முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மன்னார்குடியில் தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: விவசாயி அடித்துக்கொலை

மன்னார்குடியில் தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: விவசாயி அடித்துக்கொலை

மன்னார்குடி, மே 25: எடை மேலையூர் அருகே உள்ள வடக்கு கண்டியன்தெரு காலனியை சேர்ந்தவர் சேவையன் (60), விவசாயி. இவரது தம்பி அழகிரி (48). சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தவமணி (40). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

விவசாயி சேவையனின் முதல் மனைவி கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு ஓடி விட்டார். இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் 2-வது மனைவியும் நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்து விடவே சேவையன் மனவிரக்தியில் காணப்பட்டார். இதனால் பக்கத்து வீட்டில் வசித்துவந்த தம்பியின் மனைவி தவமணி அவருக்கு ஆறுதல் கூறி வந்தார். இருவரும் வெளியிடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.

மேலும் அழகிரி சென்னைக்கு அடிக்கடி சென்று விடுவதால் தவமணிக்கும் சேவையனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அழகிரிக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் இருந்து திடீரென ஊருக்கு திரும்பி வந்த அழகிரி சேவையனுடன் தகராறில் ஈடுபட்டார். இதேபோல் நேற்று நள்ளிரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த அழகிரி எனது மனைவியுடன் நீ தனிமையில் உல்லாசமாக இருக்கீறாயா? என்று கூறி வீட்டின் அருகே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சேவையனின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அண்ணன் இறந்து விட்டதை அறிந்த அழகிரி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

தகவல் அறிந்த வடுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அழகிரியை தேடிவருகிறார்கள். கள்ளத்தொடர்பு காரணமாக தம்பி அண்ணணை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)