முத்துப்பேட்டை வினாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்களின் சொத்துக்கள் அடித்து நொருக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே!!
சம்பவம் நடந்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்க்கு சென்ற தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் நிலமையை நேரில் ஆய்வுசெய்தனார்
உடனடியாக மாவட்ட மாநில நிர்வாகிகளின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டது மாநில நிர்வாகிகள் மூலமாக சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டது
மாவட்ட மாநில நிர்வாகிகளின் ஆலோசனைபடி அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர்
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு ஆவேசமாக களத்தில் இறங்கிய சகோதரர்களிடம் எதையும் சட்டப்படி செய்வதில்தான் வெற்றிகிடைக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவ்ஹித்ஜமாத் ஆவனசெய்யும் என உறுதிகொடுக்கப்பட்டது
அப்பொழுதே மஸ்ஜித்நூரில் அவசர ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டது உடனடியாக பாதிக்கட்ட சகோதரர்களை அழைத்துத்துசென்று காவல்துரையில் புகார் செய்வது என முடிவு செய்யப்பட்டது
புகார்கொடுக்க காவல்நிலையம் சென்ற நிர்வாகிகளிடம் புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
நடந்த அசம்பாவிதங்களுக்கு காரனமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் தாமதாகும் பட்சத்தில் மாநில தலைமையின் ஆலோசனைபடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்!! என்று தவ்ஹீத் ஜமாஅத் எச்சரித்துள்ளது .
0 comments:
Post a Comment