முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தலைமை ஆசிரியரை கொன்ற மனைவி 5 மாதங்களுக்கு பின் போலீசில் சரண்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தலைமை ஆசிரியரை கொன்ற மனைவி 5 மாதங்களுக்கு பின் போலீசில் சரண்

திருவாரூர், அக்டோபர் 17: திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூர் மரக்கடையில் வசித்து வந்தவர் தனசேகரன் (45). இவர் கூத்தா நல்லூர் அருகே உள்ள நாகராஜன் கோட்டகம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சுமதி (42). இவர் பழையனூரில உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனசேகரன் கடந்த மே மாதம் 15–ந் தேதி மர்மமான 
முறையில் இறந்து கிடந்தார்
.
அவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனசேகரன் மனைவி சுமதி திருவாரூர் டி.எஸ்.பி. வைத்தியலிங்கத்திடம் சரண் அடைந்தார். அப்போது அவர் தனது கணவரை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
தனக்கும் தான் பணிபுரியும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதற்கு கணவர் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக போலீசில் கூறினார்.
சரண் அடைந்த சுமதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கணவரை கொன்றதாக 5 மாதங்களுக்கு பின் மனைவி போலீசில் சரண் அடைந்துள்ள சம்பவம் கூத்தா நல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)