அதிரை பைத்துல்மாலுக்குச் சொந்தமான பல்லாவரம் கட்டிடம் குறுகிய காலத்துக்குள் கிரயம் செலுத்தப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுந்தபோது,வெளிநாடுகளிலுள்ள அதிரையர்களிடமிருந்து நிதிதிரட்டுவதற்காகச் சென்ற குழுவில் மர்ஹூம் C.முஹம்மது இப்ராஹிம் சாச்சா அவர்களும் இடம்பெற்றார்கள்.
பைத்துல்மால் நடத்திய குர்ஆன் மாநாடாகட்டும்,கூட்டுகுர்பானி திட்டமாகட்டும், இன்னும் பிற சேவைகளில், இவர் தன்னார்வலராக இணைந்து இவர்கள் செய்த களப்பணிகள் தற்கால இளைஞர்களே வெட்கப்படுமளவுக்கு பம்பரமாகச் சுழன்று சிறப்பாகச் செயல் பட்டதை அறிந்துள்ளேன்.
பைத்துல்மாலின் மாதாந்திர அமர்வுகளில் தவறாது கலந்துகொண்டு தகுந்த ஆலோசனை வழங்கவும் தவறியதில்லை. பைத்துல்மால் சார்பில் நடக்கும் இலவச திருமணங்களிலும் மணமக்களின் ஹக்கில் தன்பங்கு உதவிகளையும் வழங்கி பலரது துஆவிற்கு அருகதையாகியுள்ளார்கள்.
இவருடன் பழகியதில் இவரின் எளிமையையும்.. அமைதியையும் கண்டு வியந்துள்ளேன். ஹாஜி C.M.முஹம்மது இப்ராஹிம் சாச்சாவின் மவுத்து அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி பைத்துல்மாலுக்கும் நிச்சயம் பெரும் இழப்பு என்றால் மிகையில்லை. எனினும், நிச்சயிக்கப்பட்ட மரணத்திலிருந்து விதிவிலக்கு யாருமில்லை என்ற இறைநியதியை ஏற்று அன்னாருக்காக துஆ செய்வோமாக.அல்லாஹ் அவர்களது நல்லறங்களைப் பொருந்திக்கொண்டு நற்கூலியை வழங்குவானாக. ஆமின்.
0 comments:
Post a Comment