முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மோடிக்கு எதிராக மெரினா -அண்ணாசாலை -சென்ட்ரல் -உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்







சென்னை, அக்டோபர் 18: நரேந்திர மோடி இன்று சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் எதிரில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டு  தள்ளு முள்ளு நடந்தது.   இதில், மாதர்சங்கத்தை சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.

ஒரு மாணவரின் சட்டையை கிழித்து லத்தியால் தாக்கினர் போலீசார்.  இதனால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பிறகு துணை கமிஷனர் கிரி மாணவர்களை சமாதானம் செய்து அனைவரையும் கைது செய்தனர்.  இதனால் அண்ணாசாலை பரபரப்புடன் காணப்பட்டது.

  புரட்சிகர் மாணவர் - இளைஞர் முன்னணி யினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செண்ட்ரலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது டாடா, அம்பானிகளின் எடுபிடி, இந்துமதவெறி பாசிஸ்ட் மோடியே தமிழகத்தில் நுழையாதே என்று கோஷம் எழுப்பினர்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)