முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை கலவரத்திற்கு காவல்துறையும் உடந்தை -INTJ மாநில செயலாளர் பிர்தவ்சி பரபரப்பு குற்றச்சாட்டு !!!





முத்துப்பேட்டையில் இந்துமுன்னணி சார்பில் கடந்த 03-09-2014 அன்று விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டது .அப்போது ஊர்வலத்தில் வந்த ரவுடி கும்பல்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள் மீது கல் வீசி தாக்கி வன்முறையில் ஈடுப்பட்டனர்.இதனால் முத்துப்பேட்டையில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு ,அமைதியற்ற சூழல் உருவாகி மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .இதனை அறிந்த இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் முத்துப்பேட்டை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் .இந்நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் பிர்தவ்சி முத்துப்பேட்டைக்கு வருகை தந்து இந்துமுன்னணி வன்முறை கும்பல்களால் தச்க்குதளுக்குள்ளான வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார் .பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .

அப்போது பேசிய அவர் ,விநாயகர் ஊர்வலத்தில் நீதிமன்ற உத்தரவு மீரப்பட்டுள்ளதகவும் , விநாயகர் ஊர்வலம் செல்லும் நேரம் சரிவர பின்பற்ற படவில்லை என்றும் இதற்கு மாவட்ட காவல்துறையின் அலட்சிய போக்கே கரணம் என்றும் குற்றம் சாட்டினார் .கடந்த 20 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் விநாயகர் ஊர்வலம் சென்று வந்ததாகவும் ,இதனை நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண உதவியது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ,இதற்கு பெரிதும் முயற்சி எடுத்து வெற்றி காண போராடியது இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளரான முத்துபேட்டை ஷிப்லி என்றும் பெருமிதத்தோடு கூறினார் .

மேலும் வரக்கூடிய காலங்களில் இஸ்லாமியர்களின் பகுதிகளுக்குள் விநாயகர் ஊர்வலத்தை அறவே வர விடாமல் தடுப்பதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சட்ட ரீதியிலான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ,பிர்தவ்சி கூறினார் .

முன்னதாக இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் பிர்தவ்சி மற்றும் ரஸ்தா செல்வம் ,பியுட்டி நவாஸ்கான் , கவுன்சிலர் பாவா ,நிஜாம் ஆகியோர் திருத்துறைபூண்டியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமாரை சந்தித்து பேசினார் .

செய்தி :ஜே : ஷேக் பரீத்


0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)