முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சாலை விபத்தில் படுகாயமடைந்த திருப்பூர் குலாம் முஹம்மது விற்கு உதவிகரம் நீட்டுங்கள்

திருப்பூரில் தேவராம் பாளையம் ஏரியாவில் வசிக்கும் குலாம் முஹமது என்ற சகோதரன் தனது நண்பர்களுடன் பொள்ளாச்சி செல்லும் வழியில் மாருதி ஜென் வாகனம் விபத்துக்குள் ஆகி மிக மோசமான நிலையில் கோவை கேஜி மருத்துவ மனையில் உள்ளார் .





அவருடன் சென்ற இரண்டு சகோதரர்கள் வாபாத் ஆகி விட்டனர் ....குலாம் குடும்பத்தில் அவருடையே தந்தை ஆறு மாதத்திற்கு முன் வபாத்தாகி விட்டதால் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளது குலாமிருக்கு திருமண வயதில் இரண்டு சகோதரிகள் உள்ளனர் இப்போது வரைக்கும் அவருக்கு இரண்டு லட்சம் செலவிட பட்டு உள்ளது இன்னும் ஐந்து லட்சம் தேவை படுகிறது. குலாமிருக்கு இரண்டு விரல்கள் துண்டு ஆகி உள்ளது ஒரு பக்கம் தலையில் பயங்கர அடிபட்டு மண்டை ஓடு பிராக்ச்சர் ஆகி உள்ளது இந்த இரண்டு லச்சதையும் இந்திய தவ்ஹித் ஜமாஅத்,தமுமுக ,தேவராம் பாளையம் சுன்னதுள் ஜமாஅத் பள்ளி நிர்வாகம் சேர்ந்து மிக கஷ்ட்ட பட்டு திரட்டி உள்ளோம் அந்த சகோதரன் நிவராணம் அடைய அனைவரும் துவா செய்யுங்கள் ....வாய்ப்பு உள்ளவர்கள் உதவும் மாறு கேட்டு கொள்கிறோம் ....

குலாம் விபத்து ஆன புகை படமும் அவருடைய தலை ஸ்கேன் செய்த புகை படமும் இணைக்க பட்டு உள்ளது ......

தொடர்புக்கு ......

இப்படிக்கு
A.யாசர் அரபாத்
மாவட்ட செயலளார்
இந்தியதவ்ஹித் ஜமாஅத்
திருப்பூர்
8525086016

நிக்காஹ் "EK உமர் முக்தார் "











மர்ஹூம் தியாகி  EK முஹம்மது இஸ்மாயில்,மர்ஹூம் ஆலிம்  EK முஹம்மது தமீம் ஆகியோரின் பேரனும் ,EK மஹபூப் அலிகான் அவர்களின் செல்வ புதல்வனுமாகிய 

           EKM உமர்முக்தார் மணாளருக்கும்,

மர்ஹூம் UK உதுமான்கனி மற்றும் PSN சாகுல் ஹமீத் அவர்களின் பேத்தியுமாகிய 

            சுமையா பாத்திமா  மணாளிக்கும் 

கடந்த 29-12-13     ஞாயிறு அன்று முத்துப்பேட்டை கொய்யா மகாலில் மிக விமர்சையாக நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் M .தமீமுன் அன்சாரி ,வெல்பேர் பார்டியின் தமிழக தலைவர் SN .சிக்கந்தர் ,பத்திரிக்கையாளர் சுதாங்கன் ,மூன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் .ஷாநவாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .மணமக்கள் எல்லாம் வளமும் பெற்று வளமோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக ஆமீன் ......

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகிருக்காது!



இந்திய, ஜனவரி 03: இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.

இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.

இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.

ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை.

நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும், அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள்.

இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும், இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும், இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும், இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும், இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும், இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.

ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.

அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை. அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.

எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை. ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது. அது விழித்தெழும் போது வீரிட்டு எழும்.

எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும்.

இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று. இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.

இந்தியாவை பாதுகாத்தல்: ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.

ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட, குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரியபோது, இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார். இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும்.

இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது. மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான். இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான். ஷேர்கானின் இறப்பிற்கு பின் மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான். வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான்.

தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது. இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.

அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான்.

மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான். அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.

அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும். (இன்ஷாஅல்லாஹ் தொடரும்) - பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர், அரசு கல்லூரி

முத்துப்பேட்டை அலையாத்தி காடு லகூனுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை: ஏக்கத்தில் ஊர் மக்கள்..




முத்துபேட்டை, ஜனவரி 03: முத்துபேட்டை அலையாத்தி காட்டுக்கு (லகூன்) செல்ல வனத்துறை திடீர் தடையினால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
முத்துப்பேட்டை அலையாத்தி காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய காடாகும் இப்பகுதியில் இருக்கும் லகூன் தீவுகள் இந்தியாவில் எங்கும் காண முடியாத பகுதி இதனை தமிழக அரசு சமீபத்தில் சுற்றுலா தளமாக அறிவித்து பல்வேறு வசதிகளை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப்படுத்தி குடுத்தார்கள் அதனால் இந்தியா முழுவதிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கிறார்கள்.
அவர்கள் வசதிக்காக ஆசாத் நகர் ஜம்புவானோடை பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து கோரையாற்று வழியாக பிளாஸ்டிக் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் நேற்று புத்தாண்டு என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் முத்துப்பேட்டையில் குவிந்தனர் இந்த நிலையில் இப்பகுதி பதட்டமான பகுதி என்பதாலும் சென்ற ஆண்டு இதே பகுதியில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்ததால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அலையாத்தி காட்டுக்குள் செல்ல வனத்துறையினர் தடை உத்தரவு போட்டனர் இதனால் குவிந்த சுற்றுலா பயணிகள் காட்டுக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர் , படகுகளும் வனத்துறை உத்தரவால் செல்லவில்லை.
இதுகுறித்து சுற்றுலா பயணி மனோஜ் கூறுகையில் நான் சென்னையிலிருந்து புத்தாண்டுக்காக நானும் எனது நண்பர்களும் இந்த அறிய அலையாத்தி காடை காண வந்தோம் வனத்துறை எந்தவித முன் அறிவிப்பு இல்லாமல் தடை செய்துள்ளனர் இதனால் எங்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்துள்ளது இதுகுறித்து வனத்துறை அதிகாரி அயூப்கான் கூறுகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படிதான் நாங்கள் தடை செய்துள்ளோம் சென்ற ஆண்டு நடந்த பல்வேறு சம்பவங்கள் காரணமாக இந்த திடீர் உத்தரவு என்றார்.

ஆயிரக்கணக்கானவரை கொன்றவன் நான் அல்ல: பிரதமர் மன்மோகன் சிங்..


குஜராத், ஜனவரி 03: குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடிக்கு என்னை விமர்சிக்க தகுதியில்லை எனவும் ஆயிரக்கணக்கானவரை கொன்றவன் நான் அல்ல எனவும் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தான் பலவீனமான பிரதமர் என்ற மோடியின் கருத்துக்கு பதில் அளித்து இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி: PM. ஜாஹீர் உசேன் 

முத்துப்பேட்டை மதுக்கடையில் தகராறு: தம்பிக்கோட்டையை சேர்ந்த வாலிபருக்கு சோடாபாட்டில் குத்து!!

முத்துப்பேட்டை மதுக்கடையில் தகராறு: வாலிபருக்கு சோடாபாட்டில் குத்து

முத்துப்பேட்டை, ஜனவரி 02: முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக் கோட்டை மரவாக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (31). இவர் தனது நண்பர்கள் சிங்காரவடிவேலு, மணி ஆகியோருடன் முத்துப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு மது குடிக்க வந்தனர். அப்போது முத்துப்பேட்டை கல்கோனி தெருவை சேர்ந்த பைசூல் அகமதும் மது கடைக்கு வந்தார். மது குடித்து கொண்டிருந்த போது அவர்களுக்குள் தகராறு உருவானது.
இதில் ஆத்திரம் அடைந்த பைசூர் அகமது சோடா பாட்டிலை உடைத்து ரமேஷ், சிங்கார வடிவேலு, மணி ஆகியோரை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பைசூல் அகமதை தேடி வருகிறார்கள்.

தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி மீது பொய் வழக்கு போட்ட இராமநாதபுர துணை ஆய்வாளர் இந்திரா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -தமுமுக தலைமையகம் அறிவிப்பு !!

தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டதோடு மட்டுமின்றி, கொச்சையாக இழிவுபடுத்திப் பேசிய இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளர் இந்திராவைக் கண்டித்தும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவண்

தமுமுக தலைமையகம்

பாப்புலர் பிரண்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் சன் டிவியிலிருந்து நீக்கப்பட்டார் வீர பாண்டியன் -சன் டிவியின் மதவாத போக்கை கண்டிக்குமா ஊடகங்கள் ?




சென்னை, ஜனவரி 01:  உங்கள் முன்னால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மிக பிரமாண்டமாக ஒரு நரேந்திர மோடி என்கிற ஒரு பலூன் நின்றுகொண்டிருக்கிறது. அதை,ஒற்றுமை என்ற சின்ன ஊசி எடுத்து குத்தி உடைக்க வேண்டும்.இந்த பலூனை நீங்கள் உடைக்க வில்லையென்றால்... நண்பர்களே ஒருவேளை,மோடி வந்து இந்தியாவில் உட்கார்ந்து விட்டால்,ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு அந்த கும்பலை நீங்கள் அரியாசனத்தை விட்டு இறக்கவே முடியாது!இதை நான் உங்களை அச்சப்படுத்த சொல்லவில்லை..நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' -இந்த ரீதியில் பேசிய தோழர் சண் டி.வி வீர பாண்டியன்,





நான் எந்த இயக்கத்தையும் சாராதவன்.ஊடகம் தான் எனது இயக்கம்.எனது நிகழ்ச்சியில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் வருகிறார்கள்;எனக்கு தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு.அது வேறு விஷயம்;ஆனாலும்,நீங்கள் சார்ந்திருக்கிற (முஸ்லிம்)சமூகம் என்ன கருதுகிறது;என்ன செய்ய வேண்டும்?உங்கள் முன் இருக்கும் கடமை என்ன என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



இந்தியாவில்,குறிப்பாக தமிழகத்தில்,முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இருக்கின்ற பலவீனமாக நான் கருதுவது ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாதது தான். 

முஸ்லிம்களிடம் வலிமையான ஊடகங்கள் இல்லை;முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை குறித்த செய்திகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த முஸ்லிம்கள் ஊடகத்துறையில் பங்கெடுப்பது அவசியம்;என்றெல்லாம் எஸ்.டி.பி,ஐ கட்சி சென்னையில் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய பேச்சுக்களுக்காக சங்க பரிவாரம் அவர் மீது நாலாபுறங்களிலுமிருந்து தாக்குதல்களை துவங்கி இருக்கிறது.


கருத்தை கருத்து தளத்தில் எதிர்கொள்ளாமல்,அவரை நோக்கி ஆபாச அர்ச்சனைகளையும் துவங்கி இருக்கின்றன சங் கும்பல்.பொதுவாக முஸ்லிம் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும்,அனைத்து தரப்பினரிடமும் இயல்பாக பழகக்கூடியவர் தோழர்.வீர பாண்டியன்.தமிழ்அமைப்புகள்,இடதுசாரிகள்,சமூகவியலாளர்கள்,பி.ஜே.பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்பினர்,பத்திரிகையாளர்கள் என அனைவரோடும் எந்த வேறுபாடும் பாராமல் நட்பு பாராட்டுபவர்.தான் இன்ன சமூகத்தின் ஆதரவாளன் என்கிற வண்ணப்பூச்சுக்கு உட்படுத்திக்கொள்வதை தவிர்த்து வருபவர்.இவை அவர் சண் டி.வி.யில் அவர் நடத்தும் நிகழ்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது;தமது நடுநிலை தன்மை சந்தேகத்திற்குள்லாகிவிடக்கூடாது என்பதில் அவர் எடுக்கும் கவனம் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.இதை புரிந்தவர்கள் தான் தமிழக ஹிந்துத்துவா அமைப்பினரும்.ஆயினும்,அவர் முஸ்லிம்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தியதையும்,மோடியை பற்றி விமர்சனம் செய்ததையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் மீது பாய்ந்து பிறாண்டுகிறார்கள்.



சண் டி.வி நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள சங் கும்பல் அந்த டி.வி நிர்வாகத்தை சந்தித்து,வீர வீர பாண்டியனை நீக்கவில்லையென்றால்,சன் டி.வி நிகழ்ச்சிகளில் ஹிந்துத்துவாக்கள் யாரும் பங்கெடுக்க மாட்டார்கள் என அந்த நிர்வாகத்தை நிர்பந்தப்படுத்தியுள்ள செய்தி,ஹிந்துத்துவாவினரின் சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கு சான்று மட்டுமல்ல அவர்களின் வெறித்தனத்திற்கும்,குரூர சிந்தனைக்கும் சான்றுகள் தான்.

சண் டி.வி நிர்வாகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று வந்தவர் யார் தெரியுமா? தோழர் வீர பாண்டியன் நடத்தும் நிகழ்ச்சிக்கு, தோழர்.வீர பாண்டியனால்-முஸ்லிம்களைவிட,இடது சாரிகளை விட,காங்கிரஸ் காரர்களை விட சமூகவியலாலர்களை விட,மனித உரிமை ஆர்வலர்களை விட அதிகமாக அழைக்கப்படும் ப.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.டி.ராகவன் தான்.(இது குறித்து நேரடியாகவே தோழர் வீர பாண்டியனிடம் நான் விமர்சனம் வைத்திருக்கிறேன்.)நிகழ்ச்சி முடிந்த பின்பும், இயல்பாக ராகவனிடம் பேசிக்கொண்டிருப்பார் வீர பாண்டியன்.அந்த ராகவன் தான் இன்று இவருக்கு எதிரான கும்பலுக்கு தலைமை தாங்கி வந்திருக்கிறார்.
இந்த விஷயத்தில் முஸ்லிம் அமைப்புகள் உள்பட பல தரப்புகள் மீது வருத்தம் ஏற்படுகிறது.ஒரு ஊடகவியலாளர் பகிரங்கமாக மிரட்டப்பட்டிருக்கிறார்,அவரை பனி நீக்கம் செய்யவேண்டும் என நிர்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது;ஆபாச தொலைபேசி தாக்குதல்கள் நடத்தப் பட்டிருக்கிறது; கருத்து சுதந்திரம்,ஜனநாயகத்தன்மை மீதெல்லாம் தாக்குதல் தொடுக்கப் பட்டிருக்கிறது ஆயினும் ஊடகங்கள் 'நமக்கென்ன' என அசாத்திய அமைதி காக்கின்றன. 


இடது சாரிகளோ,தமிழ் அமைப்புகளோ,இஸ்லாமிய அமைப்புகளோ உரிய வகையில் இதை கண்டிக்க முன் வரவில்லை.

கவுண்டர் ஆச்ஷனாக,ஹிந்துத்துவாவினரின் நெருக்கடிக்கு பணிந்து வீர பாண்டியனின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யும் நிலை வந்தால்,ஹிந்துத்துவாவினர் கலந்து கொள்ளும் நிகழ்சிகள் மட்டுமல்ல;சன் டி.வியின் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கூட நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்று அறிவிக்க வேண்டியவர்கள் மௌனம் காக்கிறார்கள்;அவ்வளவு கூட வேண்டாம்,குறைந்த பட்சம் ஒரு கன்னடன அறிக்கை கூட வெளியிடவில்லையே.முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே கருத்து சுதந்திரம் பேசும் எழுத்தாளர்கள்/கவிஞர்கள் கூட்டமைப்பு எல்லாம் எங்கே போயின ? குறிப்பிடும் படியாக,இந்த விஷயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க வில்லையே ஏன்?இதை நாம் கண்டித்துதானே ஆகவேண்டும்?.


முஸ்லிம்கள் விஷயத்தில் கருத்து சுதந்திரம்,படைப்பு சுதந்திரம்,புடலங்காய் என்றெல்லாம் கொந்தளிக்கும் ஊடகங்கள், சக ஊடகவியலாளரின் கருத்து சுதந்திரம் மீதும்,ஜனநாயக உரிமை மீதும் பட்டவர்த்தனமாக தாக்குதல் நடந்ததை மெளனமாக அங்கீகரிப்பது ஊடகங்களின் கமர்ஷியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி என்பதா?நாங்களும் காவிக்கு மாறிட்டோம் என்று சொல்வதாக எடுத்துக்கொள்வதா? 



எதுவாக இருந்தாலும் 'நெருக்கடி கொடுக்க எங்களுக்கும் தெரியும்' என்பதை இடது சாரிகள்,தமிழ் அமைப்புகள், ஏனைய பிற அமைப்புகளைக் காட்டிலும் முஸ்லிம் அமைப்புகள் காட்டியிருக்க வேண்டிய தருணம் அது !

இஸ்லாத்தை ஏற்க துடிக்கும் யுவன்சங்கர் ராஜா -எத்தி வைக்குமா இஸ்லாமிய அமைப்புக்கள் ?

சென்னை, ஜனவரி 01: இசையே கோவில்… இன்ஸ்ட்ரூமென்டுகளே  தெய்வம்…! எல்லா இசையமைப் பாளர்களுக்கும் இதுதான் கடவுளின் ஃபார்முலா என்றாலும், அதையும் தாண்டி அவர்களை இயக்குவது ஏதோ ஒன்று. அதைதான் அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அல்லது வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொழுது கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை சரணாகதியடைய வைக்கிற அந்த சக்தியை விட அதற்கான நெருக்கடிதான் மிக மிக முக்கியமானது.   இந்த நெருக்கடிக்கு ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் ‘மன அமைதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.   யுவனும் அப்படியே.
மன அமைதியை தேடிய யுவனுக்கு அந்த இஸ்லாமே சிறந்த அமைதியை கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில திரையுலக நண்பர்கள். பரபரப்பான இந்த விஷயத்தை முதன்முதலில் நாட்டுக்கு தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது  நமது   நியூதமிழ்சினிமா.காம்.   அதற்கு முன் யுவன் பற்றி….
மிக இளம் வயதிலேயே இசைஞானியின் பெயரை காப்பாற்றப் போகும் வாரிசு இவர்தான் என்று அடையாளம் காணப்பட்டவர் யுவன். வெஸ்டர்ன் இசை என்றாலும் சரி, அப்பாவை போல கிராமிய இசை என்றாலும் சரி. யுவனுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியம் என்கிற அளவுக்கு மனதை மயக்கிவிடுகிற வல்லமை வந்தது. இசையில் கொடிகட்டி பறந்தார் யுவன். நிற்க நேரமில்லாமல் உறங்க நேரமில்லாமல் எந்நேரமும் இசை ஒலித்துக் கொண்டிருந்தது அவரது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்.
இந்த நேரத்தில்தான் எல்லா வாலிபர்களுக்கும் வருவதை போல அவருக்கும் அது வந்தது… காதல்!  மகனின் சந்தோஷமே நமது சந்தோஷம் என்று கருதிய அப்பா இசைஞானி எவ்வித முணுமுணுப்பும் காட்டாமல் சம்மதம் தெரிவிக்க, சந்தோஷமாக இல்லறத்தில் அடியெடுத்து வைத்தார் அவர்.
இந்த பந்தம் நெடுநாட்கள் நிலைக்காமல் போனது பூர்வ ஜென்ம பூஜ்யமா, அல்லது நிகழ்கால ஜோசியமா தெரியாது. இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதற்கப்புறம் தனிமை யுவன்சங்கர்ராஜாவை கவலைப் படுகுழியில் தள்ளவில்லை. மிக மிக உற்சாகமாகதான் இருந்தார். மீண்டும் ஒரு காதல் முளைக்கக் கூடாது என்கிற சட்டம் ஏதாவது இருக்கிறதா? முளைத்தது.
இந்த முறை ஊரை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் யுவன். இந்த நேரத்தில் மிக கசப்பான அதே நேரத்தில் துடிப்பான உண்மையை சொல்ல வேண்டும். ஜோதிடம் பொய் என்பவர்கள் கூட சிலரது குடும்ப வாழ்க்கையும் அவர்கள் படுகிற பாட்டையும் பார்த்தால், அட ஈஸ்வரா என்று கவலை கொள்வார்கள்.
யுவனுக்கும் திருமண கட்டத்தில் எந்த பூதம் வந்து அமர்ந்திருக்கிறதோ, தெரியவில்லை. இந்த திருமணத்திலும் சிக்கலாம். அவரது இரண்டாவது மனைவியையும் அவர் பிரிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவருக்கு அருகில் இல்லாவிட்டாலும் அவரை நோட்டமிடுகிற சினிமாக்காரர்கள்.
இதில்தான் அதிகம் உடைந்தாராம் யுவன். இருந்தாலும் மனதை தேற்றிக் கொண்டு இசையோடு பயணித்துக் கொண்டிருந்தார். அன்பான அம்மா இருந்தார்கள் அவருக்கு. எந்த நேரத்தில் அவர் வந்தாலும் பாசத்தோடு அரவணைத்துக் கொள்கிற அளவுக்கு ராஜாவின் இல்லம் இருந்தது.
அதற்கும் கொடுத்து வைக்கவில்லை யுவனுக்கு. அம்மாவின் மரணம் அவர் எதிர்பாரதது. முற்றிலும் உடைந்து போன யுவன் பெரும்பாலும் வீட்டுக்கு வருதை தவிர்த்து ரெக்கார்டிங் தியேட்டரிலேயே கிடந்தார். உடன் பிறந்த சொந்தங்களால் கூட அவருக்கு அமைதியில்லை என்று கூறப்படுகிறது.
நடுவில் சில நாட்கள் அவர் உறங்கவே இல்லையாம். இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்குதான் அந்த வேதனை தெரியும். அதை நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக அனுபவித்தாராம் அவர்.   மனமே அமைதி கொள்… என்று விரும்பி விரும்பி கேட்டாலும், சட்டென கேட்டுவிடுமா அது?
இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர், இஸ்லாமியர்களின் வேத புத்தகமான குர் ஆன் புத்தகத்தை கொடுத்து  ‘இதை படி. மனம் அமைதியடையும்’ என்றாராம். உறக்கம் வராத ஒரு ஐந்தாவது நாளில் அந்த புத்தகத்தை விரித்தார் யுவன். மனம் விரட்டிக் கொண்டேயிருந்தது அவரை.  மெல்ல அதை கயிற்றுக்குள் கட்டி இறுக்கினார் யுவன்.
ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே மனம் உடைந்து அந்த புத்தகத்தின் மீது முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாராம்…. அதற்கப்புறம் அவர் எப்போது உறங்கினார் என்பது தெரியவில்லை. மீண்டும் அவர் எழுந்தபோது மனம் முற்றிலும் சாந்தமாகியிருந்ததாம். அவர் தேடிய நிம்மதி அன்றுதான் கிடைத்தது அவருக்கு.
இதற்கப்புறம் அவர் தீவிரமாக அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாராம். இப்போது தினமும் ஐந்து வேளை தொழுகிற அளவுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வமாக தன்னை அந்த மதத்தில் இணைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் யுவன்.
அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். எதுவாக இருப்பினும் நல்லதே. யுவன் எந்த மதத்திலிருந்தாலும், அவரது இசை எல்லா மதத்தினர் மத்தியிலும் இருக்கும். அது போதும்!

மௌத்து அறிவிப்பு "ஹபீப் கனி "


முத்துப்பேட்டை, ஜனவரி 01: கிட்டங்கித் தெரு மர்ஹூம் முஹம்மது ஷேக் அலி அவர்களின் மகளும்,  மர்ஹூம்  முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கொடை கமால் அவர்களின் மாமியாரும்,  முஹம்மது இக்பால், ஜப்பார் இவர்களின் தாயாருமான ஹபீப்கனி அவர்கள்   இன்று அதிகாலை 2 மணியளவில்   மௌத்தாகிவிட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின்   ஜனாஸா   இன்று ( 1.1.14  புதன்கிழமை)  காலை 10 மணிக்கு முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.  

நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துபேட்டையில் பொது மக்களை கவர்ந்த குரங்கு !மீன் வியாபாரிக்கு உதவி செய்யும் மனிதநேயம் !!!

முத்துப்பேட்டை, ஜனவரி 01: முத்துப்பேட்டை  பேட்டை   கிராமத்தில்   உள்ள மீன் அங்காடியில்  ஒரு   குரங்கு   7 மணிக்கு மீன் அங்காடிக்கு வந்து அங்கு மீன் வியாபாரம் செய்யும்  நாடாவி  என்பவருக்கு  உதவி செய்து வருகிறது.சில நேரங்களில்  மீன்   வியாபாரமும்   செய்கிறது. மீனை பைகளில் எடுத்து போடுவது,  பணத்தை வாங்கி போடுவது,   மீனை சுத்தம் செய்வது   போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவதாக அதனை பணிக்கு வைத்து கொண்டு இருக்கும் நாடவி
பெருமிதத்தோடு சொல்கிறார்.
1525761_243295539167737_1517306265_n
அது யாருக்கும் தொந்தரவு கொடுப்பது இல்லை.   வியாபாரம் முடிந்ததும் நான் வீட்டுக்கு புறப்பட்டு விடுவேன்.    அது காட்டுக்கு புறப்பட்டு விடும்.   மறு நாள் தான் எங்களின் சந்திப்பு நிகழும்  என்று   கூறுகிறார்.   எங்களின் உறவு என்பது  தொழில் சம்பந்த பட்டது மட்டுமே என்பதுடன் மனிதனை விட எனக்கு குரங்கு மேலானது  என்று அதன் மீது எனக்கு அதீத பிரியம்  என சொல்லி சிரிக்கிறார் நாடாவி.

துபாயில் நிறைவேறிய புத்தாண்டு கின்னஸ் சாதனை வீடியோ, மற்றும் புகைப்படங்கள் இணைப்பு.











துபாய், ஜனவரி 01: அமீரகம் துபாயில் ஆங்கில வருடம் 2014 ன் முதல் நாளான நேற்று இரவு உலக கின்னஸ் சாதனை படைக்கவேண்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் பால்ம்  ஜுமேரா ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.

இதனை மிஞ்சும் அளவுக்கு,  ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000  வெடிகளை வெடித்தனர். இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வானவேடிக்கையை நிகழ்த்தப்பட்டது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவிலும் இந்த வானவேடிக்கை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான அமீரக வாழ் பொதுமக்கள் மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா வாசிகளும் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். 
 
நமது நிருபர்:

AKL. அப்துல் ரஹ்மான்.BBA, 

முத்துப்பேட்டை அல் மஹா வணிக வளாகம் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு:


முத்துப்பேட்டை, டிசம்பர் 31: முத்துப்பேட்டை ஆசாத்நகர் அல்மஹா வணிக வளாகம் திறப்பு விழா நாளை சரியாக 01.01.2014 காலை 9 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி, அதனைத்தொடர்ந்து 4 மணியளவில் மருத்துவம் குறித்த சிற உரை நடைபெற உள்ளது. எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்...

இந்த நிகழ்ச்சியை நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்..

Source From:  www.muthupettaiexpress.com 








திருச்சியில் நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டின் புகைப்பட தொகுப்பு !!

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 28.12.13 அன்று  மாலை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடந்தது.பயங்கரவாதத்தை எதிர்த்தும்,சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இளம்பிறை எழுச்சி பேரணியும் அன்று மாலை 3.30 மணியளவில்  நடைபெற்றது.  அதன் புகைப்பட தொகுப்பு..
1003572_636709293052063_2044753942_n993496_729938767018843_2146413981_n1554451_636709016385424_1276216458_n1512705_636704443052548_216763147_n
1525415_636735969716062_717405884_n1506924_636726329717026_330938024_n1508535_636704533052539_692569244_n1512671_636709446385381_1694348485_n1511268_636709123052080_1485005555_n1493212_636708989718760_1573793756_n1480600_729870303692356_566933529_n1469940_729870857025634_2009539754_n1464626_729869103692476_2009685800_n1393485_636709036385422_1469100151_n1005830_636704429719216_707353385_n
(Visited 71 times, 70 visits today)

சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்..!!!


சென்னை, டிசம்பர் 30: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்!
பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த மருத்துவமனையில் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் அதிகமானவர்கள் 
மருத்துவ மனையில் அனுமதித்து தங்கி சிகிச்சை பெறுகின்றனர் இவர்களில் பெரும்பாலனவர்கள் கட்டாய கடமையான 5 வேலை தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது .

ஆனால் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஒரு பள்ளிவாசல் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. இந்த பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைகான அழைப்பு விடுக்கபடுவதில்லை.(காரணம் இருதய அறுவை சிகிச்சை அரங்கிற்கு அருகில் உள்ளதால்.)
இது பற்றி அங்கு பணி புரியும் புற்று நோய் பிரிவு மருத்துவர் மதார்ஷா நம்மிடம் கூறும் பொழுது....
இந்த பள்ளிவாசலை இங்கு பணிபுரியும் ஒருசில இஸ்லாமிய மருத்துவர்களால் அரசுக்கு கோரிக்கை வைத்து அனுமதி வாங்கி நிர்வகித்து வருகிறோம்.
இதற்குண்டான செலவீனங்களை பணிபுரியும் மருத்துவர்களே வழங்குன்றனர் இதிலிருந்து கிடைக்கும் தொகையிலிருந்து ஒரு இமாம் மற்றும் மோதினார் உள்ளிட்டவர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம்.
இந்த பள்ளியிலேயே பெண்கள் தொழுகைக்கு தனியிடம் உள்ளது இந்த பள்ளியில் 5 வேலை தொழுகையும் வாரந்திர ஜும்மாவும் நடைபெறுகிறது என்றார் அவர்.

நன்றி: அதிரை புதியவன்

பெண்கள் ஓடிப்போவது ஏன்? எதற்காக?...



உலகம், டிசம்பர் 29: அப்பப்பா……விடிந்து விட்டால் போதும்! ‘ எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய் விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்’ அட அல்லாஹ்…. இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல ‘சரியான காரணங்கள்’, பல ‘காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை’கள்!
சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்….
முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!! இதற்கு காரணங்கள்தான் என்ன?
சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?
என்ன காரணமாயிருக்கும்..?? இவ்வுலக இச்சையா? இனக்கவர்ச்சியின் தாகமா? இல்லை இல்லறத்தில் இனிமையில்லையா? இல்லை இல்லத்தில் மனக்கசப்பா? இல்லை கணவன் மனைவிக்குள் எவ்விதத்திலும் ஒத்துபோகவில்லையா? அல்லது அன்பின் பறிமாற்றங்கள் அணுவளவுமில்லையா? இதில் எது இல்லை? எதில் குறை? இல்லை எதில் பிழை???? கன்னியாய் ஒருபெண் படிதாண்டி சென்றாலே காலங்காலத்திற்கு ஒரு சொல்லாகிவிடும். அதேசமயம் சென்றவள் ஒன்று இனக்கவர்ச்சிக்காக சென்றிருக்கவேண்டும். அல்லது மனக்காதலுக்காக சென்றிருக்கவேண்டும். எதுவென்றபோதும் படிதாண்டுவது பாதகச்செயல் அவளுக்கு மட்டுமல்ல அவள் குடும்பதிற்கும் அவள் வாரிசுகளுக்கும் சேர்த்துதான். ஆனால்
அதனினும் அநியாயச்செயல் கல்யாணம் முடிந்தும், குழந்தை பிறந்தும் ஒரு பெண் படிதாண்டுவது. சிந்திக்கத்தவறி, சிந்தனைகள் குழம்பி, சீரழிவிற்கு போகும் பெண்மக்களாய் மாறுவது ஏன்? அல்லது அவர்களை மாற்றுவது எது? என வினாக்களோடு புறப்பட்ட மனதுக்குள் விடைகளென்னும் வெளிச்சம் சிறு மின்னல் கீற்றாக தென்பட்டது. அவைகளிங்கே !
தவறுகள் ஆண்களிடமிருந்தே ஆரம்பமாகிறது :
தமது மனைவியரிடத்தில் அன்பாக நடங்கள்; அவளோடு உண்ணுங்கள்; பருகுங்கள்; அவளின் தேவையறிந்து நடந்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கட்டளையிடுகிறது இஸ்லாம். ஆனால் அதை சரிவர செய்கிறார்களா கணவர்மார்கள்???
மனைவியர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை மட்டும் கொடுத்துவிட்டு, மன நிறைவை கொடுக்காது தவறிவிடுகின்றனர். பொன்னும் பொருளும் மட்டும் ஒரு பெண்ணிற்கு போதுமென்றால் அது தன் தாய்வீட்டிலோ அல்லது தனது சம்பாத்தியத்திலோ பெற்றுக்கொள்ள முடியுமே? ஆனால் அதையும் தாண்டி பாசமென்ற ஒன்றும், காதலென்ற அதீத அன்பும் அனைத்துப் பெண்களுக்கும் தேவைப்படுமென்பதை எத்தனை கணவர்மார்கள் அறிந்து வைத்துள்ளார்கள்??? கணவன் மனைவியென்றால் என்ன? புரிந்துணர்ந்து, ஈருடல் ஓருயிராய் வாழ்வதுதானே?
சரி அதுக்கும் ஓடி போவதற்கும் சம்பந்தம் என்ன என கேட்கலாம்.
மனைவியர்களைத் திருப்திப்படுத்த முடியாத ஆண்மைக் குறைவுள்ள கணவர்கள் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டினால் தனக்கு கேவலமென்று மறைப்பதோடு மனைவின் தேவைகளை நிறைவேற்றத் தவறி, வீட்டிற்குள்ளே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் குறைகளையும் குற்றங்களையும் மனைவி மீதே சுமத்தி அன்றாட வாழ்வையே அவதிக்குள்ளாக்குவது தனது பலவீனத்தை மறைக்க! இவர்களை போன்றவர்களை அல்லாஹ் எவ்வாறு கண்டிக்கிறான் எனப் பாருங்கள்…

ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள் – 2:231
தம் மீது எக்குற்றமும் இல்லை என அனைத்திற்கும் மனைவி நியாயம் தேட முற்பட்டாலும் ‘கல்லானாலும் கணவன்’ என முத்திரையையும் குத்தி விடுகிறது இச்சமூகம். இதை விடக் கொடுமையானது இச்சமுதாயம் இந்த விஷயத்தில் ஆண்களின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்தி பெண்களின் மேல் பழி போடுவதுதான்! குழந்தை பெறவோ, உடல் சுகம் கொடுக்க முடியாதவளோ உடனே கணவனால் விவாகரத்து கொடுக்க அனுமதிக்கும் சமூகம் பெண்களுக்கு மட்டும் இதை மறுப்பதோடல்லாமல் மார்க்கம் கூறியபடி அக்கணவனுடன் வாழமறுத்து வேறொரு திருமண செய்ய எத்தனித்தாள் எனில் அவள் மீது அவதூறு கூறுகிறது….அஸ்தஃபிருல்லாஹ்….
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்- 24:4
அவதூறு செய்வோருக்கு இறைவன் கொடுத்த தண்டனையைப் பாருங்கள்! தேவையற்ற அவதூறுக்கு பயந்து தானே இஷ்டம் இல்லாத வாழ்க்கை வாழ நேரிடுகிறது? இச்சமூகம்தானே அவள் தவறான பாதைக்கு செல்வதை தீர்மானிக்கிறது?
மேலும், நண்பர் என்று அதீத நம்பிக்கை வைத்து அதிகமாக வீட்டுக்குள் அனுமதிப்பது! கணவர் இல்லாத நேரத்திலும் தனியே வர அனுமதிப்பது, வெளியில் போக அனுமதிப்பது, இதனால் கணவரை விட அதிகம் நேரம், நெருக்கம் நண்பருடன் அதிகமாகிறது… அத்துடன் நண்பர்களின் குணாதிசயங்களை அதிகமாக மனைவியிடம் கூறுவதால் காதல், பாசம் உள்ளுணர்வில் ஏற்பட ஆண்களே வழி வகுத்துக் கொடுக்கின்றனர். இதனாலும் தவறுகள் அதிகரிக்கிறது.
அடுத்து தனக்கான செல்வமொன்று வீட்டிலிருப்பதையே மறந்துவிட்டு, செல்லென்னும் அழைபேசி வழியே ஆண்டுக் கணக்கில் உறவாடிவிட்டு பணம் பணம் என்று செல்வத்தின் பின்னேயே ஓடி ஓய்கின்றனர். இங்கே இவள் சொல்லியழக்கூட ஆளில்லாமல், சாய்ந்து அழக்கூட தோளில்லாமல் வாட்டம் கண்டு, வாழ்வே ஆட்டம் கண்டதுபோல் உணருகிறாள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பல கணவர்கள் செய்யும் செயல்களை!
குறைகளை களைந்தெறிவோம்:
சிந்திக்க வேண்டும்! குறைகள் எங்கே என்று கண்டுபிடித்து களையவேண்டும். ஓடி போன பின்பு எப்படி களைவது குறைகளை என்கிறீர்களா? முன்னோடிகளை வைத்து பின்னோடிகள் தன் பாதைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். நேற்று பிறருக்கு நடந்தவைகள் இன்று அல்லது நாளை நமக்கு நடவாது பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
எப்படி????
இன்றய காலகட்டம், ஆதாள பாதாளத்தின் மேல் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றின் மேல் நடப்பது போலாகும். ஆகவே உங்களில் ஒவ்வொரு செயல்களும் உங்களிருவருக்கானதாக இருக்கவேண்டும். உங்கள் மனைவியர்கள் மீது முதலில் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வரவேண்டும். அடுத்து அவள் மீது அதீத பாசம், அன்பு கொள்ளவேண்டும். உங்களிடம் மட்டுமே தன் தேவைகளை நிறைவேற்ற நினைக்கும் அவளுக்கு தேவையானவைகளை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அது வாங்கிக்கொடுக்கும் பொருள்களில் மட்டுமல்ல! உங்களுக்கு [மார்க்கமும் அனுமதிக்காத] பிடிக்காத காரியத்தில் ஈடுபட்டால் கண்டியுங்கள் முடிந்தவரை அன்பாக! வெளியிலிருந்து வந்தால் மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். சிடுசிடுப்புடன் இருக்காதீர்கள். உப்பு சப்பு இல்லாத விசயங்களுக்கெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள். அன்பொழுக பேசாவிட்டாலும் அணுசரனையாக பேசுங்கள்.
அவளின் சில விசயங்களுக்காகவும் விட்டுக்கொடுங்கள். வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் களைப்படைந்திருந்தால் பரிவாக நடந்துக்கொள்ளுங்கள். அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள். அவளுக்கு பிடித்தபடி உடையணிந்துக் கொள்ளுங்கள். வீட்டுப்பொறுப்பு, குடும்ப நிர்வாக விசயத்தில் அனைத்திலும் அவளை கலந்துக் கொள்ளுங்கள். அவளுக்குத் தேவையானவற்றிற்கு கஞ்சத்தனம் பாராது செலவழியுங்கள். படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை உங்கள் உற்ற நண்பனிடம்கூட வெளிப்படுத்தாதீர்கள். அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்து இல்லறத்தில் உறவாடுங்கள். சிலருக்கு கண்ணியமான பேச்சுகள் பிடிக்கும், சிலருக்கு நகைச்சுவை பேச்சுப் பிடிக்கும், சிலருக்கு கொஞ்சம் கொஞ்சலாக பேசுவது பிடிக்கும். எது பிடிக்குமென்று உணர்ந்துக் கொண்டு அதுபோல் நடந்துக் கொள்ளுங்கள்.
அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்- 4:19
இவையனைத்தும் எங்கு தடைபடுகிறோ அல்லது தடைபடுவதுபோல் எண்ணப்படுகிறதோ அங்கே தவறுகள் உள்நுழைந்து மனக்கட்டுப்பாட்டை தட்டுக்கெட வைக்கிறது. அன்பையும் ஆறுதலையும் இனக்கவர்ச்சியையும் ஈர்ப்பையும் உணர்ச்சிகளையும் ஊக்கம் தரும் வார்த்தைகளையும் எதிர்ப்பார்க்கும் மனங்கள், அது கிடைக்காது ஏங்கித் தவிக்கும்போது அவையத்தனையும் ஒட்டுமொத்தமாய் கிடைக்கப் பெறும்போது, அதாவது கிடைக்கப் பெறுவதைபோல் உணர்த்தப்படுவதால் ஓடிப்போக நினைக்கிறது… பின்வரக்கூடிய விளைவுகள் புரியாமல் அதோடு தன் வாழ்க்கை அர்த்தமற்றுப் போவதை உணராமல்!!
நீங்கள் படிக்கும் காலத்தில் பெண்களோடு பழகியதுபோல்தான் தன் மனைவியும் பிற ஆண்களோடு பழகியிருப்பாள் என்ற வீணான தவறான சந்தேகத்தால் உங்கள் வாழ்க்கையின் அழகியலை கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஒளிவு மறைவின்றி உங்களிடம் ஒப்படைத்த விசயங்களை வைத்து அவர்களை ‘இடுக்கு கிடைக்கும்போதெல்லாம் கொடுக்கு’ போடாதீர்கள். அப்புறம் உங்களிடம் அனைத்தையுமே ஒளிக்கக் கற்றுக்கொள்வார்கள்.. உங்களைவிட்டு ஒதுங்கியே வாழ நினைப்பார்கள்.. அப்படியே உங்களுடன் ஒட்டியிருந்தாலும் மனதளவில் ஒட்டாமலே இருப்பார்கள்..
மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்- நபிமொழி
அதுமட்டுமல்லாது நடத்தைகளில் பழக்க வழக்கங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களறியாது அவர்களை கண்காணியுங்கள். இக்காலகட்டத்தில் ஓடிப் போவோருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது செல் எனும் கைப்பேசியே! இனக்கவச்சியையும், இல்லாத ஒழுக்கங்களையும் காட்டிக்கொடுக்கிறது. சினிமாவும் சீரியல்களும். அதை அப்படியே செயல்படுத்த மன்னிக்கவும் கூட்டிக் கொடுக்கிறது கைபேசியும் கணினியும். அவற்றுடன் அவர்கள் அதிக நேரம் உரையாடல்கள் தொடர்ந்தால் அந்த நம்பரை செக் செய்துக் கொள்ளுங்கள்.. வீணாக சந்தேகப்பட்டு அப்புறம் வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

[ இவையனைத்தும் கணவர்கள் மனைவிமார்களுக்கு மட்டும் செய்யக்கூடியவைகள் அல்ல மனைவிகளும் கணவர்மார்களுக்கு செய்யக்கூடியவைகள் [சிலதைத்தவிர]. ஏனெனில் தவறுவது பெண் மட்டுமல்ல ஆணும்தான்! ஆனால் ஆணின் இச்செயல்கள் மட்டும் அழுத்தம் கொடுக்கப்படாமலே அமுக்கப்பட்டுவிடும். பெண்ணின் இவ்விழிச் செயல் ஆண்டாண்டு காலம் அசிங்கமாக பேசப்படும்..]
இவையெல்லாம் மீறி ஒன்றுமில்லாத காரணங்களுக்காக குடும்பத்தைவிட்டு குழந்தைகளை தவிக்கவிட்டு, யார் எக்கேடு கெட்டாலென்ன, மானம் காற்றில் பறந்து கந்தலானாலென்ன, தன் சுகம் மட்டுமே முக்கியம் என்று தறிகெட்டு தடம்மாறி போகிறவர்களை, உற்றார்களோ உறவினர்களோ அல்லது அந்த ஊர் ஜமாத்தோ ஊர்காரர்களோ ஏற்றுக்கொள்ளக் கூடாது. தண்டனை கடுமையானால் தவறுகள் குறையக்கூடும். என்ன செய்துவிடுவார்கள் நாளு நாட்கள் பேசுவார்கள், அப்புறம் 6 மாதமோ 1 வருடமோ ஒரு பிள்ளையை பெற்றுக்கொண்டு வந்தால் என்ன செய்யப் போகிறார்கள் என்ற நினைப்புதான் பலரை இத்தவறுகளுக்கு தூண்டுகோளாய் அமைகிறது. அதேபோன்று மனைவியிருந்தும், கணவர்கூடவேயிருந்து தவறு செய்பவர்களுக்கும் தக்க படிப்பினை தரவேண்டும். [தெரியாமல் அறியாமல் செய்துவிட்டேன், இனி அத்தவறுகளின் பக்கம் போகமாட்டேன் என்று இறைவன்மீது ஆணையிட்டு தவறை உணர்ந்தவரை தவிர]
9:106. அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
அதைவிடுத்து இறைவனுக்காக ஏற்றுக்கொள்றேன் என்று பெயரளவில் சொல்லிவிட்டு உள்ளுக்குள் ஒரு ஒப்பாத வாழ்க்கை வாழ்வோர் நிறைய! “நீ உனக்காக வாழ்! நான் எனக்காக வாழ்க்கிறேன்! ஆனால் நாம் இருவரும் இணைந்திருந்தபடியே!” என்று வாழ்க்கை நடத்துவோருமுண்டு. நஊதுபில்லாஹி மின்ஹா. இறைவன் காப்பற்றவேண்டும். அவனே அனைத்தையும் அறிந்தவன்..

உங்கள் துணையோடு உங்களுக்கு சந்தேகமா? அல்லது உடன்படாமைகள் தொடர்கிறதா? தீர்க்கப் பாருங்கள்; அல்லது தீர்த்து விடுங்கள் [அச்சொ உயிரையல்ல] அவ[ரி]ளின் உறவை. கூடவே வைத்துக்கொண்டு குத்திக்குத்திக் காட்டுவதில் வாழ்க்கைதான் வலுவிழந்து போகும். குடும்பம்தான் நிம்மதியிழந்து தவிக்கும். ஒன்று சுமூகமான முடிவெடுங்கள்! அல்லது மார்க்கம் சொல்லித் தந்தவாறு பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். வல்ல இறைவனின் உதவியோடு இருவருமே நிம்மதி காணுங்கள்; இல்லறத்தை நல்லறமாக்குங்கள்; இல்லத்தை இனிமையாக்குங்கள்; சமுதாயத்தையும் நல்வழிப்படுத்துங்கள்!
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் – இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் – அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் 2:284

FLASHNEWS:திருச்சிமுஸ்லீம் லீக் மாநாட்டிற்கு முத்துபேட்டையில் இருந்து சென்ற வாகனம் விபத்து:

டிசம்பர் 28: முத்துப்பேட்டையிலிருந்து இளம்பிறை மாநாட்டுக்கு 8 வாகனம் சென்றதில்  நூரா என்ற வாகனம் ஒரத்தநாட்டுக்கு அருகில் புலவன்காடு என்ற ஊருக்கு அருகே சென்ற போது  வாகனத்தின் முன் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டு விட்டது.
இதில் வாகனத்தை ஓட்டிய  சலீம் என்பவருக்கு தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. மற்றும் அதில் பயணம் செய்த  யாசர், சஃபான் இவர்களுக்கு காலில் தையல் போடும் அளவுக்கு கிழித்துவிட்டது.
நூர்தீன் மற்றும் நூர்தீன் மகன், ஹாஸ்பாவ மகன் தமீம் இவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. யாசர், சஃபானுக்கு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் முதல் உதவிசெய்யபட்டுள்ளது.  டிரைவர் சலீம்மை தஞ்சை  அரசு மருத்துவ மனைக்கு   அனுப்பி வைக்க ஏற்பாடு நடக்கிறது.

மௌத் அறிவிப்பு: "ஹாஜிமா பஜரியா அம்மாள்"


முத்துப்பேட்டை, டிசம்பர் 28: முத்துப்பேட்டை பங்களா வாசல் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் டிரைவர் S. நூர்முஹமது அவர்களின் மனைவியும், N. நத்தர்சா அவர்களின் தாயாரும், K. ரஹ்மத்துல்லாஹ், S. ஹபீபுர்ரஹ்மான் (நாச்சிகுளம்), முகைதீன் அடுமை இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா "பஜரியா அம்மாள்" அவர்கள் நேற்று 27-12-2013 காலை 9.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று 28.12.2013 சனிக்கிழமை முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 
அறிவிப்பவர்.
N. நத்தர்ஷா, K. ரஹ்மத்துல்லாஹ் சகோதர்கள் 

நமது நிருபர்:

KM. காதர் கனி (பாடகர்)

டென்டருக்கான செட்யூல் காப்பி கேட்டு அதிமுக ஒப்பந்தக்காரர் ரகளை. முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் பரபரப்பு.


முத்துப்பேட்டை, டிசம்பர் 28: முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் நேற்று மங்களுர் கிராமத்தில் சாலைப்பணி 9.56 லட்சம் பொது நிதியலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் டென்டர் செட்யூல் வாங்கப்பட்டது. அப்பொழுது தம்பிக்கோட்டை கூடடுறவு வங்கி தலைவரும் அதிமுக பிரமுகரும் ஒப்பந்தக்காரருமான நாராயணசாமி நேற்று முன்தினம் அந்தப் பணிக்காக ரூ.3120-யும் அர்ச்சுணன் என்ற பெயரில் அந்தப் பணிக்கு 3120-ம் செட்யூல் தொகை கட்டியிருந்தார். நேற்று செட்யூல் காப்பி வாங்கும் நாள் என்பதால் அதிமுக ஒப்பந்தக்காரர் நாராயணசாமி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து மேலாளர் பாலசுப்ரமணியத்திடம் நான் பணம் கட்டியதற்கான மேற்கண்ட பணியின் செட்யூல் காப்பி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு மேலாளர் பாலசுப்ரமணியன் ஆணையர் யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கார். அதனால் ஆணையரிடம் கேட்டுத்தான் தரமுடியும் என்று கூறினார்.

 இதனால் ஆத்திரமடைந்த நாராயணசாமி தரமுடியுமா முடியாதா? என்றும் தரமாட்டேன் என்று எழுதிக் கொடுங்கள் என்றும் ரகளை செய்து தர்னாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு ஒன்றியக்குழ தலைவர் நடராஜன் ஒன்றியக்கவுன்சிலர் ஜெகன் ஆகியோர் நாராயணசாமியை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து ஒப்பந்தக்காரர் நாராயணசாமி கூறுகையில் முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகம் மூலம் நடைபெறும் பணிகளை செய்ய முறைப்படி ஒப்பந்தக்காரருக்கு வழங்காமல் ஆணையர் தன்னிச்சையாக முடிவு செய்து அவருக்கு வேண்டப்பட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்குகிறார். புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த ஆணையரின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)