முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: INTJ கடும் கண்டனம்!!!



சென்னை, நவம்பர் 04: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலசெயலாளர் அபூபைசல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை கண்டிக்கும் முகமாக இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு 1 வது வார்டு கவுன்சிலர் கொசு வலை போர்த்தி வந்ததை படமெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களுடன் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,பின்னர் பத்திரிக்கையாளர்களை தாக்கியும் உள்ளார்.தாக்கப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

பத்திரிக்கையாளர்கள் மீது நடத்திய தாக்குதலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.தாக்குதல் நடத்திய பேரூராட்சி மன்ற தலைவரை கடுமையான சட்ட   பிரிவுகளின் கீழ் கைது செய்யவும் காவல்துறையை கேட்டுக்கொள்கிறது.அதேசமயம் பத்திரிக்கையாளர்கள் அனுமதியின்றி உள்ளே வந்தார் என்று கூறும் நிர்வாகம்,காவல்துறையின் துணையுடன் அவர்களை வெளியேற்றி இருக்க வேண்டுமே தவிர,நேரடி தாக்குதலில் ஈடுபட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)