முத்துபேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில ஊர்வலம் சென்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியது. இதுகுறித்து பாதிக்கப்பட்டபவர்கள் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஊர்வலத்தில் தலைமை வகித்த பொன்னுச்சாமி, ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் உப்பூர் இளமாறன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில ஊர்வலம் சென்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியது. இதுகுறித்து பாதிக்கப்பட்டபவர்கள் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஊர்வலத்தில் தலைமை வகித்த பொன்னுச்சாமி, ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் உப்பூர் இளமாறன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment