முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் TNTJ நடத்திய இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக் கூட்டம்...











முத்துப்பேட்டை, செப்டம்பர் 02 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் துவங்கி இரவு 10 மணிவரை நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு TNTJ கிளை செயலாளர் ஜனாப். A.M. புஹாரி அவர்கள் தலைமை வகித்தார்.

அர்ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா, ரஹ்மத் நகர். சகோதரி. ஜெசீரா. ஆலிமா அவர்கள் தீமைகளை தடுப்பதில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதற்க்கு பின்னர் TNTJ மாவட்ட பேச்சாளர் ஜனாப். M. அல்தாப் ஹுசைன் அவர்கள் ரமளானில் பெற்ற படிப்பினை என்ன? என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

மேலும் இதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட TNTJ மாநில பொதுக் செயலாளர் ஜனாப். கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தின் பெயரில் ஏன் இத்தனை பிரிவுகள்?... என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சி முடிவின் போது TNTJ முத்துப்பேட்டை கிளை - 2 செயலர் ஜனாப். P. அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த கூட்டத்தில் சில தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் பின் வருமாறு:

இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, முரீது போன்ற இணைவைப்பு காரியங்கள் மற்றும் வரதட்சணை,மது போன்ற தீமையான காரியங்களிலிருந்து விலக முஸ்லிம்களுக்கு வழிகாட்டு மாறு இஸ்லாத்தின் அடிப்பையிலான குர்ஆன், ஹதீஸ் மேற்கோள் கட்டி முத்துப்பேட்டை உள்ள அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கும், மார்க்க அறிஞசர்களுக்கும், கடிதம் மூலம் நினைவு படுத்தும் பொது அதை கண்டு கொள்ளாமல் இருப்பதும், அந்த கடிதத்தை கிழித்து வீசுவதும் அறிவுடைமைதானா? என சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து இனிமேலாவது அல்லாஹ்விற்கு பயந்து செயல்படுமாறு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முத்துப்பேட்டை அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளிகூடத்தின் நிர்வாகத்திற்கு மாணவர்களும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து ஒழுக்கம் மற்றும் கண்ணியத்திற்கு முஸ்லிம், மாணவர்கள் முன்மாத்ரியாக திகழவேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முத்துபெப்ட்டை அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக பூரிதி செய்து ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வலப்படுத்துமாறு கல்வி அதிகாரியை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

புதிய பேருந்து நிலையத்தை சிமென்ட் ரோடு போட்டு செம்மை படுத்தி, போதுக்கூட்டத்திடலாக செயல்படுத்துவதை மாற்றி அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் உள்ளே வந்து செல்ல ஆவன செய்யுமாறு இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மூன்று கிலோமீட்டர் வரை நடந்து செல்கின்றனர். இவர்கள் சிரமப்படாமல் இருக்க ஆசாத் நகர் பகுதியிலிருந்தே மீனவர்கள் ஏரி செல்ல வசதியாக உடனே சவுக்கனி ஆற்றை ஆழப்படுத்தி தருமாறு இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

நம் ஊரின் நீர் நிலைகளான குளங்களை குப்பை மேடாகவும் சாக்கடையாகவும் மாறிவருவதை தடுத்து அதை பழையபடி நீர்பிடிப்பு குலங்களாக மாற்றும் படி இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

பாவச் செயல்களை செய்பவர்களுக்கும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஒரே தண்டனைத் தான் என்பதை சனிக்கிழமை வரம்பு மீறிய கூட்டத்தை பற்றி அல்லாஹ் சொல்லவதன் மூலம் அறிய முடிகிறது. தீமையை தடுப்பதில் உறுதியாக இல்லாவிட்டால் நாமும் பாவியாகிவிடுவோம் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏ கிரேடு வரி செலுத்தியும் சி கிறேடைவிட மோசமாக குப்பை சாக்கடையால் நாரிப்போயக்கிடக்கும் தெருக்களை உடனடியாக சுத்தம் செய்து நோய்வராமல் பாதுகாக்குமாறு இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். என்று இவாறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

1 comments:

  1. டி.என்.டி.ஜே. கூட்டத்தில் முதலில் ஆலிமா பேசினார்கள், அதன் பின் அல்தாப் ஹூசைன் பேசினார்கள், இறுதியாக தான் சிறப்பு பேச்சாளர் பேசினார்கள். செய்தியினை மாற்றவும்.

    rafeek

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)