முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கும்பகோணம் பாத்திமா நாச்சியார் மக்களை ஏமாற்றியது எப்படி ?ஒரு திடுக் ரிப்போர்ட் !!!

146619613 ஆயிரம் பவுன்; 30 கோடி மோசடி – பாத்திமா நாச்சியார் கூறும் பரபரப்புத் தகவல்கள்.   கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோயில் அருகில் இந்திரா நகர் புதுத் தெருவில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தவர் பாத்திமா நாச்சியார். இவர் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் தமிமுன் அன்சாரி.
பாத்திமாவிடம் 10 பவுன் தங்க நகையைக் கொடுத்தால் ரூ.15 ஆயிரம் தருவாராம். இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் ரூ.30 கோடி மதிப்புள்ள நகைகளைப் பாத்திமா வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நகைகளைப் பெற்ற பாத்திமா நாச்சியார், அவற்றைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாக சென்னையில் தமிழக டிஜிபி ராமானுஜத்திடம் சிலர் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சென்னை சென்ற பாத்திமா, டிஜிபியைப் பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாத்திமா நாச்சியார் வீட்டுக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. ஒரு மணி நேரம் கழித்து வந்தவர், “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:   “2010-லிருந்து 2012 ஜனவரி வரை நகை சுழற்சி (?) செய்து வந்தேன். எனக்கு 23 பேர் முகவர்களாகச் செயல்பட்டனர். நாகை மாவட்டத்தில் உள்ளவர்களிடம்தான் நாங்கள் நகைகளை வாங்கியுள்ளோம். அவர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து 10 பவுன் நகை வாங்கித் தந்தால், 10 நாளில் ரூ.15 ஆயிரம் தருவேன்.
ஒரு மாதத்தில் நகையை திரும்பத் தந்து விடுவேன். எல்லோரும் ஒரு குடும்பம்போல் இருந்தோம். நகை சுழற்சி நடக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நகைகளை மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனத்தில் அடகு வைத்துதான் பணத்தை தந்து கொண்டிருந்தேன். முதலில் அவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் நகை வைக்கலாம் என்றார்கள். ஒருகட்டத்தில், அவர்கள், தொகை ரூ.8 கோடிக்கு மேல் தாண்டிவிட்டது, இனிமேல் நகை வைக்க முடியாது என்றதால் பண சுழற்சி நின்றுவிட்டது.
அப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. இந்நிலையில் மயிலாடுதுறை ஐசிஐசிஐ வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்கர் என்பவர் உதவ முன்வந்தார். ஒருவரின் பெயரில் ரூ.4.50 லட்சம் வரை நகைக் கடன் பெறலாம் என்பதால், அவரே சுமார் 150 பேரின் பெயரில் நகைக் கடன் பெற்றுத் தந்தார். அவரே பெயர் வைத்து, ஆவணங்களையும் தயார் செய்து கொண்டார். இதற்காக என்னிடம் ரூ.4.50 கோடி வரை கமிஷனாகப் பறித்துக்கொண்டார்.
இந்நிலையில், சில வாடிக்கையாளர்கள் 10 மாதம் வரை நகையை வைத்துக்கொள்ளுங்கள், முதலிலேயே ரூ. 1 லட்சமாகத் தந்துவிடுங்கள் என்றனர். அப்படி என்றால் நகையை திரும்பத் தரும்போது பணத்தையும் திரும்பத் தந்துவிடவேண்டும் என்ற நிபந்தனைப்படி எல்லோருக்கும் பணம் தந்தேன். முகவர்களால்தான் பிரச்சினை இதற்காக நான் யாரிடமும் எழுதிக் கொடுக்கவில்லை. என்னிடம் வாங்கிய பணத்துக்கு முகவர்கள் எழுதித் தந்துள்ளனர்.
அந்தப் பணத்தை அவர்களை வேறு வழிகளில் முதலீடு செய்து, வீடும் சொத்தும் சேர்க்கத் தொடங்கியதால்தான் பிரச்சினை ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில்தான், மயிலாடுதுறையிலிருந்து நான் அடித்துத் துரத்தப்பட்டு, கும்பகோணத்தில் உள்ள எனது கணவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறேன். மயிலாடுதுறையில் உள்ள வீட்டை எனது முகவராக செயல்பட்ட தன்ஷிலா வடகரை என்பவருக்காக பாமகவைச் சேர்ந்த வி.ஜெ. மணி, ம.க. ஸ்டாலின் ஆகியோர் எங்களை மிரட்டி வீட்டின் பத்திரத்தை வாங்கிச் சென்று விட்டனர்.
என் மீது நாகை காவல் நிலையத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நான் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது எனக்கு உதவ உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இம்தியாஸ் என்பவர் முன்வந்தார். என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்யவுள்ளதாகவும், அதனால் முன்ஜாமீன் பெற வேண்டும் என்று அவர் கூறியதோடு, இந்தப் பிரச்சினைகளை முழுமையாக முடித்துத் தருவதாகக் கூறி ரூ.13 லட்சம் வரை பறித்துக் கொண்டார். முன் ஜாமீன் மட்டும்தான் பெற்றுத் தந்தார்.
முன்ஜாமீன் பெற ரூ.22 ஆயிரம்தான் செலவாகும் என்பது பின்னர்தான் தெரிந்தது. என்னை மிரட்டி பணம்பறித்துக்கொண்ட அவர், எனது காரையும் தர மறுக்கிறார்.   கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத சுமார் 20 பேர் வந்து எனது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து என் கணவரை கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து நான் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு திரும்பிய நிலையில், டி.வி.யில் நான் நகை மோசடி செய்துவிட்டு தலைமறைவானதாக செய்தி வந்தது.
அதனால், நான் உடனே புறப்பட்டு சென்னை சென்று டிஜிபி ராமானுஜத்தைச் சந்தித்து விளக்கம் அளித்தேன். நாகை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு உங்கள் தொடர்பான புகார்களை அனுப்பிவிடுகிறோம். அவர்கள் அந்த வழக்கை விசாரிப்பார்கள். உங்கள் கணவரையும் மீட்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அனுப்பிவைத்தார். 8 ஆயிரம் பவுன் நகை அடகு இப்போது எனது பொறுப்பில் 8,000 பவுன் நகைகள் வங்கியில் மீட்க முடியாத நிலையில் உள்ளன. மற்றவை எனது முகவர்களிடம்தான் உள்ளது.
எனக்கு முகவர்கள் தர வேண்டிய தொகை ரூ.8 கோடி வரை உள்ளது. நகை மற்றும் ரூ.8 கோடி பாக்கியை அவர்கள் தந்தால்தான் பணத்தை திரும்பத் தர முடியும். நான் யாரிடமும் நகையை வாங்கும்போது கையெழுத்திடவில்லை. ஆனால் முகவர்கள் என்னிடம் வாங்கிய தொகைக்கு ஆதாரம் இருக்கிறது. என்னுடைய பிரச்சினையைப் பயன்படுத்தி, முகவர்கள், வழக்கறிஞர்கள், போலீஸார் எனப் பலரும் என்னிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்” என்றார்.
இதன் பின்விளைவுகள் தெரிந்துதான் இதில் ஈடுபட்டீர்களா, வாடிக்கையாளர்களிடம் வாங்கிய நகைகளுக்கு யார் பொறுப்பு என்றபோது, “இதை விளையாட்டாகத்தான் செய்யத் தொடங்கினேன். இந்த அளவுக்கு விபரீதமாகும் என்று நினைக்கவில்லை. எனது கணவர் வெளிநாட்டில் இருந்ததாலும், நான் ஒரே பிள்ளை என்பதாலும் எனக்கு ஆலோசனை வழங்க யாரும் இல்லை. நான் என்ன செய்துள்ளேன் என்பதை நினைக்கும்போது பயமாக உள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கிறேன்” என்கிறார் பாத்திமா.
கதவுகளை இயக்கிக் கொண்டிருந்த நவீன ரிமோட் கருவிகள், வீட்டினுள் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள டி.வி., ஆடம்பரப் பொருள்கள், வெளிப்புற கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள் வயதான தாய், தந்தை, கடத்தல் பயத்தால் 10-ம் வகுப்போடு படிப்பு நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டாக வீட்டினுள் அடைபட்டுள்ள மகன் மகளுடன், சில இளைஞர்களின் பாதுகாப்புடன் மார்பிள் கற்களால் இழைக்கப்பட்ட தளத்தில் குஷன் சோபா செட், மென்மயிர் கம்பளம் விரிக்கப்பட்ட முற்றத்தில் அமர்ந்தவாறு அச்சத்துடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார் பாத்திமா நாச்சியார்.

பிரபல நகை மோசடி பேர்வழி கும்பகோணம் பாத்திமா கைது -சங்க்பரிவார கும்பல் பின்னணியா ?

மயிலாடுதுறையில் 6 ஆயிரம் பவுன் தங்க நகைகள் மோசடி: கைதான கணவன்–மனைவியிடம் போலீசார் விசாரணை

நாகப்பட்டினம்,நவம்பர் 18: தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன்அன்சாரி (வயது 47). இவருடைய மனைவி பாத்திமா (40).
இவர்கள் தங்க நகைகளை கொடுத்தால் மாதந்தோறும் பணம் தருவதாகவும், ஒரு பவுனுக்கு ரூ.ஆயிரம் தருவதாகவும், கேட்கும் நேரத்தில் தங்க நகைகளை பணத்துடன் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறி தொழில் நடத்தி வந்தனர். இவர்கள் கூறியதை உண்மை என நம்பிய மயிலாடுதுறை கிளியனூர், வடகரை, சிதம்பரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தங்களுடைய தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்தனர்.

முதலில் பெண்களிடம் தங்க நகைகளை வாங்கி அதை தனியார் வங்கிகள், பெரிய நிதி நிறுவனங்களில் அடகு வைத்து மாதந்தோறும் பணமாக கொடுக்கப்பட்டது. இதை நம்பி மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மேலும் பல பெண்கள் தமிமுன்அன்சாரி மற்றும் பாத்திமாவிடம் தங்க நகைகளை கொடுத்தனர்.
பின்னர் இருவரும் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் முகவர்களை நியமித்து தொழில் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் 10 ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்க நகைகளை கொடுத்த பெண்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து தமிமுன்அன்சாரி மற்றும் அவரது மனைவி பாத்திமாவிடம் கேட்டனர். அப்போது கணவன்–மனைவி இருவரும் தங்க நகைகளை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மயிலாடுதுறை பகுதிகளை சேர்ந்த பெண்கள் நாகை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் பாத்திமா தமிமுன்அன்சாரி ஆகியோர் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தது பற்றியும், பின்னர் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றியது பற்றியும் கூறி இருந்தனர். பின்னர் இதுதொடர்பாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தியிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று நகை மோசடி குறித்து புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து 10 ஆயிரம் பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக புகார் கூறப்பட்ட பாத்திமா சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது கணவர் தமிமுன்அன்சாரி கடத்தப்பட்டு விட்டதாக கூறி இருந்தார். இந்த புகார் மனு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மோசடி புகார் தொடர்பாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் இருந்த பாத்திமா, அவருடைய கணவர் தமிமுன்அன்சாரி ஆகியோரை நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நாகைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடந்தது. விசாரணையில் தமிமுன் அன்சாரியும், பாத்திமாவும் சேர்ந்து மயிலாடுதுறை பகுதி பெண்களிடம் இருந்து 6 ஆயிரத்து 184 பவுன் நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

துபாயில் ரூம் இன்சார்ஜுகள் எப்படி இருப்பார்கள் ?ஒரு சுவாரஸ்யமான தகவல்கள் :

துபாயில் ரூம் இன்ச்சார்ஜிகள் எப்படி இருப்பார்கள் என்று துபாய் வாழ் நண்பர்கள் நன்கு அறிந்து இருப்பார்கள் அறியாதவர்களுக்கு அது பற்றிய சில சுவாரசியமான ஒரு பதிவு
துபாயில் ரூம் இன்ஜார்ஜிகள் :-
1.அடுத்தவன் பணத்தில் ரூம் வாடகை கழிப்பார்கள்
2.ரூம்பில் அவர் படுக்கும் போது மட்டும் ஏசி எப்போதும் ஆன் செய்து இருக்கும்
3.ரூம்பில் உள்ள சின்ன சின்ன வேலைகளை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பார் அவர் ஒரு வேலையும் செய்ய மாட்டார்
3.ரூம்பில் முக்கிய இடத்தில் அவருக்கு படுக்கையே வசதியாக அமைத்து கொள்ளுவார்
4.எப்போதும் டிவி ரிமோட்டை அவர் மட்டும் தான் வைத்து இருப்பார் . அவர் விரும்பும் நிகழ்ச்சிகளை தான் மற்றவர்களும் பார்க்க வேண்டும்
5.அவர் படுக்கும் போது மட்டும் FAN அதிகபடுத்தி இருப்பார்
6.அனைவரின் பணத்தில் ஓசி சாப்பாடு சாப்பிட்டு கொண்டு அவர் விரும்பும் சமையல் மட்டும் செய்ய சொல்லுவார்
7.தண்ணீர் கேன் அவருடைய பக்கத்திலேயே வைத்து இருப்பார்
8.அனைவரும் அவர்களுடைய துணிகளை ஆண்கரில் மாட்ட தக்காளி அவர் மட்டும் தனி பிரோ வைத்து இருப்பார்
இப்படி மோசமான ரூம் இஞ்சார்ஜிகளும் இருக்கிறார்கள் துபாயில் …
இப்படி உள்ள நண்பர்கள் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து உங்களுடைய நடவடிக்கையை மாற்றி கொள்ளுங்கள், யாரும் யாருக்கும் எங்கும் எப்போது அடிமை இல்லை

மெளவத் அறிவிப்பு: "A. அப்துல் ஜப்பார்"


முத்துப்பேட்டை, நவம்பர் 09: முத்துப்பேட்டை கல்கேனித்தெரு மர்ஹும் M.முகமது ஹசனாலை அவர்களின் மகனும், மர்ஹும் M. மௌலா அபூபக்கர், மர்ஹும் M. நைனா முகமது, M.அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரரும், J. அஸ்கர் அலி, முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கத்தின் துணைத் தலைவர் MRS. அஹமது ராவுத்தர், ஜனாப் சேக் தாவுத் (மதுக்கூர்) இவர்களின் மாமனாரும் A. முகமது ஹசன் அவர்களின் தகப்பனாருமாகிய “A. அப்துல் ஜப்பார்” அவர்கள் நேற்று காலை 8 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) 

அன்னாரின் ஜனாசா நேற்று மாலை 4.30 மணியளவில் குத்பா பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அறிவிப்பவர்:

A. முகமது ஹசன் +971 55 88 44 392

மேலும் தொடர்புக்கு:

MRS.அஹமது ராவுத்தர். +971 55 22 37 541
MRS. சேக்காதி.                    +971 50 45 08 132

நமது நிருபர்:

KM காதர் கனி (பாடகர்)


எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: "தவ்சிஃப் அஹமது" அழைப்பு:



முத்துப்பேட்டை,நவம்பர் 09 : முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 முஹர்ரம் பிறை 27,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-12-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால்  நிச்சயித்த வண்ணம் திருத்துறைப்பூண்டி விஜிலா திருமண மஹாலில்  எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு: 

மேலும் தொடர்புக்கு:

பவுசுல் ரஹ்மான்: 
கிட்டங்கித் தெரு: 
தொலைபேசி எண்: 0091 7845 412 661

நமது நிருபர் 

AKLT. அப்துல் ரஹ்மான்.

கொத்பா பள்ளிவாசல் அருகே மலை போல் குவியும் குப்பைகள் -பேரூராட்சியின் மெத்தனப்போக்கை கண்டித்து டிராக்டரை முற்றுகையிட்ட 8-வது வார்டு மக்கள் :

முத்துப்பேட்டை நவ – 06
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கபட்டுள்ளனர் . இந்த நிலையில் நகர் முழுவதும் குப்பைகள் பேரூராட்சி அப்புறப்படுத்தாததால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி அதன் மூலம் டெங்கு கொசுகள் உற்பத்தி ஆவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அல்லபடாததை கண்டித்தும், கொத்துபாபள்ளி வாசல் எதிர்புறம் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதை கண்டித்தும் நேற்று கொத்துபாபள்ளி வாசல் எதிர்புறம் குப்பை சேகரிக்க வந்த பேரூராட்சி டிராக்டரை அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ அயுப்கான், ஹமீது கட்டி , சஃபான் மற்றும் பொதுமக்கள் வழிமறைத்து முற்றுகையிட்டு சிறைபிடித்தனர் . இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கூடினார்கள் . சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை போலீசார் மற்றும் பேரூராட்சி சுகாதார அலுவலர் வீரமணி ஆகியோர் சிறை பிடித்த மக்களிடம் இனிமேல் பள்ளிவாசல் முன்பு குப்பைகள் கொட்டமாட்டோம் . வார்டு பகுதியில் நாளை முதல் உடனக்குடன் குப்பைகள் அகற்றப்படும் என்று உறுதி அளித்ததால் சிறைபிடித்த டிராக்கடரை பொதுமக்கள் விடுவித்தனர் .





காந்தியை ஏன் கொலை செய்யக் கூடாது? இந்த தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.. -இந்துத்துவப் பெண்ணின் திமிர் பேச்சு!

சென்னை, நவம்பர் 04: சன் டிவி வளாகத்தில் பேராசியர் மார்க்ஸ் அவர்களுக்கும் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலின் சுருக்கும்:

முஸ்லிம்கள் மீது நடைபெற்ற வன்முறை ஒன்று குறித்து விவாதிக்க 'சன் டிவி' வீரபாண்டியன் கூப்பிட்டிருந்தார்.

முன்னதாக கான்டீனில் அமர்ந்து நானும் அவரும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தோம், சற்று நேரத்தில் என்னுடன் விவாதிக்க இருந்த இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு வந்தார்.

வந்தவுடன் எங்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு 'டி.வி.டி'யைத் தந்தார். படு பந்தாவாகப் பேசிக் கொண்டிருந்தார்.

தான், ஒரு முறை காரில் திருச்சி சென்றபோது உளுந்தூர்பேட்டை அருகில் காரில் ஏதோ ரிப்பேர் ஏற்பட்டு, இரண்டு மணி நேரம் அங்கு நிற்க நேரிட்டதாம்.

அதற்குள் ஏகப்பட்ட லாரிகளில் மாடுகள் கேரளாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து மனம் நொந்தாராம்.

அது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆவணப் படம் இது, என்றார்.

அப்படியா, வீட்டிற்குப் போய் பார்க்கிறேன் என்றேன்.

cow slaughter தொடர்பான அந்தப் படம் எடுக்கும்போது பல மாநிலங்களிலும் தகவல் திரட்டுவதில் ஏற்பட்ட கஷ்டத்தை விளக்கிய அவர், குஜராத் மாநில நிர்வாகத்தை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்.

குஜராத் மாநில 'அனிமல் ஹஸ்பன்டரி' இயக்குனரிடம், அங்குள்ள நிலை குறித்து கேட்ட மாத்திரத்தில் விவரங்களை அடுத்த கணமே அவர் கூறி விட்டாராம்.

அந்த அம்மையாரின் அலட்டல்களால் சற்றே எரிச்சலுற்றிருந்த நான், இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்தேன்.

"why, why, why are you laughing?" என்றார்.

"ஒண்னும் இல்ல. அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்னு நினைச்சுப் பார்த்தேன், சிரிப்பு வந்துவிட்டது" என்றேன்.

"what, what, what do you mean?" என்றார்.

"we don't slaughter cows. we slaughter only Muslims"

அப்படீன்னு அவர் சொன்னாரா? என்றேன்

கொதித்துப் போனார் அவர். சட்டென்று நாற்காலியிருந்து எழுந்தார். "இப்பிடியெல்லாம் பேசக் கூடாது. இங்கே எவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கு? எவ்வளவு இந்துக்கள் கொல்லப்பட்டிருக்காங்க, அதை எல்லாம் பேசுவீங்களா?' எனச் சீறினார்.

விவாதம் முற்றியது...

காந்தி கொலை பற்றிப் பேச்சு வந்தது. "காந்தியையே கொல்லவில்லையா நீங்கள்?" என்றேன்.

"Yes, Gandhi was killed. Why not one kill him.. இந்தை தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.."என்றார்.

வீரபாண்டியனுக்குத் தர்மசங்கடமாகி விட்டது. என்ன இருந்தாலும் அவர் host அல்லவா. ஒரு மாதிரியாகச் சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார்.

அன்று நிகழ்ச்சி விவாதமும் படு காரசாரமாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து கீழே செல்ல லிஃப்டை நோக்கிச் சென்றோம். ஊழியர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்றார்.

லிஃப்ட் அருகில் வந்ததும் அவர், "நான் இந்த ஆளோட போக மாட்டேன்.." எனச் சத்தமாகச் சொல்லிவிட்டு எதிரே இருந்த லிஃப்டை நோக்கி தட தடவென ஓடினார்...

அழைத்து வந்த ஊழியர் ஒரு கணம் திகைத்துப் பின் புன்னகைத்தார்.

இஸ்லாமிய பெண்களை காதலித்து விபசாரத்தில் ஈடுபடுத்தவேண்டும் -இலங்கை பொதுபல சேனா அமைப்பு திட்டம் !!!

உலகம், நவம்பர் 04: முஸ்லிம் பெண்மணிகளையும் காதலித்தல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய மூன்று விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான போதுபல சேனை என்ற இயக்கம் வாலிப உறுப்பினர்களை ஊக்குவித்து அன்பளிப்புகளும் வழங்கி வருகின்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு பொருட்கள் விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப்பிரதிநிதிகள் ஆக இவர்கள் வீடுகளுக்கு வந்து கதவைத்தட்டுவார்.முஸ்லிம் பிரதேசங்களிலே இவர்களின் நடாட்டம் அதிகம்.வோசிங்க்பவுடர், கேக் பவுடர், சவர்காரம் உடுதுணிகள் என பெருட்களை வீடு வீடாக வந்து பொருட்களை அறிமுகம் செய்யும் நபர்கள் குறித்து பொதுமக்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆண்கள் அதிகம் இல்லாத மதிய நேரங்களிலேயே இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான நடை உடை பாவனையுடன் வீடுகளுக்குள் நுழைகின்றனர். தம் பொருட்களை விற்பனை செய்வது இவர்களின் நோக்கமல்ல என்பதை நாம் புரிந்தது கொள்ள வேண்டும், வீட்டில் ஆண்கள் இல்லாத சந்த்தற்பங்களில் அறிமுகம் இல்லாத யார் வந்தாலும் கதவை திறக்காமல் இருப்பதே நல்லது. முக்கியமாக வெள்ளிக்கிழமை ஜுமாஹ் தினங்களில் வீட்டில் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இது இவர்களுக்கு மிகவும் வசதியாகி விடும்.

இவ்விசயத்தை ( இந்திய சகோதரர்களும் ) நம் சமூகத்திற்கு எத்தி வையுங்கள். அதிகம் செயார் பண்ணுங்கள்.
STL

ஆரம்பம் திரைப்படமும் – அதிரவைத்த சில உண்மைகளும் !



சென்னை, நவம்பர் 04: “இந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே … யாரையும் குறிப்பிடுபவை அல்ல”
என்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில், யாரையோ குறிப்பிட்டபடியே வெளிவருகின்றன. நடிகர் அஜித் குமார் நடித்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “ஆரம்பம்” அப்படியொரு படம்தான்.
தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னமே வெளியாகிவிட்டதால் நிச்சயம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிவிடும் என ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். இந்தப் படத்தின் திரை மொழி, இசை, காட்சிகள் என நுணுக்கமான ஆய்வுகளை பல விமர்சகர்களும் செய்யக் கூடும். அவற்றையெல்லாம் காத்திருந்து பார்ப்போம். இப்போது, கதையில் நகலெடுக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பேசுவோம்.
மர்மான முறையில் மரணித்த காவல் அதிகாரி:
கதை: “காவல்துறை அதிகாரி அசோக் (அஜித்) தனது நண்பருடன் ஒரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்த்து களமிறங்குகின்றனர். அந்த தாக்குதலில் அசோக்கின் உயிர் நண்பர் மரணமடைய – அதற்கு காரணம் என்ன என்ற ஆய்வைத் தொடங்குகிறார் அசோக்”
Hemant_Karkareஉண்மை: நேர்மையான காவல்துறை அதிகாரி ‘ஹேமந்த் கார்கரே’ – பயங்கரவாத குண்டுவெடிப்புகள் நடக்கும்போது, உரிய விசாரணையைச் செய்யாமல் தவறான நபர்களை  காவல்துறை பலமுறை கைது செய்திருக்கிறது. அதுவும் அரசியல்வாதிகள் கொடுக்கும் அழுத்தம் தாளாமல், யாரோ ஒரு முஸ்லிமைக் கைது செய்துவிடுவதும், அப்பாவிகள் நீதிமன்றக் காவலில் அவதிப்பட, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியாமல் போய்விடுவதும் உண்டு. (பார்க்க)  அப்படி ஒரு வழக்காக முடிந்திருக்க வேண்டிய ‘மாலேவ்கான் குண்டுவெடிப்பு‘ வழக்கை, காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே விசாரித்தார். குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்த ‘இந்து’ மத அடிப்படை தீவிரவாதிகளின் சதியை அவர் வெளிக் கொண்டுவந்தார்.
எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அது அப்பாவிகளின் கொலையிலேயே முடியும். இதனை தனது விசாரணையின் மூலம் நிரூபித்த ஹேமந்த் கார்கரே – மும்பையில் நடந்த ’26/11′ பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக களத்தில் உயிர்களைக் காப்பாற்றினார். பாதுகாப்பற்ற கவசம் வழங்கப்பட்டதாலேயே மரணம் நடந்ததா? என்று சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்த முடியாத வகையில் ஆவணங்கள் தொலைந்தும் போயின.
கதை: “மர்ம மரணம் அடைந்த காவல்துறை அதிகாரியின் நண்பரை தேச துரோகியாக சித்தரிக்கிறது அரசு. அத்தோடு அவரின் மனைவிக்கு ரூ.2 கோடி கொடுப்பதாக பேரம் நடக்கிறது. ‘நான் பேரம் பேசினால் எதுவும் படியாம போகாது என்பது உங்களுக்கே தெரியும். ஆனா என்னாலயே முடியல’ என்றபடி தரகர் ரம்யா வெளியேறுகிறார்”
உண்மை: ஹேமந்த் கர்கரே மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் கைது செய்யப்பட்டதும். பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் அவரை தேச துரோகியாக சித்தரித்தன.
ஆனால், தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு அவர் பலியானதும் மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்தார்.
கதை: “ரம்யா – அரசியல்வாதிகளோடும், தொலைக்காட்சி நிறுவனங்களோடும் இணைந்து செயல்படுகிறார். பலவிதமான தரகு வேலைகளில் களத்தில் நிற்கிறார்”
உண்மை: காங்கிரஸ் ஆட்சியில் வெளிவந்த, வரலாறு காணாத – 2 ஜி முறைகேடு வழக்கில், டாட்டா Nira-Radia-CBI-Raid-e-khabarமற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டவர்  நீரா ராடியா. வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்ற நிற்வனத்தை வைத்துக் கொண்டு அவர் நடத்திய உரையாடல்கள் வெளிவந்தன. (முழு உரைகளும்) இதுபோன்ற தரகர்கள், நமது நாட்டுக்கு அமைச்சராக யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் லாபியிலும் ஈடுபடுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. இதற்கு ஆதாரமாக, அவர்களின் தொலைபேசி உரையாடல்களும் வெளியாகின.
Barkha_Dutt_World_Economic_Forum_Nov_2010இந்த உரையாடல்களின் மூலம் புகழ்பெற்ற NDTV செய்தி சேனலின் செய்தியாளர் பர்கா தத், அதிகார பேரங்களில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததும் செய்தியானது. பெரும் நிறுவனங்களின் கோடிக்கணக்கான லாபங்களுக்காக அவர்கள் அரசின் சொத்துக்களை தரகு பேசுகின்றனர். இதே நீராராடியாதான் டாடா நிறுவனத்துக்கு அடிமாட்டு விலையில் குஜராத் அரசின் நிலத்தையும், நிதி உதவியையும் பெற்றுக் கொடுத்தார் என்பதும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. (http://deshgujarat.com/2010/11/25/was-gujarati-bahu-niira-radia-a-nano-link-between-modi-and-tata/)
கதை: “பிணையில் உள்ள தீவிரவாதியை விடுவித்துக் கொடுக்க ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே பேரம் பேசுகிறார். அதற்கான தொகை துபயில் கை மாறுகிறது”
உண்மை: இன்று நடக்கின்ற தீவிரவாத தாக்குதல்களுக்கெல்லாம் உளவுத்துறை சரியில்லை, எங்கள் ஆட்சியில் அப்படியில்லை என்று சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், கந்தகார் விமானக் கடத்தல் நடந்தது. (நாடாளுமன்ற வளாகத்திலேயே துப்பாக்கிச் சூடும் நடந்தது மற்றொரு அவமானகரமான நிகழ்வு)
இதுபோன்ற தாக்குதல்களை உளவுபார்த்து கண்டுபிடிப்பதை விட – இப்படியொரு சம்பவத்தை வைத்து இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவது அரசியலுக்கு பலன் கொடுக்கும் என நினைத்தார்களோ என்னமோ? அவர்களின் உளவுத்துறை வேலை செய்யவில்லை. இறுதியில் இந்தியாவின் பிணையில் இருந்த தீவிரவாதியை விடுவித்தனர்.
கதை: “ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் ஊழல்”
bangarulaxman_stingop
இந்தப்படம் கிரியேட்டிவ் காமன் உரிமம் பெற்றதல்ல – நன்றி: ராய்டர்ஸ்)
உண்மை: “ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் காங்கிரசும் பாஜகவும் மாற்றி மாற்றி  ஊழல்”
கதை: “ஊழல்வாதியையும், ஊழல்வாதிகளுக்கு துணையாக இருந்தவர்களையும். அவர்களோடு கூட்டு சேர்ந்த தீவிரவாதிகளையும். அசோக் உள்ளிட்ட ‘நல்ல’ கதாப்பாத்திரங்கள் அழிக்கிறார்கள்’.
உண்மை: உண்மையில், நமது நாட்டிற்கு விடப்பட்டிருக்கும் சவாலான ஊழலையும், அப்பாவி மக்கள் கொலைகளின் மூலம் தனது அரசியல் வெற்றியை சாதிக்க கணக்குப் போடும் சக்திகளிடமிருந்தும் இந்தியாவை விடுவிப்பது நமது கைகளில்தான் உள்ளது. சரியான மாற்று எது என்பதை அறிந்து, அதன் வழியே இந்தியாவை திருப்புவது இளைஞர்களாகிய நமது கடமை.
ஆம். இது ‘ஆரம்பம்’ மட்டுமே …

கத்தி குத்தில் மதுக்கூர் வாலிபர் பரிதாப பலி




மதுக்கூர், நவம்பர் 04: மதுக்கூரை சேர்ந்த வாலிபர் முஹம்மது தாரிக் [ வயது 24 ] நேற்று மாலை அதே ஊரைச் சேர்ந்த மதுக்கூர் மைதீன் மற்றும் நியாஸ் ஆகியரோடு ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டார். உடலில் 3 இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதையடுத்து இறந்த உடல் பிரத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பிரத பரிசோதனை முடிந்ததை அடுத்து இன்று மதியம் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மதுக்கூர் பெரிய பள்ளியில் மதியம் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: INTJ கடும் கண்டனம்!!!



சென்னை, நவம்பர் 04: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலசெயலாளர் அபூபைசல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை கண்டிக்கும் முகமாக இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு 1 வது வார்டு கவுன்சிலர் கொசு வலை போர்த்தி வந்ததை படமெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களுடன் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,பின்னர் பத்திரிக்கையாளர்களை தாக்கியும் உள்ளார்.தாக்கப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

பத்திரிக்கையாளர்கள் மீது நடத்திய தாக்குதலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.தாக்குதல் நடத்திய பேரூராட்சி மன்ற தலைவரை கடுமையான சட்ட   பிரிவுகளின் கீழ் கைது செய்யவும் காவல்துறையை கேட்டுக்கொள்கிறது.அதேசமயம் பத்திரிக்கையாளர்கள் அனுமதியின்றி உள்ளே வந்தார் என்று கூறும் நிர்வாகம்,காவல்துறையின் துணையுடன் அவர்களை வெளியேற்றி இருக்க வேண்டுமே தவிர,நேரடி தாக்குதலில் ஈடுபட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

முத்துப்பேட்டை பேருராட்சி கூட்டத்தில் கொசுவலையுடன் வந்த கவுன்சிலரை படம் எடுத்த பத்திரிகையாயளர்களை கொலை வெறியுடன் அடித்து உதைத்த பேருராட்சி தலைவர் அருணாச்சலம்












முத்துப்பேட்டை. நவ.1
முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதிகாரிகள். மற்றும் பேருராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கும் போது 1வது வார்டு பாஜக கவுன்சிலர் மாரிமுத்து என்பவர் கொசுவலை ஒன்றை அணிந்து கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி வீதி வீதியாக வந்து கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார். அதனை பத்திரிகையாளர்கள் படம் எடுத்தனர். இதனை கவனித்த பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் படம் எடுத்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை சரமாரியாகத் தாக்கினார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி பத்திரிக்கையாளர் அனைவரையும் சங்கை அருத்துவிடுவதாக பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார் இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற பேரூராட்சி கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்களின் கேமராக்கள் உடைந்தன. இதனிடையே மற்ற கவுன்சிலர்கள் பேரூராட்சிதலைவர் அருணாச்சலத்தை சமாதானப்படுத்தி அழைத்து இழுத்து சென்றனர்.

இச்சமபவத்தை கண்டித்து பத்திரிகையாளர்கள் பேரூராட்சி எதிரே உள்ள சாலையில் படுத்து சிறிது நேரம் சாலை மறியிலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் சண்முகவேல் மறியலில் ஈடுபட்ட பத்திரிக்கையாளரிடம் பேச்சுவார்தை நடத்தி அருணாச்சலத்தை கைது செய்வதாக உறுதியளித்தார் உடன் பத்திரிக்கையாளர்கள் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பேரூராட்சி தலைவர் அருணாச்சலத்தின் மீது புகார் கொடுத்தனர். ஆதன் அடிப்படையில பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் தரப்பிலும் இன்னிலையில அத்துமீறி செய்தி சேகரித்ததாக 3 பத்திரிகையாளர்கள் மீது புகார் கொடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது. காயம் அடைந்த பத்திரிக்கையாளர்கள் 3 பேர் திருத்துரைப்புண்டி அரசு மருத்துவமனையில் அணுமதிக்கபட்டுள்ளனர்; பத்திரிக்கையாளர் மீது தாக்கதல் சம்பவத்தால் முத்துப்பேட்டை மக்கள் அனைத்து கட்சியினர் சமுக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் , இந்நிலையில் அருணாச்சலத்தை கைது செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர் இதனை தமிழ்நாடு பத்திரிக்கையாளா சங்கம் மற்றும் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது மேலும் இதனை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டுசெல்ல பத்திரிக்கையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது

இதுபற்றி கொசுவலை அணிந்து வந்த கவுன்சிலர் மாரிமுத்து கூறுகையில், முத்துப்பேட்டையில் 25க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பரிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு மர்ம காய்ச்சல் உள்ளது. கொசு ஓழிப்பை தீவிரப்படுத்தாமல் பேரு£ட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்
காட்ட நூதனமான முறையில் கொசுவலை அணிந்து வந்ததை படம் பிடித்ததற்காகவே பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

முத்துப்பேட்டையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மன்னார்குடி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துகட்சியினர், பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.



மெளவத் அறிவிப்பு: "S. கமால் முஹம்மது"


முத்துப்பேட்டை,  அக்டோபர் 30: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு மர்ஹும் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ஒரத்தநாடு S. அப்துல் கரீம், PSM அஹமது இபுராஹிம், ஆகியோரின் மாமனாரும், அப்துல் நவாஸ், சுல்தான் அப்துல் காதர், முஹம்மது முஹைதீன், ஆகியோரின் தகப்பனாருமாகிய "S. கமால் முஹம்மது அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 6.30 மணியளவில் முஹைதீன் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள். 
source from: muthupettaiexpress.com, 
அறிவிப்பவர்: 

PSM முஹம்மது முஹைதீன்.

மேலும் தொடர்புக்கு:

சுல்தான் அப்துல் காதர்: 0091 9500 67 80 17

முஹம்மது முஹைதீன்: 00966 5965 44152 

நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை அருகே கடத்தபப்ட்ட 7.6 கிலோ தங்கம் பறிமுதல். 3 பேர் கைது.







முத்துப்பேட்டை, அக்டோபர் 30 : முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகம் ஆசாத் நகர் பகுதியில் உள்ளது. இந்த கட்டிடத்தில் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை மல்லிப்பட்டிணம் திருத்துறைப்பூண்டி பகுதி அலுவலகமும் இயங்கி வருகிறது. சமீபத்தில் வேதாரண்யம் பகுதியில் 2 மர்ம படகும் கடலூர் பகுதியில் 1 படகும் முத்துப்பேட்டை பகுதியில் 1 படகும் ஒதுங்கியது. அதனால் சுங்க இலகா அதிகாரிகளுடன் மத்திய கடத்தல் பரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில் ஏற்கனவே 55 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தல் காரரிடமிருந்து பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதனால் கோவையில் இயங்கும் மத்திய வருவாய் புலணாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தவகல்; கிடைத்து அதிகரிகள் முத்துப்பேட்டை அதிராம்பட்டிணம் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் பகுதியில் சுங்க இலகா அதிகாரகளுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு துறை அதிகாரிகள் ஒரு டீம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் சென்ற 2 டூவீலர்களை மடக்கி பிடித்தனர். அதில் 3 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து 7.6 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கபட்பது. அதன் மதிப்பு 2.34 கோடியாகும். மேலும் பிடிபட்டவர்கள் 1.தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன(23) 2. புதுக்கோட்டை மாவட்டம், மும்பாளைபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த காதர் முகைதீன்(55) 3.அதே ஊரைச் சேர்ந்த இப்ராகிம்(50) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்து முத்துப்பேட்டை சுங்க இலகா அலுவலம் கொண்டு வந்தனர். சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

 பின்னர் மேலும் விசாரணைக்காக முத்துப்பேட்டை சுங்க அலுவலகத்தில் 3 பேரையும் வைக்கப்பட்டனர். கடத்தப்பட்ட தங்கம் எங்கிருந்து வந்தது? இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதா மேலும் கடலோர மாவட்டத்தில் சமீபத்தில் 5 படகுகள் கரை ஒதுங்கிய நிலையில் அந்த நாட்களில் அடுத்தடுத்து தங்கம் கடத்தப்படுவது பறிமுதல் செய்யப்படுவதால் இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நேற்று இரவு 3 பேரிடமும் முழு விசாரணை முடித்துதிருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

நமது நிருபர்: முஹைதீன் பிச்சை 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)