முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் பொது மக்கள் ஓர் பார்வை...!!!



முத்துப்பேட்டை,செப்டம்பர் 01 : முத்துப்பேட்டையில் கடந்த 10 நாட்களாக குடி தண்ணீர் அதிகமாக தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கடந்த நோன்பு நாட்களில் குடிதண்ணீர் சாக்கடை நீர் கலந்து வந்ததால் பொது மக்கள் அனைவரும் அதிர்ச்சி குள்ளானார்கள். மேலும் இதனைத்தொடர்ந்து சில நாட்களாக வீட்டுக்கு குழாய் மூலம் வரும் குடிதண்ணீரையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினினும் வேறு ஊர்களிலிருந்து முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் குடிதண்ணீரை லாரி மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர். இந்த தண்ணீர் விநியோகத்தின் போது முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முறையாக விநியோகம் செய்ய வில்லை என்று பொது மக்கள் ஆத்திரத்துடன் அங்கும் இங்குமாக தண்ணீரை பெற அலைந்து திருந்து போராடி கொண்டிருக்கிறார்கள். மேலும் வீடுகளுக்கு குழாய் மூலம் வரும் குடிதண்ணீரை சுத்தம் செய்து எப்போது பயன் பாட்டிற்கு விடப்போகிறார்கள் என்று பொது மக்களின் கேள்விக் குறியாகவே உள்ளது. மேலும் முத்துப்பேட்டை நகருக்கு எப்போது முழுமையாக குடிதண்ணீர் கிடைக்கும் என்று ஏக்கத்துடுன் எதிர்பாத்துக்கொண்டிருக்கும் பொது மக்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

AKL. அப்துல் ரஹ்மான்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)