தீ பற்றி பிடித்தது. இவற்றை அணைக்க முயன்றாலும் அவற்றை முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால் அந்த மரம் கீழே சாய்த்து.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
0 comments:
Post a Comment